என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயணி"
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கி பாராட்டு
- ஆட்டோ டிரைவர் சரவணன் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர்
நாகர்கோவில்:
நாகர்கோவில், பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.
இவர் நாகர்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 28-ந் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்க செயின் ஒன்று கிடந்தது. இதை பார்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.சாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சரவணன் ஆட்டோவில் நகையைதவற விட்டது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குமரி மாவட்டம் வில்லுகுறி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது சரவணன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் பிரமோத் 2 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரமோத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்த பிரமோத் நகையின் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் 2 பவுன் நகை ஒப்படைத்தனர். நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழங்கினார். ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு பவுன் நகையை எடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் மட்டுமின்றி சக ஆட்டோ டிரைவர்களும் பாராட்டினார்கள்.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.
நாகர்கோவில்:
குழித்துறை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 52).
இவர், சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து லூக்காஸ் ஊருக்கு புறப் பட்டார். நேற்று மாலை சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.
இன்று காலை கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து லூக்காஸ் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் குழித்துறை செல்வதற்காக மற்றொரு ரெயிலில் ஏற பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது லூக்காஸ் பிளாட்பாரத்தில் திடீ ரென சுருண்டு விழுந்தார். இதை பார்த்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடி யாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பின்னர் லூக்காசை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லூக்காஸ் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக கொண்டு செல்லப்பட்டது. லூக்காஸ் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லாட்ஜில் தங்கியிருந்த சுற்றுலா பயணி இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மேற்குவங்கம் முர்ஜிதாபாத்தை சேர்ந்தவர் அமலன் பதன் பதோ பாய். இவர் சிலருடன் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு பெருமாள் தெப்பம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு 8 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்கிறது.
- 4:30க்கு ஜோலார்பேட்டையில் தான் நிறுத்தப்படுகிறது.
திருப்பூர்
மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மொரப்பூரில் நின்று செல்ல அறிவுறுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமும் மாலை 4:20மணிக்கு சென்னையில் புறப்படும் மங்களூரு எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 7:10 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக மாலை 4:55க்கு மங்களூரில் புறப்படும் ெரயில் மறுநாள் காலை 8:05 க்கு சென்னை செல்கிறது.சென்னையில் இருந்து மங்களூருக்கு (12685) செல்லும் போது, ஜோலார்பேட்டை - சேலம் இடையே மொரப்பூரில் இரவு 8 மணிக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் நிற்கிறது. அதே நேரம், மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் போது மதியம் 2:40க்கு சேலத்தை கடக்கும் ரெயில் மாலை 4:30க்கு ஜோலார்பேட்டையில் தான் நிறுத்தப்படுகிறது. மொரப்பூரில் நிறுத்தப்படுவதில்லை.
இது குறித்து திருப்பூர் ெரயில் பயணிகள் கூறியதாவது:- கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ஜோலார்பேட்டைக்கு பயணிக்கும் ெரயில்களில் இன்டர்சிட்டி, சென்னை எழும்பூர் ஆகிய ெரயில்கள் மதியத்துக்கு முன்பாக மொரப்பூர் கடந்து விடுகிறது.மாலையில் கோவை எக்ஸ்பிரஸ், இரவில் சபரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வடமாநிலத்தில் இருந்து வரும் வாராந்திர ெரயில்கள் நின்று சென்றாலும், அவற்றில் ெரயில் பெட்டிகளில் கால் வைப்பதுக்கு கூட இடமிருப்பதில்லை. தர்மபுரி, பொம்மிடி, வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர், திருவண்ணாமலை பகுதிக்கு மொரப்பூரில் இருந்து செல்வோர் பலர் உள்ளனர்.மங்களூரு செல்லும் போது நிறுத்தப்படும் ரெயில் சென்னை திரும்பும் போது நிறுத்தப்படாததால் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே, மங்களூரு - சென்னை ெரயிலை மொரப்பூரில் மாலையில் நிறுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்