search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவக்கிரகம்"

    • உஷா மற்றும் பிரதியுஷா (சாயா) தேவிகளுடன் சூரியன் வணங்கப்படுகின்றார்.
    • நமக்கு உணவும், உயிரும் தர தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகின்றது.

    நவகோள்களின் நாயகனாக விளங்குபவவர் சூரியன்.

    இவர் ஆதித்யன், பாஸ்கரன், திவாகரன், பாலு, ரவி, பிரபாகரன், பரிதி, கதிரோன், வெய்யோன் என்று பல திருநாமங்களல் அழைக்கப்படுகின்றார்.

    உஷா மற்றும் பிரதியுஷா (சாயா) தேவிகளுடன் சூரியன் வணங்கப்படுகின்றார்.

    தமிழ் நாட்டிலே பொங்கல் பண்டிகை நல்ல விளைச்சலுக்கு காரணமான சூரிய தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே கொண்டாடப்படுகின்றது.

    பெளதீக சாஸ்திரப்படி சூரியன் மஹா கொதி நிலையில் உள்ள வாயுக்கள் நிரம்பிய கோளமாகும்.

    நமக்கு உணவும், உயிரும் தர தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகின்றது.

    சூரியன் இல்லையென்றால் தாவரங்கள் என்று சொல்லப்படும் உணவு தயாரிப்பது இல்லை, தாவரங்கள் இலையென்றால் மான், மாடு முதலிய மிருகங்கள் இல்லை.

    இம்மிருகங்கள் இல்லை. எனவே சூரிய ஒளியே உலகில் உயிர்களுக்கு ஆதாரம்.

    ஆயிரம் கிரணங்களுடன் நம்மை உதய நேரத்தில் பிரம்மா ரூபத்திலும், உச்சிப் போதில் பரமேஸ்வர ரூபத்திலும், அஸ்தமன மாலை நேரத்தில் விஷ்ணு ரூபமாகவும் காப்பதாக ஐதீகம், காலை மற்றும் மாலை சூரியன் கதிரில் விட்டமின் டி இருப்பதாக விஞ்ஞானமும் கூறுகின்றது.

    • “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்கின்றது சிலப்பதிகாரம்.
    • இன்றும் சிவாலயங்கள் அனைத்திலும் நவ கிரக வழிபாடு உள்ளது.

    "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்கின்றது சிலப்பதிகாரம்.

    சூரிய வழிபாடு பண்டைக்காலத்திலிருந்தே நமது பாரத நாட்டில் இருந்துள்ளது.

    கிழக்கிலே கொனார்க்கிலும், மேற்கிலே மொட்டோராவிலும் தெற்கிலே சூரியனூர் கோவிலும் அமைந்துள்ள சூரியர் கோவில்களே இதற்கு சான்றுகள்.

    சனாதன தர்மமான இந்து மதத்தை அறு சமயங்களாக வகுத்துக் கொடுத்த ஆதிசங்கர பகவத் பாதாளும் சூரிய வழிபாட்டை சௌரமாக வகுத்துக் கொடுத்தார்.

    இன்றும் சிவாலயங்கள் அனைத்திலும் நவ கிரக வழிபாடு உள்ளது.

    • உஷாதேவியை ஒரு பாகமாக கொண்டு திகழ்கிறார் சூரிய பகவான்.
    • இவ்வுருவையே “மார்த்தாண்ட பைரவர்” என்று நூல்கள் கூறுகின்றன.

    உமையொருபாகனாக சிவபெருமான் போல, லக்ஷ்மி பாகனாகத் திகழும் விஷ்ணு போல, உஷாதேவியை ஒரு பாகமாக கொண்டு திகழ்கிறார் சூரிய பகவான்.

    எந்த உஷாதேவி சூரியனின் முன்னர் வெளிப்பட்டு உலகின் இருளை அகற்றுகிறாளோ அவளையே தனது அருள் சக்தி வடிவாகக் கொண்டு சூரிய நாராயணன் நமது அஞ்ஞானமான இருளை அழித்து ஒளிமயமான அறிவாக கவிதையாக மலர்வதைத் தான் இவ்வுருவம் சித்தரிக்கிறது.

