என் மலர்
நீங்கள் தேடியது "BrahMos missile"
- பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம்.
- பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், இன்று லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி பிரிவை காணொளி வாயிலாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்தையே இந்திய ராணுவம் தாக்கியது.
பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம். பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும். இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்" என்று தெரிவித்தார்.
- 400 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- கப்பலில் உள்ள இலக்கை ஏவுகணை தாக்கியதாகஇந்திய விமானப் படை தகவல்.
பாதுகாப்பு பணியில் இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் இணைந்து செயல்படும் வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை இன்று வங்காள விரிகுடா பகுதியில் நடைபெற்றது.
சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை கப்பலில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இந்த ஏவுகணை சோதனை உதவியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
- 7400 டன் எடையுள்ள ஐ.என்.எஸ். போர்கப்பல் 164 மீட்டர் நீளம் கொண்டது
- பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு அதிக வேகம் செல்ல கூடியவை
இந்திய கடற்படைக்கு சொந்தமானது ஐ.என்.எஸ். இம்பால் (INS Imphal) போர் கப்பல். உலகின் நவீன போர் கப்பல்களில் ஒன்றான இது, கைடட் மிஸைல் டெஸ்ட்ராயர் (guided missile destroyer) எனும் வகையை சேர்ந்தது.
மணிக்கு சுமார் 56 கிலோமீட்டர் தூரம் பயணிக்க கூடிய இக்கப்பல், 164 மீட்டர் நீளம் கொண்டது. சுமார் 7400 டன் எடை கொண்ட இம்பால் போர் கப்பலில் இருந்து தரையிலிருந்து தரைக்கு செல்லும் ஏவுகணைகளை செலுத்த முடியும்.
இக்கப்பலை இவ்வருட இறுதியிலோ அல்லது 2024 தொடக்கத்திலோ நாட்டின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்க இந்திய கப்பற்படை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்கப்பலின் திறன் குறித்து பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
அதில் ஒன்றாக இன்று, அக்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை (BrahMos missile) செலுத்தும் பரிசோதனை முயற்சி நடத்தப்பட்டது.
இந்த முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய கடற்படையின் மேற்கு பகுதி ஆணையம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.
கடந்த 2001 ஜூன் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, 2005ல் இருந்து இந்திய ராணுவத்தின் வான்வழி தாக்குதலுக்கான செயல்பாட்டில் உள்ளது. இந்த ஏவுகணை இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ரஷிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிக வேகத்தில் பயணித்து, 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.
- இரட்டை செயல்பாட்டு திறனுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கம்.
- இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என தகவல்
நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
ரூபாய் 1700 கோடி மதிப்பீட்டில் நிலத்தில் செயல்படக் கூடியதாகவும், கப்பல் மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், இந்த புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
இரட்டை செயல்பாட்டு திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குள் தவறுதலாக விழுந்தது.
- இந்த விவகாரத்தில் 3 விமானப்படை அதிகாரிகள் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது நம் அண்டை நாடான பாகிஸ்தானில் விழுந்தது. இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்துக்கு அந்நாடு கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்த ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டது. அது ஒரு விபத்து. உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட 3 விமானப்படை அதிகாரிகள் பதவி பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது, இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் வெய் டோங்சு தெரிவித்தார்.






