என் மலர்
நீங்கள் தேடியது "பிரம்மோஸ் ஏவுகணை"
- பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம்.
- பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், இன்று லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி பிரிவை காணொளி வாயிலாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்தையே இந்திய ராணுவம் தாக்கியது.
பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம். பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும். இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்" என்று தெரிவித்தார்.
- 400 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- கப்பலில் உள்ள இலக்கை ஏவுகணை தாக்கியதாகஇந்திய விமானப் படை தகவல்.
பாதுகாப்பு பணியில் இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் இணைந்து செயல்படும் வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை இன்று வங்காள விரிகுடா பகுதியில் நடைபெற்றது.
சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை கப்பலில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இந்த ஏவுகணை சோதனை உதவியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
- இரட்டை செயல்பாட்டு திறனுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கம்.
- இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என தகவல்
நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
ரூபாய் 1700 கோடி மதிப்பீட்டில் நிலத்தில் செயல்படக் கூடியதாகவும், கப்பல் மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், இந்த புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
இரட்டை செயல்பாட்டு திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






