search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோ கைப்பந்து போட்டி"

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற புரோ கைப்பந்து 2-வது கட்ட போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. #ProVolleyball
    சென்னை:

    6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை) எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தோடு களம் புகுந்த சென்னை அணி தடுமாறியது. முதல் 3 செட்டுகளையும் வரிசையாக கோட்டை விட்ட சென்னை அணி கடைசி இரு செட்டை மட்டும் வசப்படுத்தி ஆறுதல் அளித்தது. முடிவில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 14-15, 8-15, 10-15, 15-10, 15-10 என்ற செட் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.

    4-வது லீக்கில் ஆடிய சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அதே சமயம் 3 தோல்விகளுக்கு பிறகு மும்பை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, ஆமதாபாத் டிபென்டர்சை சந்திக்கிறது. இது தான் சென்னை அணிக்கு கடைசி லீக் ஆகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். தோற்றால் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை. #ProVolleyball
    கொச்சியில் நேற்றிரவு நடந்த புரோ கைப்பந்து போட்டி 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. #ProVolleyballLeague
    கொச்சி:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும்.

    இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு அரங்கேறிய 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி, மும்பா வாலியை எதிர்கொண்டது. திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. கோழிக்கோடு அணியில் அதிகபட்சமாக அஜித் லால் 16 புள்ளிகள் சேகரித்தார். கோழிக்கோடு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தனது முதல் லீக்கில் சென்னை அணியை தோற்கடித்து இருந்தது.

    இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ்- ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ProVolleyballLeague

    கொச்சியில் நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி, ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
    கொச்சி:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி 2 செட்களை தன்வசப்பத்தியது. இதனால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது செட்டில் அனல் பறந்தது. முடிவில் ஐதராபாத் அணி 15-11, 13-15, 15-11, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணி, திபேஷ் சின்ஹா தலைமையிலான யு மும்பா வாலி (மும்பை) அணியை எதிர்கொள்கிறது. கோழிக்கோடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
    ×