search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருங்குடல் புற்றுநோய்"

    • உறுப்புகளை பாதிக்க செய்து மரணத்திற்கு வித்திடுகிறது.
    • இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

    புற்றுநோய் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கொடிய நோயாக உருவெடுத்திருக்கிறது. உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கச்செய்து மரணத்திற்கு வித்திடுகிறது. உலகெங்கும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    வாழ்க்கை முறையும், உணவுப்பழக்கங் களும்தான் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. புற்றுநோய் அபாயத்தை குறைப்பது குறித்தும், தடுப்பது பற்றியும் ஆராய்வதற்கு உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியமும், அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து 2018-ம் ஆண்டில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு 94 ஆயிரத்து 778 பேரிடம் இருந்து தகவல்களை திரட்டியது. அவர்களின் உடல் எடை, உயரம், இடுப்பு சுற்றளவு, உணவுப்பழக்கம், உடல் இயக்கம் சார்ந்த விஷயங்களை மதிப்பிட்டு மதிப்பெண் வழங்கியது.

    தினமும் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு, அதனை அவர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கணக்கிட்டு அந்த மதிப்பெண்கள் மதிப்பிடப்பட்டன. முழுமையாக கடைப்பிடித்தவர்களுக்கு ஒரு புள்ளியும், பாதியளவு கடைப்பிடித்தவர்களுக்கு அரை புள்ளியும் வழங்கப்பட்டன. சரியாக கடைப்பிடிக்காதவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

    ஆய்வின் முடிவில் 7,296 பேர் அதாவது 8 சதவீதம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது கண்டறியப்பட்டது. அதில் அதிகம் பேர் மார்பகம், பரோஸ்டேட், பெருங்குடல் புற்று நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். ஆய்வுக்குழுவினர் கூறிய பரிந்துரைகளை முறையாக பின்பற்றாததுதான் இதற்கு காரணம்.

    4.5 முதல் 7 புள்ளிகள் வரை பெற்றவர்களுக்கு 3.5 புள்ளிகளை பெற்றவர்களை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவு என்பதை கண்டறிந்துள்ளனர். அதேபோல் 3.75 முதல் 4.25 புள்ளிகளுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் 8 சதவீதம் குறைவாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஒவ்வொரு புள்ளி அதிகரிப்பும் அனைத்து புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை7 சதவீதம் குறைக்கிறது. அதிலும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. சிறுநீரகம், உணவுக்குழாய், கருப்பை, கல்லீரல் மற்றும் பித்தப்பை புற்றுநோய்க்கான ஆபத்துக்களும் குறைகிறது என்ற முடிவுக்கு ஆய்வு குழுவினர் வந்துள்ளனர்.

    உடல் எடையை சீராக பராமரித்து ஆரோக்கியமான உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பின்னணியில் உடல் பருமன் புற்றுநோய்க்கு காரணமாக அமைந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புற்றுநோயை தடுக்க வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது உடல் ரீதியாக சுறு சுறுப்பாக இயங்க வேண்டும் என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு களை தவிர்ப்பது, சிவப்பு இறைச்சி வகைகளை வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் உண்ணாமல் இருப்பது, முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது, அதிக சூரிய ஒளி உடலில் படுவதை தவிர்ப்பது போன்றவற்றை அலட்சியம் செய்யாமல் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதற்கு ஆய்வுக்குழுவினர் 7 பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அவற்றை பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய் வருவதை குறைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இதுதொடர்பான விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். அவர்கள் பரிந் துரைத்த 7 விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    உடல் எடையை சீராக பராமரியுங்கள்.

    உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

    சிறந்த, சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.

    அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், பானங்களை தவிருங்கள்.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி வகைகளை குறைவாக உட்கொள்ளுங்கள்.

    சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் பருகாதீர்கள்.

    மது அருந்தாதீர்கள்.

    • பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் அபாயகரமானது.
    • புற்றுநோய் முதலில் அறிகுறிகளை காட்டுவது இல்லை.

    உலக அளவில் புற்றுநோய் மரணங்களில் பெருங்குடல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மனித உடலில் பெருங்குடலானது உணவை உறுஞ்சி கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் உறுப்பாக உள்ளது. பொதுவாக பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் தோன்றினால் முதலில் எந்தவிதமான அறிகுறிகளும் தோன்றாது. இருந்தாலும் வலி ஏற்படும்போது கட்டாயம் மருத்துவ நிபுணரை சந்திப்பது அவசியம். இதில் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் அபாயகரமானது.

    இந்த வகை புற்றுநோய் முதலில் அறிகுறிகளை காட்டுவது இல்லை. இருந்தாலும் மலக்குடலில் இருந்து ரத்தபோக்கு அல்லது மலத்தில் ரத்தம் ஏற்பட்டால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் ரத்தசோகை காரணமாக சிலருக்கு மலக்குடலில் ரத்தபோக்கு இருக்காது. இவர்களுக்கு சோர்வு அல்லது வெளிர்நிறத்தில் தோலின் நிறம் மாறும்.

    அதேபோல் வயிற்றில் கடுமையான வலி வருவது புற்றுநோயின் அறிகுறியாகும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பலவீனம், சோர்வு, வயிற்றில் வீக்கம், எதிர்பாராத எடையிழப்பு போன்ற அறிகுறிகள் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளாகும். பெருங்குடலில் புற்றுநோயானது பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    உலகில் பெருங்குடல் புற்றுநோய்தான் புற்றுநோய் இறப்புகளில் 2-வது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பாதிப்பாக உள்ளது. சிகரெட் புகைப்பது, தினமும் மது அருந்துவது, அதிக எடை, வழக்கமான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவைகள் இந்த புற்றுநோய் வருவதை அதிகரிக்க கூடிய காரணிகளாகும். எனவே பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க 45 வயதுக்கு பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சியை தினமும் செய்யவேண்டும். உடலில் சரியான எடையை பராமரிக்க வேண்டும். உணவில் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்ணுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ×