search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய சாலை"

    • மதுரை கிழக்கு தொகுதியில் 78 புதிய சாலை அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.
    • இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 1-வது மண்டல அலுவல கத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா,மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மாநக ராட்சி ஆணையாளர் மதுபாலன், உதவி கலெக்டர் சவுந்தர்யா, மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதி வாளர் குருமூர்த்தி, அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ. டாக்டர் சரவணன், டி.ஆர்.ஓ. சக்திவேல், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர்கள் ரோகினி பொம்மத்தேவன், செல்வ கணபதி, ராமமூர்த்தி, பால் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவதே இந்த அரசின் தலையாய கடமையாக இருக்கிறது. இந்த தொகுதியில் ஒரு கோடியே ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக 78 சாலைகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாள்களில் நடை பெறும். விடுபட்ட பகுதிகளில் 200 மீட்டர் பாதாள சாக்கடை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.

    எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் மக்கள் திட்டங்களை நிறைவேற்று வதில் மிகுந்த அக்கறை உள்ள அரசாக முதல்வர் மு. க. ஸ்டாலினின் அரசு இருக்கிறது.

    மேலமடை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப் பட்டு புதிய சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கிழக்கு தொகுதியில் உள்ள 7 கண்மாய்களில் நடை பாதை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த பணிகளும் நடைபெற உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மக்களின் தேவையை அறிந்து பணி செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு தி.மு.க. பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், பகுதி செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்றார்.
    • மணிவாசகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், இடையஞ்சாவடி ஊராட்சியில், புதிய சாலை அமைக்கும் பணிக்கான இடத்தினை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடையஞ்சாவடி ஊராட்சி, வி.ஐ.பி நகரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் 850 மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் சாலை அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்றார். ஆய்வின்போது, வானூர் வருவாய் தாசில்தார் நாராயணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மானாசாலை-தேளி இடையே புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
    • முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாசாலை - தேளி இடையிலான சுமார் 3.8 கிலோ மீட்டர் தொலை விற்கு நெடுஞ்சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.6.21 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    மானாசாலை-தேளி இடையிலான தரம் உயர்த்தும் வகையில் போடப்படவுள்ள இந்த புதிய சாலைப்பணியால் வீரசோழன், மானாசாலை, தேளி, கொட்டகாட்சி யேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவார். பொதுமக்கள் வீரசோழன் பகுதிக்கும், வீரசோழன் பகுதியிலுள்ள பொது மக்கள் மானாமதுரை பகுதிக்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருஞ்சிறை ெரயில்வே கேட் வழியாக சுற்றி சென்று மானாமதுரைக்கு செல்வது தடுக்கப்பட்டு எளிதாக சென்று சேரும் வகையில் இந்த புதிய சாலை அமைய உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்ப தோடு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பொதுமக்கள் தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

    இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் காளீஸ்வரி சமயவேலு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சிங்கராசு, டி.வேலங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • சாலை சீரமைக்கப்படாமல் இருந்ததால் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    • புதிய சாலை பணிக்கு ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் யூனியன் திருமலையப்பபுரம் ஊராட்சி விலக்கு பகுதியிலிருந்து கோவிந்தபேரி செல்லும் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் தார் சாலை அமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் மேல் ஆகிறது. இந்த சாலை பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் பள்ளங்களாக காணப் பட்டது.

    இதனால் பல கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதனையடுத்து கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டது.

    இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருமலை யப்பபுரம் -கோவிந்தபேரி செல்லும் புதிய சாலை பணிக்கு ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ரவணசமுத்திரம் இமாம் காஜா மைதீன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப், திருமலையப்பபுரம் மாரியப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ரவணசமுத்திரம் ராமலட்சுமி, மந்தியூர் ராகவேந்திரன், கோவிந்தபேரி இசேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மணி கண்டன், வார்டு உறுப்பி னர்கள் முகமது யக்யா, ஜமீலா மற்றும் சிவா, சிங்க குட்டி, மந்தியூர் முருகன், சமூக ஆர்வலர் நாகூர் மீரான், செந்தில், வெள்ளத்துரை, அரசு, ரவி , பேச்சி அண்ணாதுரை , காளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட கோவளம் மற்றும் ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சத்து 25 ஆயிரம் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்தப் பணியின் தொடக்க விழா இன்று காலை நடந்தது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் தாமரைபாரதி, கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், ஊராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சங்கர், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், ஒன்றிய பொறியாளர் ஹெலன், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதா பாஸ்கர், ரமேஷ், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.]

