search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் ரத்த அழுத்தம்"

    • சிப்ஸ் குழந்தைகளை அதிகம் கவர்கிறது.
    • சிப்ஸ் கொறிப்பதால் ஏற்படும் சிக்கல்கள்.

    கவர்ச்சிகரமான 'பேக்கிங்'கில், மொறு மொறு சுவையுடன் வரும் 'சிப்ஸ்',' குழந்தைகளை அதிகம் கவர்கிறது. பிள்ளைகள் நச்சரிக்கிறார்கள் என்று பெற்றோரும் அவர்களுக்கு அடிக்கடி 'சிப்ஸ்' வாங்கி கொடுக்கிறார்கள். இது சரியா? அடிக்கடி 'சிப்ஸ்' கொறிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்று தெரியுமா?

    பொதுவாகவே, சிப்ஸ் கெட்டுப்போகாமல், பிரெஷ்சாக இருக்க அதில் அதிகம் உப்பு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    மேலும், 'சிப்ஸ்' தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    சிப்சில் உள்ள டிரான்ஸ் பேட், கொலஸ்டிராலை அதிகரிக்கிறது. இதனால் தமனிகளில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக, பிற்காலத்தில் இதய பிரச்சினைகள் ஏற்படலாம்.

    அதுமட்டுமின்றி சிப்ஸ், உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளின் எடை கூடும். உடல் பருமன் பிரச்சினை உண்டாகும்.

     அதுபோல் சிப்சில் கலோரிகள் அதிகம். எனவே இதை குழந்தைகள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அதோடு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினைகளை உண்டாக்கலாம், இன்னும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

    முக்கியமாக, குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சிப்ஸ் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயத்துக்கு உள்ளாகலாம். அவர்களுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை பிரச்சினையை உண்டாக்கலாம்.

    அதுபோல குழந்தைகளுக்கு வாயு மற்றும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்குமாம்.

    இவ்வளவு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய சிப்சை நமது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாமா என்று அடுத்தமுறை ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்திடுங்கள்.

    • மெனோபாஸ் காலகட்டத்தில் சில பெண்களுக்குத் தூக்கமே வராது.
    • உளவியல் ரீதியாகவும் நிறைய பிரச்னைகள் ஏற்படும்.

    இந்த பிரச்னையை 'இன்சோம்னியா' (Insomnia) என்கிறோம். மெனோபாஸ் காலத்தில் 60 சதவிகிதப் பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில் சில பெண்களுக்குத் தூக்கமே வராது. சிலருக்கு தூக்கத்தைத் தக்கவைப்பதில் சிரமம் இருக்கும்.

    இன்னும் சிலருக்கு அதிகாலையில் விழிப்பு வந்துவிடும். மீண்டும் தூக்கத்தைத் தொடர்வது சிக்கலாக இருக்கும். இந்தப் பிரச்னைகள் எல்லாமே மெனோபாஸ் காலகட்டத்தில் சகஜமாக ஏற்படுபவை என்கின்றன ஆய்வுகள்.

    ஒரு வருட காலத்துக்கு பீரியட்சே வராமல் இருந்தால் அதை மெனோபாஸ் என்கிறோம். மெனோபாசுக்கு முந்தைய காலகட்டமான பெரிமெனோபாஸ் காலகட்டத்திலேயே நம் சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கிவிடும். ஹார்மோன் சுரப்பு குறைவதால் உடலளவிலும் உளவியல் ரீதியாகவும் நிறைய பிரச்னைகள் ஏற்படும். தூக்க சுழற்சி பாதிக்கப்படுவதும் நடக்கும்.

    ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் உடல் சூடாவது, அதிகம் வியர்த்துக் கொட்டுவது போன்ற உணர்வுகள் சகஜமாக இருக்கும். உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்த்துக்கொட்டுவது போல உணர்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்போர் எல்லாம் குளிர்ச்சியாக உணர்ந்தாலும் உங்களுக்கு மட்டும் வியர்த்துக்கொட்டும். அதேபோல ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவுகள் ரொம்பவும் குறைவதால் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரிக்கும்.

    வேறு ஏதேனும் பிரச்னைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாகக்கூட தூக்கம் பாதிக்கப்படலாம். அப்படி எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அதைப் பரிந்துரைத்த மருத்துவரிடம் அது குறித்து ஆலோசனை பெறுங்கள்.

