search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tutorial"

    • வரும் 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.
    • தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் வரும் 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது. தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    தென்னை ஆயுள் முழுவதும் வருமானம் தரக்கூடிய ஒரு நீண்ட கால பயிர் ஆகும். இதே போல் பாக்கு மர சாகுபடியும் நீண்ட கால நிரந்தர வருவாய் தரக்கூடியதாகும்.

    தென்னை மற்றும் பாக்கு மரங்களில் அவ்வப்போது ஏற்படும் நோய் தாக்குதல்கள் மற்றும் பராமரிப்பு பற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இந்நிலையில் நாமக்கல் கால்நடை மருத்து வக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம், நாற்றாங்கால் பராமரிப்பு, ஊட்டச்சத்து, நீர் மற்றும் களை மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து தெளிவாக விளக்க வுரை அளிக்கப்படும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 12,523 எம்.டி.எஸ். காலிப்பணியிடங் களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியி–டப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும்.

    இத்தேர்விற்கான கல்வித்தகுதி, 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும், 1.1.2023 அன்று எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்–பட்–டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி–லிருந்து விலக்கு அளிக்கப்–பட்டுள்ளது. மேலும், இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும், இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெ–றுமாறும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • டி.என்.பி.எஸ்.சியால் அடுத்த ஆண்டு 25.02.2023 அன்று நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயின்ற 104 தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான முதன்மைத்தேர்வு டி.என்.பி.எஸ்.சியால் அடுத்த ஆண்டு 25.02.2023 அன்று நடத்தப்பட உள்ளது. முதன்மைத் தேர்வுக்கான வழிகாட்டுதல் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு வருகிற 22-ந்தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும் பாடத்தொகுப்புகள், இலவ சமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை 21-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் empvgslm08@gmail.com, mailto:empvgslm08@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்தோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 94990 55941 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

    நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிட வளாகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பா டுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் பாபு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார். துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், வேளாண்மை துறையில் தற்போதுள்ள மானியத்திட்டங்கள் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா ஆகியோர் செய்திருந்தனர்.

    • மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 889 பணிக்காலியிடங்கள் கொண்ட பார்மசிஸ்ட் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கப்படவுள்ளது.
    • இப்பயிற்சி வகுப்புக்கான முதற்கட்ட அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிவகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தற்பொழுது மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 889 பணிக்காலியிடங்கள் கொண்ட பார்மசிஸ்ட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புக்கான முதற்கட்ட அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படவுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு களில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசிஎண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவுசெய்து பயன்பெ றலாம்.

    மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வுவினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்று ள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர்,பாலினம்,தந்தைம ற்றும் தாய் பெயர், முக வரி,ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்து போட்டித் தேர்வு என்பதை தேர்வு செய்யவேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்ததேர்வுக்குதயா ராகிறோம் என்பதைதேர்வு செய்து,அதில் வரும் பாடக் குறிப்புகளைதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம்,ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான பகுதி யும் கொடுக்கப்பட்டு ள்ளது.

    அரசு போட்டித்தேர்வு களுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.

    அத்துடன் ஊக்கஉரை கள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்புநிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 7 மணியிலிருந்து 9 மணிவரையும் இதன் மறு ஒளிபரப்பு பிற்பகல் 7 மணியிலிருந்து 9 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் தெரிவித்துள்ளார்.

    • மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (MRB), 889 மருந்தாளுநர் பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (MRB), 889 மருந்தாளுநர் பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்பட உள்ளன. மேலும் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மருந்தாளுநர் பணி களுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசு அண்மையில் மாணவா்களுக்காக ‘நான் முதல்- அமைச்சர் ’ என்ற திட்டத்தை தொடங்கியது.
    • நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் நேற்று முன்தினம் வந்தன.

    நாமக்கல்:

    தமிழக அரசு அண்மையில் மாணவா்களுக்காக 'நான் முதல்- அமைச்சர் ' என்ற திட்டத்தை தொடங்கியது. அதன்படி 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து அவா்கள் முடிவு செய்யும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் நேற்று முன்தினம் வந்தன. அவை மாவட்டக் கல்வி அலுவலக புத்தகக் கிடங்குகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இவை ஓரிரு நாளில் வட்டார வாரியாக அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×