search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாய்ச்சல்"

    ஒரே குடும்பத்தின் புகழ் பாட முயற்சித்ததில், நாட்டுக்கு உழைத்த பிற தலைவர்களின் உழைப்புக்கு முக்கியத்துவம் தராமல் போவதா என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் சாடினார். #Modi
    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச மாநிலம் மோகன்புராவில், கட்டப்பட்டு உள்ள ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான மோகன்புரா அணையை அங்கு நேற்று நடந்த விழாவில் மாநிலத்துக்கு அர்ப்பணித்து வைத்தார். மேலும், 3 நீர்ப்பாசன திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும் பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது, “இந்த திட்டங்களுடன் தொடர்பு உடைய ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த திட்டங்களின் உண்மையான தொடக்க விழா என்பது உங்களின் உழைப்பாலும், வியர்வையாலும் செய்யப்பட்டது ஆகும்” என்று குறிப்பிட்டார்.



    பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்து பேசுகையில், “டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் எண்ணங்கள் கல்வி, நிதி, வளர்ச்சி ஆகியவற்றில் சங்கமித்து இருந்தன. அவர் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு குறித்து ஓங்கிக் குரல் கொடுத்தார். அவரது பார்வை தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது” என புகழாரம் சூட்டினார்.

    அதே நேரத்தில் நாட்டில் உள்ளவர்கள் ஒரே குடும்பத்தின் (சோனியா காந்தியின்) புகழ் பாட முயற்சிகள் மேற்கொண்டபோது, நாட்டுக்கு உழைத்த பிற உயர்ந்த தலைவர்களின் பங்களிப்புக்கு உரிய முக்கியத்துவம் தராமல் போய்விட்டது துரதிர்ஷ்டவசமானது என்று சாடினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசு வெற்றிகரமாக 4 ஆண்டுகளைக் கடந்து உள்ளது. இந்த மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி, சியாம பிரசாத் முகர்ஜியின் பார்வையுடன் இணைந்தது ஆகும். ஆனால் சிலர் தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் உண்மையான கள நிலவரத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். இங்கு நீங்கள் இவ்வளவு பேர் கூடி இருப்பதே அதற்கு சாட்சி.

    மக்கள் நல திட்டங்கள், மக்களை போய்ச்சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. முன்பு இருந்த அரசுகள் (காங்கிரஸ் அரசுகள்) இவற்றை செய்து முடித்து இருக்கலாம். அவர்களை யாரும் தடுத்து நிறுத்தியது கிடையாது.

    ஆனால் நாட்டை மிக நீண்ட காலம் ஆண்ட கட்சி (காங்கிரஸ்) உங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் எங்கள் அரசு மக்கள் மீதும், வளர்ச்சியின்மீதும் நம்பிக்கை வைத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தி.மு.க.வில் இருந்து முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்ட குஷ்புவின் நடிப்பு காங்கிரஸ் கட்சியில் எடுபடாது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukarasar #Kushboo #Congress
    சென்னை:

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்வதில் தவறு கிடையாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எந்த கட்சியுடனும் ஆயுட்கால கூட்டணி வைக்க முடியாது. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ?. அதன்படி நாம் கூட்டணியை அமைக்கிறோம். தற்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருகிறது.

    நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?. பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    உண்மைக்கு மாறான தகவல்களை எப்படி அவர் கூறலாம். அதற்கான தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது?. தலைமை இவரிடம் கருத்து கேட்டதா?. இதுபோன்ற பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

    குஷ்பு ஒரு நடிகை. படங்களில் அவர் எந்த வேடத்திலும் நடிக்கலாம். ஆனால் காங்கிரசில் அவர் நடிப்பு எடுபடாது. தி.மு.க.வில் இருந்தபோது நீங்கள் ஏன் வெளியேற்றப்பட்டீர்கள் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும். முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலவசமாக அவர் பிரசாரம் செய்யவில்லை. ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு தான் பிரசாரம் செய்தார். பிறகு குளுகுளு அறையில் போய் படுத்துக்கொண்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்ய அந்த தலைவர் அழைத்தபோது, அதிக பணம் கேட்டார். இத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தி.மு.க.வில் நடந்தது போல், காங்கிரஸ் கட்சியிலும் முட்டை வீச்சு, செருப்பு வீச்சு நடத்தப்படும் நிலை ஏற்படும். அந்த நிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நான் எம்.ஜி.ஆர்., வாஜ்பாய், ராகுல்காந்தி ஆகியோருடன் பழகியவன். அரசியல் பயின்றவன்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபிறகு எத்தனை முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறீர்கள். காசு வாங்காமல் கட்சி பணி ஆற்றியது உண்டா?. நான் ஜெயலலிதாவையே பார்த்தவன், குஷ்பு எம்மாத்திரம். தி.மு.க.வில் அவர் பேச்சாளராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது தான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறிய கருத்துகள் தி.மு.க.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதை தமிழக மக்களும், தி.மு.க.வினரும் மறக்கவில்லை.

    2 மாதத்தில் என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கி விடுவதாக கூறுகிறார். முடியுமா?. அப்படி என்னை பதவியில் இருந்து தூக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய அவர் தயாரா?. சொன்னது நிறைவேறவில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா?. வேண்டாத வேலைகளை, கயிறு திரிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thirunavukarasar #Kushboo #Congress 
    ×