search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிப்பு"

    • ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம்.
    • மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும்.

    கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரு நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஜாதி, மத, இன, பொருளாதார வேறுபாடில்லாமல் சென்றடைய வேண்டும். இவ்வகையில் பார்க்கும்போது இந்தியா ஓரளவிற்கு முன்னேறி வருகிறது எனலாம். அதே நேரத்தில் இன்னமும்கூட இந்தியாவின் சில குக்கிராமங்களில் குழந்தைகள் பல கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது என்பதையும் நோக்க வேண்டும். உயர்கல்வி பற்றின விழிப்புணர்வு எல்லாத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். நம் கல்வித் திட்டம் ஒரு மனிதனை சுயசார்புடையவனாக வளர்க்க வேண்டும். இவ்வுலகில் சக மனிதர்களோடு வளைந்து கொடுத்து, அதாவது அனைவரின் கருத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதே நேரத்தில் நேர்மை தவறாமல் எப்போதும் மகிழ்வுடன் வாழ வழிகாட்ட வேண்டும்.

    தனிமனித வளர்ச்சிக்கும் ஒரு நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப, அரசியல் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். இந்த கல்வி சிறப்பாய் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நாட்டின் வருங்காலம் ஒளிமயமாகும் என்பது வெளிப்படையான உண்மை.

    சர்வகலாசாலையில் பல பட்டங்களை பெறுவது மட்டுமே கல்வியல்ல என்பதை உணர்தல் வேண்டும். கற்றல் என்பது எந்த கணப்பொழுதும் நிகழக்கூடியது. எனவே நாம் எப்போதும் கற்பதற்கு தயாராய் இருக்க வேண்டும் என மாணவப் பருவத்திலேயே நமக்கு அறிவுறுத்தும்படி நம் பள்ளிக் கல்வி அமைய வேண்டும்.

    ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம். பிறகே ஆசிரியரின் பங்கு. சொல்லப் போனால் ஒரு மனிதனை செதுக்குவதில் மேற்படி இருவருக்குமே, இரண்டு சிற்பிகளுக்குமேதான், முக்கிய பங்கு. ஆனால் தற்போது நிலைமை குழந்தைகள் சரியானபடி பயிலாதபோது ஒருவர் மேல் மற்றவர் குறை சொல்லி தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். இந்நிலை முற்றாக மாறவேண்டும். புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்து விடாமல் புத்திசாலி என நம்பும் பலரின் அறியாமை மாற வேண்டும்.

    மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு செயல்முறை படுத்தும்போது அவரவரின் புத்துருவாக்கத்திற்கு அதில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்விதான் முதுகெலும்புள்ள, சுயசிந்தனையை வளர்க்கக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடக்கூடிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்கும். ஒவ்வொரு மனிதனிடமும் அறிய திறமைகள் பொதிந்துள்ளன.

    அதை வெளிக்கொண்டு வருபவர்தான் உண்மையான ஆசிரியர் என்கிறார் விவேகானந்தர் எனவே நன்றாக படிக்கும் மாணவர்களை மற்றும் படித்த பெற்றோர்களின் குழந்தைகளை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி காண்பிப்பதில் ஆசிரியருக்கு என்ன பங்கு இருக்கிறது. எனவே கல்வி கற்க சிரமப்படும் மாணவர்களை நன்கு பயிற்றுவித்து அவர்களை நன்கு தேர்ச்சி பெற செய்வதில்தான் ஒரு ஆசிரியரின் வெற்றி இருக்கிறது என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர வேண்டும்.

    முழுமையான கல்வி என்பது ஒருவனுக்கு முதலில் தான் என்கிற தன் முனைப்பை அழிக்கும். ஜாதி, மத பேதங்களை அவனுள்லிருந்து அறவே நீக்கும். இந்தியா என் நாடு என்பதைவிட இந்த உலகம் என் வீடு எனும் பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தும். பல புத்துருவாக்கங்களுக்கான வீரிய வித்துக்களை விதைப்பவனாக மாற்றும். இப்படிப்பட்ட கல்வியை கொணர்வது நம் அனைவருடைய சமூக பொறுப்பு.

    • தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும்.
    • படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது.

    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.

    நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.

    மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும். குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது.

    பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?

    திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

    மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்.

    • படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள்.
    • உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம்.

    நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து படித்தவற்றை மட்டுமல்லாமல் புரியாமலேயே மனத்தில் பதித்த தகவல்களையும் அது எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறது. ஆதலால், நினைவில் வைத்துக்கொள்வது எப்போதும் ஒரு பிரச்சினையே அல்ல. வேண்டிய தருணத்தில் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. மறதியும், பதற்றமும் பயமும் எப்போதும் அதற்குத் தடையாக உள்ளன. அந்தத் தடையை எப்படி வெல்வது?

    படித்தவற்றைச் சொல்லிப் பார்க்கும்போது உங்களுடைய காதுகளுக்கு கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிப் பாருங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம். இது ஒரு சுவையான விளையாட்டு. உங்களுக்குப் பிடித்த பழங்களையோ, கடலைகளையோ, உலர் பழங்களையோ அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு கடலையையோ பழத்தையோ உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளுங்கள்.

    படிப்பதைவிட மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது, படித்ததை எப்போதும் மறக்காமல் வைத்துக்கொள்ள உதவும். உங்களை நீங்கள் ஒரு ஆசிரியராக உருவகப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கோ உங்களுடைய நண்பர்களுக்கோ பாடம் எடுங்கள். வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்து போகாமல், திரும்பிப் படிக்கும்போது கழுகுப் பார்வையில் பாடத்தை மேலிருந்து மொத்தமாகத் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். உதாரணத்துக்குப் பாடங்களையும் அதன் தலைப்புகளையும் மட்டும் பார்த்துச் செல்வது. படிக்கும்போதும், சொல்லும்போதும் எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பழக்கம் மிகவும் உதவும். எழுதியவற்றைத் திரும்ப வாசிப்பது, பழக்கப்பட்ட பாதையில் செல்வதுபோல் மிகவும் எளிதாக இருக்கும்.

    படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். மிகவும் கடினமான பாடத்தைப் படிக்கும்போது ஒரு பந்தைச் சுவரில் போட்டுப் பிடித்தவாறே படிப்பதன் மூலம் கடினமான பாடத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது எல்லாம் சுவரிலிருந்து திரும்பி வந்த பந்தைப் பிடித்தது ஞாபகத்துக்கு வந்து மகிழ்ச்சியை அளிப்பதோடு அந்தப் பாடத்தையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும். கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களிலிருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன்மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம்.

    காலையில் படிப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பழக்கம் இருந்தால் சிறிது தூரம் ஜாக்கிங்கூடச் செல்லலாம். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சி உடலுக்கு அல்ல, மூளைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    • கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
    • தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

    * தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

    * தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

    * தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

    * தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.

    * இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.

    * தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.

    * தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.

    * தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.

    * கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.

    * இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

    * வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.

    மலர்விழி, பெங்களூரு.

    • குழந்தையாக கற்க ஆரம்பித்து, தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும்
    • கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்.

    நம் வாழ்க்கையை முன்னேற்றும் சக்திவாய்ந்த கருவி கல்வியாகும். கல்வி ஒருவருடைய அறிவையும், ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தை தரும்.கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. குழந்தையாக கற்க ஆரம்பித்து, தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும், அதற்கு எல்லை ஏதுமில்லை.

    கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது மற்றும் உயர் பதவிகளிலும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.

    கல்வி ஒருவருக்கு எந்தெந்த இடத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், கருத்துப்பரிமாற்றத் திறனையும் கற்றுத்தருகிறது. கற்றவர்களுக்கு நினைத்ததை தெளிவாக வெளிப்படுத்தும் ஆற்றல் இருப்பதோடு , மற்றவர்களின் எண்ணங்களையும் பல கோணங்களில் ஆராய்ந்து அதற்கு தீர்வு கூறும் வல்லமை பெற்றிருப்பர். இதனால் அவர்களால் எந்த சூழலையும் சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது.

    கல்வி ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவை தருவதோடு, அதனால் அவர்களால் எந்த எந்திரத்தையும் எளிதாக உபயோகிக்க முடிகிறது மற்றும் பல துறைகளில் அவர்கள் சாதித்து காட்டுகிறார்கள். ஒரு தலைமுறையினரை அடுத்த தலைமுறையினருக்கு முறையாக வழி நடத்த வேண்டும் என்பதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், புதியகண்டுபிடிப்புகளுக்கும் கல்வி உதவி புரிகிறது.

    • இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.

    தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

    * தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

    * தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

    * தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.

    * இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.

    * தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.

    * தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.

    * தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.

    * கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.

    * இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

    * வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.

