search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
    X

    பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிவகிரி அருகே புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

    • சிவகிரி அருகே தென்மலை ஊராட்சி வடக்குத் தெருவில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் சிவகிரி அருகே தென்மலை ஊராட்சி வடக்குத் தெருவில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    யூனியன் சேர்மனும் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி முருகன் சாமிநாதன், கிளை செயலாளர்கள் குருசாமி, கோபால், தேவபிச்சை, அருகன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் முத்துராமன், துணைத்தலைவர் பாலு, ஆசிரியர் கிரகதுரை, பெயிண்டர் வனராஜ், தென்மலை வெள்ளகணேஷ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×