search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்கு தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்
    X

    பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தம்

    பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்கு தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்

    • இரட்டை செயல்பாட்டு திறனுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கம்.
    • இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என தகவல்

    நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

    ரூபாய் 1700 கோடி மதிப்பீட்டில் நிலத்தில் செயல்படக் கூடியதாகவும், கப்பல் மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், இந்த புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

    இரட்டை செயல்பாட்டு திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×