    -ர.சவுந்தரபாண்டியன், எம்.எஸ்சி., எம்.எம்.எட்., எம்.பில்.,

    முதுகலை உயிரியல் ஆசிரியர்,

    ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி,

    அயனாவரம், சென்னை.

    • கணிப்பு அறிவியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
    • அனைத்து துறைகளிலும் அவருக்கான வேலைவாய்ப்பு உள்ளது.

    உங்களுடைய பகுப்பாய்வு திறன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து ஒரு புதுமையான வணிகத் தீர்வுகளை கொடுப்பதில் உங்களுக்கு ஆர்வமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் ஒரு அருமையான படிப்பு - கணிப்பு அறிவியல் (Actuarial Science). இதனை 'காப்பீட்டு கணிப்பு அறிவியல்' என்றும் குறிப்பிடுவர்.

    கணிப்பு அறிவியல் (Actuarial Science) என்பது ஒரு வணிகத்தொழிலில் உள்ள எதிர்கால மற்றும் நிச்சயமில்லாத நிதி ஆபத்துகளை கணிதம் மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும் ஒரு உன்னதமான தொழில் படிப்பு ஆகும். அதிக ஊதியம் கிடைக்கும் படிப்புகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறைய தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் பல்வேறு நிதி பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கின்றன. இதுபோன்ற எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத நிதி ஆபத்துகளைக் கையாள உலகம் முழுவதும் கணிப்பு அறிவியலுக்கான தேவை அதிகமாகியுள்ளது.

    மேலும், கொரோனா பெருந்தொற்றால் நிறைய மக்கள் இறந்ததால் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மேல் மக்கள் கவனம் பெருவாரியாக திரும்பியுள்ளது. இதனால், ஆயுள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களிலும் கணிப்பு அறிவியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

    கணிப்பு அறிவியலாளர் பணி என்ன?

    கணிப்பு அறிவியலாளர் வெவ்வேறு விதமான தரவு மற்றும் தகவல்களை கணக்கிட்டு, எதிர்பார்க்காத மற்றும் விரும்பத்தகாத தோல்விகளுக்கான சாத்தியக்கூறுகளை தகர்த்தெடுக்க தேவையான அறிவியல் பூர்வமான அறிவுரைகளை வழங்குவார். நிதி ஆபத்து உள்ள அனைத்து துறைகளிலும் அவருக்கான வேலைவாய்ப்பு உள்ளது. உதாரணமாக, தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், அரசு நிதி துறை.

    நிதி கொள்கைகளை வடிவமைத்தல் மற்றும் போதுமான நிதி இருக்கிறதா என்பதை கண்காணித்தல்.

    காப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை தீர்மானித்தல்.

    இழப்புகளை குறைக்க காப்பீடு அபாயங்களை கண்காணித்தல்.

    பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுவதை கணித்து, காப்பீடு கொள்கைகளை உருவாக்கும்போது இந்த அபாயங்களை இணைத்துக்கொள்ளுதல்.

    நிறுவனத்தின் நிதி திட்டமிடுதலுக்கான அபாயத்தை மதிப்பிடுதல்.

    சேர்க்கை நடைமுறை

    இந்தியாவில் இந்தக் கல்வி கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கணிப்பு அறிவியல் (Actuarial Science) சார்ந்த இளநிலை பட்டப்படிப்பிற்கு இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்சுவாரீஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு மூலம் ACET (Actuarial Common Entrance Test) என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இந்தியாவின் சிறந்த கல்லூரியில் கணிப்பு அறிவியல் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், Institute of Actuaries (IAI) என்ற ஒருங்கிணைந்த அமைப்பில் உறுப்பினராகவும் இருக்க முடியும்.

    பொது நுழைவுத்தேர்வு

    கணிப்பு அறிவியல் கல்விக்கான பொது நுழைவுத்தேர்வு (ACET) ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்தப்படுகிறது.

    10 மற்றும் 12-ம் வகுப்பில் கணித பாடம் படித்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் ஆவர்.

    இந்தியாவில் கணிப்பு அறிவியல் கற்பிக்கும் சில கல்லூரிகள்:

    1) இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தா, 2) சேவியர் கல்லூரி, மும்பை, 3) மும்பை பல்கலைக்கழகம், மும்பை, 4) டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி, 5) லயோலா கல்லூரி, சென்னை, 6) மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை, 7) நேஷனல் இன்சூரன்ஸ் அகாடமி, புனே, 8) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி, மும்பை, கான்பூர், சென்னை மற்றும் ரூர்கீ. 9) பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி.

