search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரம்புகளில் அடைப்பு"

    • 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
    • கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம்.

    நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நரம்புகளில் அடைப்பு, முழங்கால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கண்பார்வை குறைபாடு, கெட்ட கொலஸ்ட்ரால் இதனால் வரக்கூடிய உடல்பரும் போன்ற தொந்தரவுகள் இருந்தால் இந்த மருந்தை தொடர்ந்து 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.

    இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் உலகத்தில் நோய்களுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் தான். உணவு பழக்கவழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. நாம் இப்போது சாப்பிடக்கூடிய உணவுகள் நமக்கு 100 சதவீதம் ஊட்டச்சத்தை கொடுக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது.

    ஊட்டச்சத்து இல்லாத உணவுகளையும், கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் அதனுடைய விளைவு நிச்சயமாக நோய்கள் தான். இதனால் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அலைவதை நிறுத்திவிட்டு முதலில் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய மருந்தை 11 நாட்களுக்கு சாப்பிடும் போது பல நோய்கள் குணமாகும். அதாவது உங்களுக்கு மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான எந்த நோய்களுக்கும் இந்த குடிநீரை பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். அதேபோல் உங்கள் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் வரும் சிக்கல்களை இந்த மருந்து தீர்க்கும். இந்த எளிதான குடிநீரை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    தண்ணீர்-250 கிராம்

    வெந்தயம் -ஒரு டீஸ்ஸ்பூன்

    கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி

    பட்டை- ஒருதுண்டு

    இஞ்சி- ஒரு டீஸ்பூன் (துருவியது)

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 250 கிராம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த 250 கிராம் தண்ணீர் 150 கிராம் அளவுக்கு குறுகி வரும் அளவிற்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த பொருட்களில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி வரும் அளவுக்கு காய்ச்சி எடுக்க வேண்டும். அதற்கு அடுப்பை மிதமான தீயில் வைத்தே இந்த மருந்தை காய்ச்சி எடுக்க வேண்டும். அதன்பிறகு இதனை வடிகட்டியில் வடிகட்டி இந்த தண்ணீரை 11 நாட்கள் தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.

    இதில் சுவைக்காக எதுவும் சேர்க்க வேண்டாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதனை 11 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நீங்களே பிரம்மித்து போகிற அளவுக்கு உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.

    அதாவது நரம்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் முதற்கொண்டு எல்லாவிதமான பிரச்சினைகளும் நீங்கி நரம்புகள் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். அதேபோல் மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கபநோய்களுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.

    வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் ஒழுங்குபடுத்தக்கூடிய ஆற்றல் இந்த குடிநீருக்கு உள்ளது. உங்களை நீங்கள் கட்டுடலாக வைத்துக்கொள்ளவும் இந்த குடிநீர் உதவியாக இருக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.

    ×