    இவ்வுருவையே "மார்த்தாண்ட பைரவர்" என்று நூல்கள் கூறுகின்றன.

    இதுவே உன்னதத் தத்துவம், கண்கண்ட தெய்வமான சூரியனினும் ஆணும், பெண்ணுமாக இணைந்த உருக்கொண்டு அருள் பாலிக்கும் பாங்கை பொங்கல் திருநாளில் நினைவில் நிறுத்தலாமே.

    • கும்பகோணத்துக்கு அருகில் தாராசுரம் என்ற கோவில் இருக்கிறது.
    • நாம் அந்த கோவிலுக்குள் நுழைந்ததும் கண்ணில் படுவது அர்த்தநாரி உருவம்.

    கும்பகோணத்துக்கு அருகில் தாராசுரம் என்ற கோவில் இருக்கிறது.

    அதை இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி.1165 வாக்கில் கட்டினான்.

    அது சாக்த மரபை பிரதிபலிக்கும் கோவிலாகத் திகழ்கிறது.

    நாம் அந்த கோவிலுக்குள் நுழைந்ததும் கண்ணில் படுவது அர்த்தநாரி உருவம்.

    அதைப் பார்த்ததும் சிவபெருமான் அர்த்தநாரியாகத் திகழ்வதைத் தான் நினைவூட்டும்.

    இது என்ன மாயை என்று தோன்றும். ஆனால் அதை ஆராய்ந்த போது ஒரு உண்மை தெரிந்தது.

    தாராசுரம் கோவிலில் பல தெய்வச் சிலைகள் உள்ளன. அதில் காவி வண்ணத்தில் அத் தெய்வங்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

    சோழர் கால கிரந்த எழுத்துக்களில் இப்பெயர் உள்ளது.

    இந்த அர்த்தநாரியின் உருவத்தின் மேலும் எழுத்து மங்கிய நிலையில் இன்றும் உள்ளது.

    அதிலிருந்து இது சூரியனுடைய உருவம் என்பதே ஆகும். மூன்று தலைகள் உள்ளன.

    தலை யின் பின்புறம் சூரியனுடைய பிரபை வலப்பகுதி ஆணாகவும் இடப் பகுதி பெண்ணாகவும் உள்ளது.

    ஒரு வலது கரத்தில் தாமரை உள்ளது.

    ஆம் தமிழ்நாட்டிலேயே அர்த்தநாரி சூரியனை சோழர் காலத்தில் சோழ பேரரசர்களும் மக்களும் வணங்கியுள்ளனர்.

    சூரியனை இவ்வாறு வணங்கும் மரபு உண்டாம்.

    • தமிழ்நாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோவிலை கட்டினான்.
    • ஆனால் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில் தான் இது கட்டப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோவிலை கட்டினான்.

    இது ஒரு சிறிய கோவில் தான்.

    ஆனால் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில் தான் இது கட்டப்பட்டுள்ளது.

    சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோவில் எனும் சிறப்பை சூரியனார் கோவில் பெற்றுள்ளது.

    ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.

    சூரியனார் கோவில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.

    • புகழ் பெற்ற ஒரு கோவில் கலிங்கத்தின் கடற்கரை ஓரத்தில் கோனார்க்கில் உள்ள சூரியன் கோவில்.
    • சோழராட்சி தமிழகத்தில் முடிவடையும் கட்டத்தில் அக்கோவில் அங்கு எழுந்தது.

    புகழ் பெற்ற ஒரு கோவில் கலிங்கத்தின் கடற்கரை ஓரத்தில் கோனார்க்கில் உள்ள சூரியன் கோவில்.

    அந்த கோவிலில் உள்ள கர்ப கிரஹத்தின் மேல் விமானம் இடிந்து விட்டது.

    கலிங்கதேச விமானம் போல் தான் அதுவும் இருந்திருக்க வேண்டும்.

    மிகப்பிரம் மாண்டமான அந்த கோவிலைக் கீழை கங்க அரசன் நரசிம்மதேவன் என்பவன் கி.பி.1250ல் கட்டினான்.