    இந்த படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேரும் முன்பு அந்தக்கல்லூரி அரசு அங்கீகாரம் பெற்று இந்த படிப்புகளை வழங்குகிறதா மற்றும் படிப்பதற்கான வசதிகள் போன்றவற்றை மாணவர்கள் விசாரித்து தெரிந்து கொள்வது அவசியம்.

    முக்கிய தேதிகள்

    இந்த ஆண்டு நடைபெறும் கணிப்பு அறிவியல் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான (ACET) முக்கிய தேதிகள் விவரம் வருமாறு:

    விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-2-2023, மாலை 3 மணிக்குள்.

    நுழைவு தேர்வு நாள்: 18-3-2023, (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை)

    தேர்வு முடிவு அறிவிப்பு நாள்: 28-3-2023

    மேலும் கூடுதல் விவரங்களை https://actuariesindia.org என்ற இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    இந்தியாவில் கணிப்பு அறிவியல் பின்வரும் துறைகளில் செயல்படுகிறது

    ஆயுள் காப்பீடு

    பொது காப்பீடு

    மருத்துவ காப்பீடு

    மறுகாப்பீட்டு நிறுவனங்கள்

    ஓய்வூதிய நிதி ஆலோசனை அமைப்பு

    முதலீடுகள்

    அரசாங்க நிதி மேலாண்மை

    கல்விக் குழுமங்கள்

    நிறுவன இடர் மேலாண்மை

    செ. மதுக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், ராமநாதபுரம்.

    • மாணவர்களின் ஆங்கில வாசிப்பு, கணிதம் பாடங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
    • குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் நல்லதுதான்.

    கொரோனா நோய்த் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

    தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

    கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதிலும் ஆரம்பக் கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

    பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைகூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.

    இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.

    எண்ணும் எழுத்தும் திட்டம்

    இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.

    அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.

    அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அரும்பு, மொட்டு, மலர்...

    குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

    அரும்பு என்பது படிக்கத் தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.

    இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.

    ஆடல், பாடல், கதை சொல்லல்...

    தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

    • பேஷன் தொடர்பான படிப்புகள் மாணவிகளை அதிகமாகவே ஈர்க்கின்றன.
    • படைப்பாற்றல், கற்பனைத்திறன் இவைதான் இப்படிப்புக்கு அடிப்படை தேவை.

    ஆடை வடிவமைப்பு என்பது அடிப்படையில் ஓர் அழகுக்கலை. இந்த பேஷன் டிசைனிங் விஷயத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் கூடுதலாகவே கவனம் செலுத்துவார்கள். இதன் காரணமாக, தற்போது பேஷன் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளில் சேரும் ஆர்வம் இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பேஷன் தொடர்பான படிப்புகள் மாணவிகளை அதிகமாகவே ஈர்க்கின்றன.

    ஆரம்பத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருந்து வந்த பேஷன் டிசைனிங் படிப்புகள் தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பிரபலமாகி வருகின்றன. படைப்பாற்றல், கற்பனைத்திறன் இவைதான் இப்படிப்புக்கு அடிப்படை தேவை. இவ்விரண்டு திறன்களும் இருந்தால் இத்துறையில் ஜொலிக்கலாம். நிறைய சாதிக்கலாம்.

    சாதாரணமாக, பேஷன் டிசைன் படிப்பில் பிளஸ் 2-வில் எந்த குரூப் படித்த மாணவர்களும் சேரலாம். ஆனால், பேஷன் டெக்னாலஜி படிப்பில், பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் மட்டுமே சேர முடியும். பேஷன் டிசைன் என்றவுடன் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது 'நிப்ட்' என அழைக்கப்படும் தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technology) தான். சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 'நிப்ட்' இயங்கி வருகிறது. சென்னை வளாகம் தரமணியில் அமைந்துள்ளது. இங்கு இளங்கலையில் டிசைனிங் தொடர்பான 4 ஆண்டு பட்டப்படிப்பும் (பி.டிசைன்), பேஷன் டெக்னாலஜி சம்பந்தமான பட்டப்படிப்பும் (பி.எப்.டெக்) வழங்கப்படுகிறது.

