search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசுப்பணி தேர்வுக்கு இலவச பயிற்சி
    X

    மத்திய அரசுப்பணி தேர்வுக்கு இலவச பயிற்சி

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 12,523 எம்.டி.எஸ். காலிப்பணியிடங் களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியி–டப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும்.

    இத்தேர்விற்கான கல்வித்தகுதி, 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும், 1.1.2023 அன்று எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்–பட்–டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி–லிருந்து விலக்கு அளிக்கப்–பட்டுள்ளது. மேலும், இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும், இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெ–றுமாறும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×