search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் தொழிலாளர்"

    • திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
    • அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போல் தேர்தல்களுக்கும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சொந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தை தினமும் கேட்டறிந்து வந்தனர். திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலா னவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றதுடன் நாளை ஓட்டு ப்பதிவு நடக்கப்போகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளி கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் பயணிக்கின்றனர். சிலர் ஒரு மாதத்துக்கு முன்ன தாகவே, பஸ், ரெயில்களில் புக்கிங் செய்துவிட்டனர். இதனால் நேற்றிரவு மற்றும் இன்று காலை திருப்பூர் ரெயில், பஸ் நிலையங்களில் பனியன் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    தேர்தல் காரணமாக, தொழிலாளர்கள் வெளியே செல்வதும், வருவதுமாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக பின்னலாடை உற்பத்தியும், ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அடுத்த கட்டமாக வடமாநிலங்களிலும் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கப்போகிறது.

    திருப்பூரில் மட்டும் 21 மாநிலங்களை சேர்ந்த 2.50 லட்சம் தொழிலாளர் உள்ளனர். இவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். இதன்காரணமாகவும், பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் வழக்கமான உற்பத்தி மற்றும் பிராசசிங் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பமாக சொந்த ஊர் செல்கின்றனர். ஏற்கனவே சிலர் சென்றுவிட்டனர். பள்ளி கோடை விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு பின் திருப்பூர் திரும்புவர். வடமாநில தொழிலாளர்கள் 20ந்தேதிக்கு பின், திருப்பூரில் இருந்து அந்தந்த மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு புறப்படுவார்கள். இதன் காரணமாக பின்னாலடை உற்பத்தி குறையும். அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந் தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.
    • கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான்.

    திருப்பூர் :

    கொரோனா காரணமா 2½ ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த, கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந்தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.2 நாள் மட்டுமே இயங்கிய நிலையில் காவேரி - ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி நடந்ததால் ஜூலை 13 முதல் 24-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரெயில் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்டு -செப்டம்பர் மாதம் ெரயில் முழுமையாக இயங்கியது. கோவை - திருப்பூர் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக அக்டோபர் 13 முதல் 30-ந்தேதி வரை 17 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

    பணி முடிந்து அக்டோபர் 31 முதல் மீண்டும் இயங்கத் துவங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவேரி - ஈரோடு இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29 வரை 30 நாட்களுக்கு முழுமையாக ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

    இது குறித்து ெரயில் பயணிகள் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான். ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 6 நாட்கள் இயங்குவதால், ஆயிரக்கணக்கான பயணிகள், பனியன் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர். பகுதி அளவிலாவது பாசஞ்சர் ெரயிலை இயக்க வேண்டும் என்றனர்.

    • பனியன் உற்பத்தி நிறுவனங்களில், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது.
    • பனியன் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளருடன் பேசி போனஸ் வழங்க வேண்டும்

    திருப்பூர் :

    நிட்டிங், டையிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரிங், பனியன் உற்பத்தி நிறுவனங்களில், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பனியன் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளருடன் பேசி போனஸ் வழங்க வேண்டும்.

    பண்டிகைக்கு முன்னதாகவே போனஸ் வழங்கி முடிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளை போலவே, எவ்வித பிரச்னையும் ஏற்படாதவகையில் சுமூகமாக பேசி போனஸ் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×