    டிசைனிங் படிப்பில் பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்ஸெசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன், பேஷன் கம்யூனிகேஷன் ஆகிய 6 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 இடங்கள். இளங்கலை படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பை பூர்த்தி செய்தவர்கள் சேரலாம். வயது வரம்பு 23. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. மேற்படிப்பை பொறுத்தவரையில், எம்.டிசைன், எம்.எப்.எம். (பேஷன் மேனேஜ்மென்ட்), எம்.எப்.டெக் (பேஷன் டெக்னாலஜி) படிப்புகள் உள்ளன. முதல் இரு படிப்புகளில் எந்த பட்டதாரிகளும் சேரலாம். ஆனால், எம்.எப். டெக் படிப்புக்கு மட்டும் பி.எப். டெக் அல்லது பி.இ., பி.டெக் பட்டம் அவசியம். இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

    இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

    நிப்ட் கல்வி நிறுவனத்தைப் போன்று, தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேஷன் தொடர்பான பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர பல தனியார் கல்வி நிறுவனங்களில் பேஷன் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி படிப்புகள் உள்ளன. இந்த இடங்கள் பொறியியல் படிப்பு பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

    பேஷன் டிசைனிங் தொடர்பான படிப்புகள் 100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்பு நிறைந்தவை. தற்போது, சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஆடை அலங்காரத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, பேஷன் டிசைனர்களுக்கு இத்துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தற்போது சர்வதேச அளவில் ஆடை நிறுவனங்கள், பேஷன் ஷோ நிகழ்ச்சிகள் வளர்ந்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால், பேஷன் தொடர்பான படிப்பை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விரிந்து பரந்து கிடக்கின்றன. அவர்கள் ஆடை அலங்கார நிபுணர் ஆகலாம். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவோருக்கு பேஷன் டிசைனிங் அருமையான படிப்பு.

    பொதுவாக, இப்படிப்பை முடிப்பவர்கள் பேஷன் டிசைனர், பேஷன் கோ-ஆர்டினேட்டர், ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர் என பல்வேறு பொறுப்புகளில் பணியில் சேரலாம். மேலும் ஆயத்த ஆடை நிறுவனங்கள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் போன்றவற்றில் பேஷன் டிசைன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தனியார் துறையில் மட்டுமின்றி அரசு பணி வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. மத்திய, மாநில அரசுகளில் கைத்தறி துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். நிறைய மேற்படிப்பு வாய்ப்புகளும் இருக்கின்றன. எம்.பி.ஏ. பேஷன் மேனேஜ்மென்ட், எம்.டிசைன் (மாஸ்டர் ஆப் டிசைன்), எம்.எப்.டெக் (பேஷன் டெக்னாலஜி) படிக்கலாம்.

    கலை, அறிவியல், தொழில்நுட்பம், மனித உணர்வுகள் ஆகியவை இணைந்த கலவைதான் பேஷன் டிசைனிங். நமது உடலின் இரண்டாவது தோல் என்று கூட இதை அழைக்கலாம். உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் பேஷன் டிசைனிங் துறையானது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனை, பி.எஸ்சி மற்றும் பி.டெக் படிப்பாக படிக்கலாம். சாதாரணமாக பி.எஸ்சி படிப்புக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரமும், பி.டெக். படிப்பு எனில் ரூ.2 லட்சம் வரையிலும் செலவாகும். அதிக செலவு நிறைந்த படிப்பு போல் தோன்றினாலும் இப்படிப்பை முடிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    பேஷன் துறையிலும், ஜவுளித் துறையிலும் பணிவாய்ப்புகள் மிகுதி. பெரிய நிறுவனங்களில் அசிஸ்டென்ட் பையர், பேஷன் அசிஸ்டென்ட், பேஷன் கன்சல்டன்ட், புராஜெக்ட் லீடர், டெக் னிக்கல் லீட், குவாலிட்டி ஆடிட்டர், பிரான்ட் மேனேஜர், கன்டன்ட் டிசைனர், இன்போகிராபிக் டிசைனர், டேட்டா அனலிஸ்ட், ஜூனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட், மெட்டீரியல் மேனேஜர், அப்பரல் டிசைனர், புரடக்‌ஷன் பிளானர், பேட்டர்ன் என்ஜினீயர், 3-டி ஸிமுலேட்டர், பிளான்ட் லே-அவுட் டிசைனர்... இப்படி பலதரப்பட்ட பொறுப்புகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    இத்துறையில் தொடக்க நிலையில் ரூ.40 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். ஐந்தாறு ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். நல்ல படைப்பாற்றலும், கற்பனை வளமும், தொழில்திறனும் இருந்தால் சம்பளம் இன்னும் அதிகமாக பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக சொந்தமாக தொழில் தொடங்கி மிகப்பெரிய தொழில்முனைவோர் ஆகலாம்.