    • பேவர் பிளாக்சாலை அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் நாராயணன் நகர் ஜாஸ்மின் தெருவில் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் கஜா என்கிற கஜேந்திரன் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக்சாலை அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் எம்.கஜா என்கிற கஜேந்திரன் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 45 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஒன்றரை கிலோ மீட்டர் இரண்டு அடுக்கு தார்சாலை அமைக்கப்படுகிறது.
    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இரண்டு பணிகளையும் துவக்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் திப்பனப்பள்ளி ஊராட்சி கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை முதல், திப்பனப்பள்ளி வழியாக கோடியூர் கிராமத்திற்கு, 45 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஒன்றரை கிலோ மீட்டர் இரண்டு அடுக்கு தார்சாலை அமைக்கப்படுகிறது.

    அதே போல், தாசரப்பள்ளி சாலை முதல் திப்பனப்பள்ளி வரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒன்றேகால் கிலோ மீட்டர் தார்சாலை என மொத்தம், 90 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இரண்டு பணிகளையும் நேற்று துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவர் அம்சாராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் மகேந்திரன், ஜெயராமன், வங்கித் தலைவர் தாபா வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், முன்னாள் தலைவர் தீர்த்தகிரி, கிளைச் செயலாளர்கள் ராமன், சத்தியசீலன், வேடியப்பன், வங்கி துணைத் தலைவர் ரமேஷ், வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது.
    • 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில் போடப்பட்ட புதிய சாலை, பொது மக்களின் புகாரையடுத்து, ஆய்வு செய்த தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், தரம் இல்லையென புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில், அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி அரசு பாட்கோ நிறுவனம் மூலம், சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

    இரவோடு இரவாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, சாலையின் பல பகுதிகள் பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாக.தியாகராஜன், எம்.எல்.ஏ. பொதுமக்கள் முன்னிலையில், புதிய சாலையை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில், 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. என்றார்.

    அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் 4 செ.மீ. இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், மேலும் கோபம் அடைந்த எம்.எல்.ஏ., தனது உதவியாளரை வரவழைத்து, அரையடி ஸ்கேல் ஒன்றை வாங்கி, சாலையின் தரத்தை, அதாவது 2 செ.மீ. இருப்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறி, முறையாக 4 செ.மீ தரம் கொண்ட சாலையை போடவில்லையென்றால், சாலைக்கான ஒப்பந்த தொகை வழங்க விடமாட்டேன் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பூமி பூஜை நடந்தது
    • ரூ.18.85 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது

    ஜோலார்பேட்டை:

    முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.18.85 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூர் சாலை வழியாக மண்டலவாடி காமராஜ் நகர் முதல் கலந்தரா கூட்டுரோடு வரை வரை 1 கிலோமீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கே. ஜி. சரவணன், க.உமா கன்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் எம். மகேந்திரன் வரவேற்றார்.

    இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை நேற்று துவக்கி வைத்தார்.

    பொதுமக்களின் 10 ஆண்டுகால கோரிக்கைக்கு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டதால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ராஜபாளையத்தில் புதிய சாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.

    ராஜபாளையம்

    சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்வை ராஜபா ளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    ராஜபாளையம் சொக்கர் கோவில் முதல் நேரு சிலை வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.

    தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டபோதும் தற்போது குண்டும் குழியு மாக காணப்படுகிறது இத னால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே புதிய சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

    அப்போது, அந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை யிடம் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்தி சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலா ளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.

    • கோவிந்தபேரி நடுத்தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    • புதிய சிமெண்ட் சாலையை ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில், நடுத்தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 17.48 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார்.

    விழாவில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர் இளவரசி பார்த்திப கண்ணன், பொன்னுத்தாய் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன் மாணிக்கம், மக்கள் நலப்பணியாளர் கிருஷ்ணன், மாரித்துரை, குமார், தங்கசாமி பாண்டியன், தங்க தேவர், வெள்ளத்துரை பாண்டியன், சுப்பையா பாண்டியன், என்.எஸ். மணியன், காளிமுத்து, முப்புடாதி கணேசன், சப்ரி, சாமுவேல், அந்தோணி, பிரியா, அன்னம்மான், தேன்மொழி, இசக்கியம்மாள், ராணி லெட்சுமி, சத்யா, ஊராட்சி செயலர் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
    • சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஊட்டி

    குன்னூர் நகராட்சி 28-வது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி மற்றும் நகர மன்ற துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன் நகர துணை செயலாளர் முருகேஷ், கிளை செயலாளர் லியாகத் அலி, பழனி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சையது மன்சூர் நன்றி கூறினார்.

    ×