என் மலர்
நீங்கள் தேடியது "Guide"
- தமிழக அரசு அண்மையில் மாணவா்களுக்காக ‘நான் முதல்- அமைச்சர் ’ என்ற திட்டத்தை தொடங்கியது.
- நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் நேற்று முன்தினம் வந்தன.
நாமக்கல்:
தமிழக அரசு அண்மையில் மாணவா்களுக்காக 'நான் முதல்- அமைச்சர் ' என்ற திட்டத்தை தொடங்கியது. அதன்படி 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து அவா்கள் முடிவு செய்யும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் நேற்று முன்தினம் வந்தன. அவை மாவட்டக் கல்வி அலுவலக புத்தகக் கிடங்குகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இவை ஓரிரு நாளில் வட்டார வாரியாக அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
- கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
- அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அடுத்தசட்டநா தபுரம் கைகாட்டி ரவு ண்டானா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் திசை, வழி காட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரம் கொண்ட இரும்பிலானது. இந்த தகவல் தெரிவிக்கும் பல கையானது கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வரும் பிரதான சாலையாகும்.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்தும், அது எங்களுக்கு கட்டுப்பாட்டில் இல்லாத சாலை எனவும், நகாய் எனும் நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள சாலை எனவே அந்த துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவியுங்கள். அவர்கள்தான் இதனை சரிசெய்ய இயலும் எனவும் கூறி இதுவரை அதனை சரி செய்யவும் இல்லை அப்புறப்படுத்தவும் இல்லை.
இதனால் அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இதனை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