    பேஷன் டிசைனிங் தொடர்பான படிப்புகள்

    100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்பு நிறைந்தவை. தற்போது, சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஆடை அலங்காரத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, பேஷன் டிசைனர்களுக்கு இத்துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    • மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
    • குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும்.

    கோவை கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி துறை தலைவர் (இ.இ.இ.) பேராசிரியை மைதிலி கூறியதாவது:-

    பள்ளி படிப்பு முடிந்தது கல்லூரிக்குள் வரும் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலையும் ஏற்படுகிறது. கல்லூரி படிப்பு தொடர்பாக பெற்றோர் தங்களின் விருப்பம் மற்றும் முடிவுகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் விரும்பும் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முதல் மதிப்பெண் எடுக்க வற்புறுத்துவதால் மாணவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் நிலை உள்ளது.

    மதிப்பெண் அவசியம் என்றாலும் சாதனை படைப்பதற்கு தன்னம்பிக்கை, தனித்திறன்கள் மிகவும் முக்கியம். குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுப்பதோடு பெற்றோர் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குடும்பத்தின் நிலை தெரியும் வகையில் குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும்.

    மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆனால் தங்களின் மனஉணர்வுகளை நண்பர், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மனநிலை அறிந்து பெற்றோர் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சி.ஏ, குறித்த மாணவ-மாணவிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் கேட்டு தெரிந்துகொண்டனர்.
    • 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

     திருப்பூர் : 

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தென்னிந்திய குழுவின் சார்பில் சி.ஏ, படிப்புக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் எஸ்.செந்தில்பிரபு, மனோகரன், ரூபிணி, மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் ஜெ.சுமதி வரவேற்று பேசினார். செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன் சிறப்புரையாற்றினார். சி.ஏ, குறித்த மாணவ-மாணவிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் கேட்டு தெரிந்துகொண்டனர். முடிவில் துைண முதல்வர் விஜயா வாழ்த்தி பேசினார்.

    • மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது.
    • நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் அவ்வப்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் மாணவ- மாணவிகள் இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு வீடு மற்றும் சமூகத்தின் பார்வையால் எழும் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் 1834 மாணவர்கள், மத்திய பிரதேசத்தில் 1308 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். தமிழகத்தில் 1246 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர்.இந்தியாவில் மொத்தம் 13,089 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 10,732 பேர். தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்தவர்கள் மட்டும் 864 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020-ம் ஆண்டு 12,526 பேர் தற்கொலை செய்து உள்ள னர். இதில் ஆண்கள்- 55.62 சதவீதம். பெண்கள்- 44.38 சதவீதம். 2021-ம் ஆண்டு 13,089 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில் ஆண்கள்- 56.51 சதவீதம். பெண்கள்- 43.49 சதவீதம் என்று குறிப் பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது. ஆனால் மதிப்பெண்கள் தான் உயர் கல்விக்கும், நல்ல வேலை பெறவும் ஆதாரமாக இருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும் போது குற்ற உணர்ச்சி கொள்ள எந்த அவசியமும் இல்லை. மீண்டும் படித்து தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மாணவர்- ஆசிரியர் இடையே உறவு மேம்பட வேண் டும். பாடம், படிப்பு, தேர்வு என்பதை தாண்டி உலகம் எவ்வளவு அதிசயங்களை உள்ளிடக்கியது என்பதை ஆசிரியர்கள் மாணவர் களுக்கு புரிய வைக்க வேண்டும் ஆசிரியர்கள், மாணவர்களை சமூகத்தில் தைரியமாக வாழத் தகுதி உடையவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தோல்வி அடைவது என்பது கவனக்குறைவால் ஏற்படும் சிறு சறுக்கல், தடுமாற்றம் தான் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறுகள், தோல்விகள், இழப்புகள், பலவீனங்களில் இருந்து மீண்டும் வர முடியும். படிப்பு, தேர்வு உள்பட எந்த தோல்வியும் வாழ்க்கையை விட மேலானது, உயர்ந்தது அல்ல. எத்தனை தோல்வி அடைந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் ஒரு பிறப்பின் அர்த்தத்தை சமூகத்துக்கு விளக்கும் சான்றாக இருக்க முடியும்.

    ×