search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவக்கிரகம்"

    • சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும், தாமரையை மலரச் செய்யும்
    • மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான் சூரியன்.

    மாறிக்கொண்டே இருக்கிற உலகில், அதனை நடைமுறைப்படுத்துபவனே சூரியன்!

    சூரியனின் கிரணம், பனியை உருக வைக்கும்.

    சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும், தாமரையை மலரச் செய்யும், ஆம்பலை வாட வைக்கும்.

    இலைகளை காயச் செய்யும், ஈரத்தை உலரவைக்கும், வெப்பம் ஏறிய புழுக்கத்தில், ஈசல் போன்ற உயிரினங்களைத் தோற்றி வைக்கும்.

    பொருளின் இயல்புக்கு உகந்தபடி, மாறுபாட்டை ஏற்படுத்தும், கர்மவினையின் இயல்பை ஒட்டி, மாறுபாட்டை நடைமுறைப்படுத்தும்.

    மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான் சூரியன்.

    அவனுடைய வெப்பம், குளிச்சியை சந்தித்த சந்திர கிரணத்துடன் இணைந்து ஆறு பருவ காலங்களை உருவாக்குகிறது.

    தட்பவெட்பங்கள் தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம், இடைவெளியை நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர்.

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்!

    கர்மத்தை முற்றிலும் துறந்த துறவியும், கர்மமே கடவுள் என அதில் ஒட்டிக் கொண்டு போராடும் வீரனும் சூரிய மண்டலத்தைப் பிளந்து, வீடுபேறு அடைகின்றனர் என்கிறது புராணம்.

    • நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன.
    • எதிர்காலத்திலும் தொடருவான். ஆக முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி.

    ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சூரியனைப் பார்த்து, கர்மமே கண்ணாக இருக்க வேண்டும் என்கிறது வேதம்.

    இருண்ட சந்திரனுக்கு ஒளியை வழங்குபவன் சூரியன்.

    நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன.

    ஒளியை வெளியிடும் அனைத்துப் பொருட்களும் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்றவையே.

    இருளில் ஒளிந்திருக்கிற பொருளை அடையாளம் காட்டுகிறது வெளிச்சம்.

    ஒளிந்திருக்கிற கர்ம வினையை அடையாளம் காட்டுகிறது, இவனுடைய வெளிச்சம்.

    மற்ற கிரகங்களும் இவனுக்குத் துணை போகின்றன. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்தும் சூரியனை வைத்தே நிகழ்கின்றன.

    அதாவது, முற்பிறவியில் நம் செயல்பாட்டைக் கண்காணித்தவன் அவன். இந்தப் பிறவியிலும் அதனைத் தொடர்கிறான்,

    எதிர்காலத்திலும் தொடருவான். ஆக முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி.

    "முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்" என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார்.

    நம் உடலில் உள்ள சூடு, அவனுடைய பங்கு.

    அவனுடைய வெப்பம், பொருளில் அதன் இயல்பை வெளிக்கொண்டு வர உதவும்.

    • தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால், கண் ஆஸ் பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது
    • அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

    தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால், கண் ஆஸ் பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது.

    பூதவுடலை, பெரும்பூதங்களுடன் இணைக்கும் போது, கண்கள் சூரியனில் இணையட்டும் என்கிறது வேதம்.

    தோற்றம் மறைவு இல்லாதவன் சூரியன்.

    ஒளிப் பிழம்பாகத் தோன்றுபவன் அவன். நம் கண்களுக்குத் தென்படுகிற போது, "சூரியன் தோன்றுகிறான்" என்கிறோம்.

    தென்படாத போது, "சூரியன் மறைந்து விட்டான்" என்கிறோம்.

    ஆனால், அப்போது சூரியன் வெளிநாட்டில் தோன்றுகிறான்.

    சூரியன் தோன்றி மறைகிற இடைவெளியை பகலாக ஏற்கிறோம்.

    அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

    நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகியவை அனைத்தும் சூரியனை வைத்துத் தீர்மானிக்கப்பட்டவையே.

    சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை.

    கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்.

    அதாவது வேளை என்கிறது வேதம்.

    சூரியனின் செயல்பாட்டின் அளவே கால அளவாக மாறியது.

    • கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்.
    • வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன்.

    கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்.

    அவன் "உலகின் அணையா விளக்கு" என்பவார் வராகமி ஹிரர் சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது.

    காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம்.

    மேலும், சராசரங்களின் ஆன்மா என சூரியனை அடையாளம் காட்டுகிறது வேதம்.

    சூரியன், உலகை உணர்த்துகிறான். இயங்க வைக்கிறான், உறங்க வைக்கிறான் என்கிறது ஜோதிடம்.

    அவன் தோன்றும் போது உயிரினங்களுக்கு உயிரூட்டுகிறான்.

    மறையும் வேளையில், உறக்கத்தில் ஆழ்த்தி இளைப்பாறச் செய்கிறான் என்கிறது வேதம்.

    மும்மூர்த்திகளும் அவனுள் அடக்கம்.

    முத்தொழில்களையும் அவனே நடத்துகிறான்.

    வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன் என்கிறது வேதம்.

    நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டினார்.

    நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லா பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான்.

    சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.

    இயம தர்மராசாவும், தாம் உயிரைப் பறிக்கும் தொழிலைச் செய்வதால் எம்மோரும் தம்மை குறைவாக மதிக்கின்றனர் என எண்ணி தவமிருந்து இறைவனிடம் "தர்மராசா" என்னும் பட்டத்தினைப் பெற்றார்.

    • விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.
    • மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம்.

    சிவன் கோவில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு.

    அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள்.

    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.

    சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம'

    என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம்.

    இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை.

    அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    • அமிர்தத்தின் பயனால், தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் வளர்ந்தது என்பர்.
    • கேதுவின் மனைவி சித்ரலேகா என்பவள் ஆவாள். இவனுக்கு எட்டு பிள்ளைகள் உண்டு.

    முறை தவறி அமிர்தத்தை உண்ணும் பொழுது, திருமால் சட்டுவத்தால் ராகுவின் தலையில அடிக்க, தலைவேறு உடல் வேறாக ராகு துண்டிக்கப்பட்டான்.

    அமிர்தத்தின் பயனால், தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் வளர்ந்தது என்பர்.

    கேதுவின் மனைவி சித்ரலேகா என்பவள் ஆவாள். இவனுக்கு எட்டு பிள்ளைகள் உண்டு.

    இவன் சிவபெருமானை வணங்கி சாயாக்கிரக பதத்தைப் பெற்றான்.

    கேது வழிபட்ட சிவாலயங்கள்:

    திருமுருகன்பூண்டி,

    கீழப்பெரும்பள்ளம்,

    திருப்பாம்புரம்,

    திருக்காளத்தி முதலியன

    இந்த ஒன்பது கிரகங்களும், தங்களின் தீவினை நீங்கி நல்வினைப் பெறுவதற்கு சிவபெருமானையே வழிபட்டுள்ளன.

    வினையின் போகங்களை உயிர்கட்கு ஊட்டுபவன் சிவபெருமானே ஆவார்.

    அவரை வணங்கினால்தான் வினையின் தாக்குதலில் இருந்து விடுபட முடியும்.

    • காசிபரின் மகன் விப்ரசித் எனும் அசுரனுக்கும் தட்சனின் மகள் சிம்மிகை எனும் அசுர மாதுவிற்கும் பிறந்தவன் ராகு.
    • இவனுக்கு சிம்கி எனும் மனைவியும் உண்டு.

    காசிபரின் மகன் விப்ரசித் எனும் அசுரனுக்கும் தட்சனின் மகள் சிம்மிகை எனும் அசுர மாதுவிற்கும் பிறந்தவன் ராகு.

    இவனுக்கு சிம்கி எனும் மனைவியும் உண்டு.

    பார்கடலில் தோன்றிய அமிர்தத்தை முறை தவறி உண்டான் இவன்.

    இதற்காக திருமாலால் இவன் தண்டிக்கப்பட்டான்.

    பிறகு சிவபெருமானை வழிபட்டு சாயாக்கிரக பதத்தைப் பெற்றான்.

    ராகு வழிபட்ட சிவாலயங்கள்:

    திருப்பாம்புரம்,

    திருநாகேஸ்வரம்,

    சீர்காழி,

    திருக்காளத்தி

    • இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
    • இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்

    இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.

    இவனுக்கு நீலா, மந்தா என இரு மனைவியர் உண்டு என நூல்கள் கூறுகின்றன.

    எமனால் தண்டிக்கப்பட்டு சனியினுடைய வலக்கால் ஊனமாயிற்று என்றும், தட்சயாகத்தினால் ஒரு கண் போயிற்று என்றும் வரலாறு கூறுகிறது.

    இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்

    சனி வழிபட்ட சிவாலயங்கள்:

    நெல்லிக்கா,

    கொள்ளிக்காடு,

    திருநள்ளாறு

    • பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
    • இவன் காசியில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டான்.

    பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.

    இவன் காசியில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டான்.

    இவனது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் இறந்தவர்களை எழுப்பும் 'அமிர்த சங்சீவினி' மந்திரத்தை இவனுக்கு உபதேசித்தருளினார்.

    சுக்கிரனுக்கு மனைவியர் பலர் உண்டு என சோதிட நூல் கூறும்.

    சுக்கிரன் வழிபட்ட சிவாலயம்:

    கஞ்சனூர்

    • இவன் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் மகனாய்த் தோன்றியவன்.
    • தாரை, சங்கினி எனும் இரு மனைவியரை உடையவன்.

    இவன் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் மகனாய்த் தோன்றியவன்.

    தாரை, சங்கினி எனும் இரு மனைவியரை உடையவன்.

    இவன் சிவபெருமானை வழிபட்டு தேவர்களுக்கு குருவாக விளங்கவும், கிரகபதத்தில் வீற்றிருக்கும் பேறு பெற்றான்.

    குரு வழிபட்ட சிவாலயங்கள்:

    தேவூர்,

    திருவான்மியூர்,

    சீர்காழி,

    குடந்தைக்காரோணம்,

    தென்குடித்திட்டை,

    திருவலிதாயம் முதலியனவாகும்.

    • சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாகத் தோன்றியவன்.
    • இவனுக்கு ஞானதேவி, பிரசங்கி, அப்ரசிங்கி எனும் மனைவியர் உண்டு

    சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாகத் தோன்றியவன்.

    இவனுக்கு ஞானதேவி, பிரசங்கி, அப்ரசிங்கி எனும் மனைவியர் உண்டு என சிந்தாத்த சேகரம் எனும் நூல் கூறுகிறது.

    இவன் சிவபெருமானைக் கருதி கிரகபதவி பெற்றான்.

    புதன் வழிபட்ட சிவாலயம்:

    திருவெண்காடு

    ×