search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய சாலை"

    • ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
    • சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஊட்டி

    குன்னூர் நகராட்சி 28-வது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி மற்றும் நகர மன்ற துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன் நகர துணை செயலாளர் முருகேஷ், கிளை செயலாளர் லியாகத் அலி, பழனி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சையது மன்சூர் நன்றி கூறினார்.

    • சிவகிரி அருகே தென்மலை ஊராட்சி வடக்குத் தெருவில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் சிவகிரி அருகே தென்மலை ஊராட்சி வடக்குத் தெருவில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    யூனியன் சேர்மனும் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி முருகன் சாமிநாதன், கிளை செயலாளர்கள் குருசாமி, கோபால், தேவபிச்சை, அருகன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் முத்துராமன், துணைத்தலைவர் பாலு, ஆசிரியர் கிரகதுரை, பெயிண்டர் வனராஜ், தென்மலை வெள்ளகணேஷ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொன்னேரி, மீஞ்சூர் நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்பு உள்ளது.
    • புதிய சாலை திட்டப் பணிகளை 2025, ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    பொன்னேரி:

    எண்ணுார் துறைமுகம் மற்றும் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், சென்னை நகரப் பகுதிக்குள் நுழையும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வர்த்தக வாகனங்களும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எண்ணுார் துறை முகத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை எல்லை சாலை திட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி, தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்பதுார், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரத்தில் முடியும் வகையில், புதிய சாலைத் திட்டம், 132.8 கி மீ., தூரத்திற்கு, 5 பிரிவுகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    முதல் கட்டமாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து, சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூரில் முடியும் வகையில், 25.40 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    ஜப்பான் நிறுவனத்தின் நிதியுதவியுடன், மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. முதல் பிரிவு சாலை, எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி, காட்டுப்பள்ளி, கல்பாக்கம், நாலுார், வன்னிப்பாக்கம், நெடுவரம்பாக்கம், பஞ்செட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று, தச்சூரில் முடிகிறது. இதற்காக, 605 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

    தற்போது செயல்பாட்டில் உள்ள, மீஞ்சூர்- வண்டலூர் வெளி வட்ட சாலையில் இருந்து, இணைப்பு சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, சென்னை எல்லை சாலையுடன் இணைக்கப்பட உள்ளது.

    மீஞ்சூர்- அனுப்பம்பட்டு இடையே, ரெயில்வே மேம்பாலம் ஒன்றும், மீஞ்சூர்- காட்டூர், மீஞ்சூர் -பொன்னேரி உட்பட 7 இடங்களில் மேம்பாலங்களும் கட்டப்பட உள்ளன.

    வாயலுார், அக்கரம்பேடு, மேட்டுப்பாளையம், ஆமூர், பஞ்சட்டி ஆகிய இடங்களில், சிறிய மேம்பாலங்களும் கட்டப்பட இருக்கிறது.

    மேலும் சாலையின் இருபுறமும் மழை நீர் கால்வாய்கள், மைய தடுப்புகள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எல்லைகளை வரையறுக்கும் வகையில், சிவப்பு கொடி கட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை அமையும் இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, நிலங்களை சமன்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது, பாலங்கள் அமையும் இடங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    புதிய சாலை திட்டப் பணிகளை 2025, ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம், சென்னை நகரில் மட்டுமின்றி, பொன்னேரி, மீஞ்சூர் நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த சாலைக்காக, 1,266 பேரிடம் இருந்து, 605 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த சாலைப் பணி திட்ட மிட்டப்படி, 3 ஆண்டிற்குள் முடிக்கப்படும். இதன் மூலம், மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். அடுத்தடுத்த பிரிவுகளின் பணிகள் முடியும்போது, சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்" என்றார்.

    • தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
    • 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சி கரட்டுவலசு பகுதியில் கூடுதல் இயக்குநர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை) சரவணன் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கரட்டுவலசு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டுவலசு சாலை வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும்,

    காந்தி நகர் காலனியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக கலெக்டர் சாலை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மைலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சிவானந்தம், பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிமுத்து, சாந்தி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×