என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pakistan isi
நீங்கள் தேடியது "Pakistan ISI"
பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் (DRDO) எஞ்சினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். #BrahMos #DRDO
மும்பை:
ரஷியா மற்றும் இந்தியா இணைந்து கூட்டு தொழில்நுட்பத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஏவுகணையை தயாரிக்கும் மையம் உள்ளது.
இந்நிலையில், ஏவுகணை தொழில்நுட்பட்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பில் பணியாற்றும் (DRDO) எஞ்சினீயர் நிஷாந்த் அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிஷாந்த் அகர்வால் தற்போது விசாரணையில் உள்ளதாகவும், எந்த அளவு தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை விசாரித்து வருவதாக ராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு கள்ள நோட்டுகளை பயன்படுத்த மதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை பெற்று வருவதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
புதுடெல்லி:
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி பயங்கரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாகவும் மத்திய அரசின் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பு இந்திய அரசின் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏஜெண்ட்கள் மூலம் வாங்கிக்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை அவர்கள் மூலம் விநியோகம் செய்வது தெரியவந்துள்ளது.
இந்த கள்ள ரூபாய் நோட்டுகள் ரூ,500 ரூ 2000 மற்றும் 50 ரூபாய் என அச்சடிக்கப்பட்டு டி-கம்பெனி முகவர்களின் உதவியுடன் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள முகவர்கள் இந்த அமைப்பிற்கு உதவி செய்தாக கூறியுள்ளது.
உளவுத்துறை அமைப்புகள் ஏற்கனவே கடத்தப்பட்டுள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஈடுபட்டு வருகிறது.
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி பயங்கரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாகவும் மத்திய அரசின் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பு இந்திய அரசின் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏஜெண்ட்கள் மூலம் வாங்கிக்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை அவர்கள் மூலம் விநியோகம் செய்வது தெரியவந்துள்ளது.
இந்த கள்ள ரூபாய் நோட்டுகள் ரூ,500 ரூ 2000 மற்றும் 50 ரூபாய் என அச்சடிக்கப்பட்டு டி-கம்பெனி முகவர்களின் உதவியுடன் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள முகவர்கள் இந்த அமைப்பிற்கு உதவி செய்தாக கூறியுள்ளது.
உளவுத்துறை அமைப்புகள் ஏற்கனவே கடத்தப்பட்டுள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஈடுபட்டு வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X