search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமோஸ் ஏவுகணை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7400 டன் எடையுள்ள ஐ.என்.எஸ். போர்கப்பல் 164 மீட்டர் நீளம் கொண்டது
    • பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு அதிக வேகம் செல்ல கூடியவை

    இந்திய கடற்படைக்கு சொந்தமானது ஐ.என்.எஸ். இம்பால் (INS Imphal) போர் கப்பல். உலகின் நவீன போர் கப்பல்களில் ஒன்றான இது, கைடட் மிஸைல் டெஸ்ட்ராயர் (guided missile destroyer) எனும் வகையை சேர்ந்தது.

    மணிக்கு சுமார் 56 கிலோமீட்டர் தூரம் பயணிக்க கூடிய இக்கப்பல், 164 மீட்டர் நீளம் கொண்டது. சுமார் 7400 டன் எடை கொண்ட இம்பால் போர் கப்பலில் இருந்து தரையிலிருந்து தரைக்கு செல்லும் ஏவுகணைகளை செலுத்த முடியும்.

    இக்கப்பலை இவ்வருட இறுதியிலோ அல்லது 2024 தொடக்கத்திலோ நாட்டின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்க இந்திய கப்பற்படை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்கப்பலின் திறன் குறித்து பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    அதில் ஒன்றாக இன்று, அக்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை (BrahMos missile) செலுத்தும் பரிசோதனை முயற்சி நடத்தப்பட்டது.

    இந்த முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய கடற்படையின் மேற்கு பகுதி ஆணையம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

    கடந்த 2001 ஜூன் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, 2005ல் இருந்து இந்திய ராணுவத்தின் வான்வழி தாக்குதலுக்கான செயல்பாட்டில் உள்ளது. இந்த ஏவுகணை இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ரஷிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிக வேகத்தில் பயணித்து, 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.

    • பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குள் தவறுதலாக விழுந்தது.
    • இந்த விவகாரத்தில் 3 விமானப்படை அதிகாரிகள் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    புதுடெல்லி:

    பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது நம் அண்டை நாடான பாகிஸ்தானில் விழுந்தது. இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்துக்கு அந்நாடு கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே, இந்த ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டது. அது ஒரு விபத்து. உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட 3 விமானப்படை அதிகாரிகள் பதவி பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள என்ஜீனியரை உ.பி பயங்கரவாத தடுப்பு பிரிவு 3 நாள் காவலில் எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    லக்னோ :

    மராடிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தது.

    பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய தனிப்பட்ட லேப்-டாப்பில் அதிகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அவர் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என தெரியவந்துள்ளது.

    மராட்டிய மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்த் அகர்வாலை காவலில் அனுப்ப உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தொடர்பாக முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து நிஷாந்த் அகர்வாலை 3 நாட்களில் காவலில் எடுக்க உத்தரபிரதேச பயங்கரவாத பிரிவுக்கு அனுமதி வழங்கியது.

    நேகா சர்மா மற்றும் பூஜா ராஜன் என்ற பெயர்களிலான பேஸ்புக் கணக்குகளுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த கணக்குகள் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இவை பாகிஸ்தான் உளவுத்துறையால் இயக்கப்பட்டு உள்ளது என சந்தேகிக்கிறோம் என விசாரணை பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆசைவார்த்தையில் சிக்கி உளவு பார்த்த ராணுவ வீரர் ஒருவர் செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பெண்கள் பெயரிலான போலியான பேஸ்புக் கணக்குகளை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு சோதனையிட்டது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் கணக்குகள் இந்தியாவின் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களுடன் தொடர்பு உள்ளது தொடர்பாக கண்காணித்தது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    ×