    சோழராட்சி தமிழகத்தில் முடிவடையும் கட்டத்தில் அக்கோவில் அங்கு எழுந்தது.

    • சைவமும், வைணவமும் இந்தியாவில் சிறந்து திகழ்வது போல சூரிய வழிபாடும் திகழ்கிறது.
    • புகழ் வாய்ந்த சூரியன் கோவில்களில் இந்த மார்த்தாண்டர் கோவிலும் ஒன்று.

    சைவமும், வைணவமும் இந்தியாவில் சிறந்து திகழ்வது போல சூரிய வழிபாடும் திகழ்கிறது.

    சூரியனை முழு முதற்கடவுளாக வணங்கும் வழிபாடு சௌசரம் எனப்படும்.

    இந்தியாவின் பல இடங்களில் சூரியனுக்கு பெருங்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

    காஷ்மீரத்தில் லலிதா தித்ய முக்தி பாதன் என்ற அரசன் கட்டிய "மார்த்தாண்டர்" கோவில் சூரியனுக்கு கட்டப்பட்டது.

    கி.பி.750ல் அதாவது தமிழ்நாட்டில் பல்லவர் ஆண்ட காலத்தில் அது கட்டப்பட்டது.

    அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்ததாக வரலாறு கூறுகிறது.

    கி.பி.1090ல் அங்கு ஆண்ட கலசன் என்ற அரசன் அங்கு இருந்த சூரிய பகவானுடைய செப்புத்திரு மேனியை உடைத்தான்.

    இதனால் அவன் நோய் வாய்ப்பட்டான். பின்னர் தங்கத்தில் சூரியன் உருவம் செய்து இக்கோவிலில் வைத்தான்.

    இருந்தாலும் அவன் நோய் வாய்ப்பட்டான்.

    ஆதலால் தன்னை இத் தெய்வத்தின் காலடியில் கொண்டுவிட கேட்டுக்கொண்டான்.

    கோவிலில் சிலையின் காலடியில் இவனை வைத்ததும் அங்கேயே இறந்து போனான் என்று வரலாறு கூறுகின்றது.

    புகழ் வாய்ந்த சூரியன் கோவில்களில் இந்த மார்த்தாண்டர் கோவிலும் ஒன்று.

    • சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை.
    • சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு.

    சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை.

    கர்ம வினைக்குத் தக்கபடி மாற்றத்தை ஏற்படுத்துவான்.

    பலவாறான கர்ம வினைகள் எனவே, மாறுபட்ட கிரகங்களின் துணை அவனுக்குத் தேவை.

    பூமியில் விளையும் பயிர்கள் பலவிதம், அதற்கு விதையின் தரம் காரணம்.

    கண்ணுக்கு இலக்காகாத கர்வினையின் தரத்தை வெளிக் கொண்டு வருபவன் சூரியன்!

    ஞாயிற்றுக் கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள்.

    விண்வெளியில் சூரியனின் ஓடுபாதை, நடுநாயகமாக விளங்குகிறது.

    சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி இப்படி முன்னும் பின்னுமாக இருக்கிற எல்லா கிரகங்களையும், தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துகிறான், சூரியன்.

    "ஸ"ம் ஸ ர்யாயநம" என்று சொல்லி 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு.

    சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும்.

    • ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடுவது எளிது.
    • அந்த மனோ பலத்தை சூரியனிடமிருந்து பெற வேண்டும்.

    ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடுவது எளிது.

    மகான்கள் மனோபலம் மற்றும் ஆன்ம பலத்தால் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

    அந்த மனோ பலத்தை சூரியனிடமிருந்து பெற வேண்டும்.

    சந்திரன், சூரியனிடமிருந்து பலம் பெறுகிறான்.

    தேசத்தோடு இணைந்து பிறந்தவனின் வேளை (லக்னம்) சூரியனை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

    வாரம், திதி நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்து கால அளவுகளுக்கு சூரியனின் பங்கும் உண்டு.

    ஆன்ம சம்பந்தம் இல்லாத உடலுறுப்புகள், இயங்காது.

