search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதுக்கியவர் கைது"

    • பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் மூட்டையை இறக்கி வைத்தார்.
    • இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்து அவரிடம் இருந்த ரேஷன் அரிசி மற்றும் மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உத்தரவின் பேரில் போலீசார் கண்கா ணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.

    அவர் பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் மூட்டையை இறக்கி வைத்தார்.

    இதைப்பார்த்த போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து அங்கு சோதனை செய்தனர்.

    அதில் ஈரோட்டில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 1,900 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானி துருப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோதரன் (33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்து, அவரிடம் இருந்த 1,900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.

    • சென்னிமலை அடுத்த கூரபாளையம் பஸ் நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீ ர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் சென்னிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சென்னிமலை அடுத்த கூரபாளையம் பஸ் நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டதில் அங்குள்ள ஒரு பகுதியில் 25 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்ப ட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரேஷன் அரிசியை பதுக்கியது சென்னிமலை அடுத்த மேலப்பாளையம், ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (50) என தெரிய வந்தது. இவர் ரேஷன் அரிசியை பதுக்கி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    கருங்கல்பாளையம் சங்க நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 1,550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலையில் அரிசியை விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மது விலக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் செந்தில், சூரம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா என பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடையாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது அங்கு மூட்டை மூட்டையாக ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கரோல் பிரான்சிஸ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். யார் யாரிடம் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கப்பட்டது. என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் சூரம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சூரம்பட்டி பெட்ரோல் பங்க் அருேக 2 பேர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா 90 பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சாஸ்லிங் (55), செல்வராஜ் (56) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஹான்ஸ் -புகையிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.

    ×