    நேரடியாகவோ பரம்பரையாகவோ ஆன்மகாரகனின் சம்பந்தமின்றி, கிரகங்கள் இயங்காது.

    • சந்திரனுடன் இணைந்தால், மனத் தெளிவை ஏற்படுத்துவான்.
    • சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான்.

    சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான்.

    அதனை நிபுணயோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம்.

    ஆனால் அவனுடன் முற்றிலும் ஒன்றினால், விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.

    குருவுடன் சேரும் போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான்.

    செவ்வாயுடன் இணையும் போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம்.

    சந்திரனுடன் இணைந்தால், மனத் தெளிவை ஏற்படுத்துவான்.

    சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்தியத்தை இழக்க நேரிடும், சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு, செல்வ வளம் பெற்றாலும், செல் லாக்காசாக மாற நேரிடும்.

    ராகுவுடன் சேர்ந்தால் வீண்பழி, அவப் பெயர்தான் மிஞ்சும். பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளிபரவாமல் தடுப்பது உண்டு. அதே போல், ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு.

    கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்.

    வசதி உலகவியலில் அடங்கும், சுகம், மனம் சார்ந்த விஷயம், ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான்.

    உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால், செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றி விடுவான்.

    அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான்.

    நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து, விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது.

    பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும், தன்னம்பிக்கை பிறக்கும்,

    மக்கள் சேவையுடன் திகழலாம், புகழுடன் வாழலாம்!

    ஆன்ம காரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணைபுரியும், சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்து விடலாம்.

    • அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும்.
    • ஆன்ம சம்பந்தம் இருப்பதால் திறமை வெளிப்படும்.

    சூரியனின் வெப்பம் ஏறும் போதும் இறங்கும் போதும், நாம் படாதபாடுபடுகிறோம்.

    நீரை உறிஞ்சுபவனும், மழையைப் பொழியச் செய்பவனும் அவனே.

    இன்பத்தை அளிப்பதும் துன்பத்தைச் சுமக்க வைப்பதும் சூரியனே! இயற்கையின் சட்ட திட்டங்களில் இவனது பங்கு உண்டு.

    இயற்கையில் தோன்றிய சாஸ்திரம், ஜோதிடம். ஆகவே அதற்கு அழிவில்லை.

    பிரளயம் முடிந்து, புதிய படைப்பு துவங்கும் போது, பிரளயத்துக்கு முன்பு இருந்த சூரியனையும், சந்திரனையும் அப்படியே தோற்றி வைக்கிறார் கடவுள் என்கிறது வேதம்.

    இனப் பெருக்கத்துக்கு காரணமான ராசி புருஷனின் ௫ ஆம் வீடான சிம்மத்தை அவனது ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம்.

    தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந்தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு, சூரியனுக்கும் உண்டு, பொருட்களின் தோற்றத்துக்கு அவனது வெப்பம் வேண்டும்.

    எனவே அவனை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும்.

    ஆன்ம சம்பந்தம் இருப்பதால் திறமை வெளிப்படும்.

    அவனது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கி விடுவதும் உண்டு.

    • எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம்.
    • ஆன்மாவும், மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும்.

    சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன்னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான்.

    எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம்.

    மனசஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு. சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான்.

    அவன்! "ஹோரா" என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சமபங்கில் நிறைந்திருப்பதாகச் சொல் கிறது ஜோதிடம்.

    இந்த 2 பேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.

    ஆன்மாவும், மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும்.

    ஜீவாத்மா வெளியேறிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை.

    ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது.

    த்ரேக்காணம், ஸப்தமாச்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய ராசியின் உட்பிரிவுகளில் மற்ற கிரகங்களும் சேர்ந்திருக்கும்.

    ஒவ்வொரு ராசியிலும் எல்லா கிரகங்களின் பங்கு இருக்கும்.

    ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமைகளை, கர்ம வினைக்குத் தக்கபடி, நடைமுறைப்படுத்த வைக்கிறது.

    ×