    தூக்கமின்மையில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சில வாரங்கள் நீடிக்கும், பிறகு தானாக சரியாகிவிடும். இன்னொரு வகை க்ரானிக் இன்சோம்னியா. இது நீண்டகாலமாகத் தொடரும். மூன்று மாதங்களுக்கு மேலும் தொடரும்.

     இரண்டாவது வகையால் பாதிக்கப்பட்டவர்கள் பகல் வேளையில் தூக்கம் வருவதாக உணர்வார்கள். எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாமல் தவிப்பார்கள். இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட வேறு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

    தூக்கமின்மை பிரச்சினைக்கான முதல் தீர்வு 'காக்னிட்டிவ் பிஹேவியரைல் தெரபி'. அதாவது நமக்கு ஏதேனும் நெகட்டிவ் சிந்தனைகள் உள்ளனவா, அவை நம் தூக்கத்தை பாதிக்கின்றனவா என பார்த்து அவற்றை சமாளிக்க கற்றுத்தரப்படும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி பரிந்துரைக்கப்படும்.

    சிலருக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது அது பழக்கமாக மாறிவிட வாய்ப்புகள் உண்டு என்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

    அந்த மாதிரி மருந்துகளைத் தவிர்த்து மருத்துவரின் பரிந்துரையோடு மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள் எடுப்பது பெரிய அளவில் உதவும். மேற்குறிப்பிட்ட எந்த விஷயமும் உதவவில்லை என்றால் உங்களுடைய தூக்க ரொட்டீனை பார்க்க வேண்டும். தூக்கவியல் மருத்துவரை அணுகினால் அவர் அதுதொடர்பான கேள்விகளைக் கேட்டு பிரச்சினைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

    நம் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களைச் சரிசெய்ய வேண்டியதும் அவசியம். முதல் விஷயம் நாம் தூங்கும் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மாலை நேரத்தில் மங்கலான விளக்குகளையே பயன்படுத்துங்கள். செல்போன், லேப்டாப் போன்றவற்றின் உபயோகத்தைத் தவிர்க்கவும். யோகா, தியானம் போன்ற ரிலாக்சிங் டெக்னிக்குகளை பின்பற்றலாம்.

    தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும். மிதமான உணவாக இருக்க வேண்டியது அவசியம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதற்கு தயாராக வேண்டும். நெகட்டிவ் எண்ணங்கள் வந்தால் அவற்றைப் போக்க நிபுணர்களின் உதவியை நாடலாம்.

    • ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது.
    • உயர் ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகளுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

    25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சிகளே செய்யாதது ஆகியவையே மாரடைப்புக்கான காரணிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். அதற்கு `ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன்' (SCAD) என்று பெயர்.

    கரோனரி ஆர்ட்டரி எனப்படும் ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது. இதயத்தில் இன்டர்னெல் லேயர், மிடில் லேயர், எக்ஸ்டெர்னல் லேயர் என மூன்றுவிதமான லேயர்கள் இருக்கும். ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன் பிரச்னையில் இன்டர்னெல் லேயர் கிழியும். அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும்.

     உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இதற்கான ரிஸ்க் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். உடலின் இணைப்புத் திசுக்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி நிகழலாம். இணைப்புத்திசுக்கள் பலவீனமாக இருப்பது என்பது ரத்தக்குழாய்களில் மரபணு தொடர்பாக ஏற்படுகிற ஒரு பிரச்சினை.

    மிகவும் வயதானவர்களுக்கும், அதீத ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு. அசவுகரியத்தையோ, அறிகுறிகளையோ உணர்ந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்ததன் காரணமாக ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கா அல்லது ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்சேஷன் பாதிப்பால் ஏற்பட்டதா என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார்.

    பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ஆஞ்சியோகிராம் செய்வது முதல், மருந்து, மாத்திரைகள் பரிந்துரைப்பது வரை எந்தச் சிகிச்சை அவசியம் என்பதையும் மருத்துவர் முடிவு செய்வார். பெரும்பாலும், இந்த பிரச்சினை கருவில் உள்ள குழந்தையை பாதிக்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்து தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம்.

    • 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
    • கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம்.

    நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நரம்புகளில் அடைப்பு, முழங்கால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கண்பார்வை குறைபாடு, கெட்ட கொலஸ்ட்ரால் இதனால் வரக்கூடிய உடல்பரும் போன்ற தொந்தரவுகள் இருந்தால் இந்த மருந்தை தொடர்ந்து 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.

    இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் உலகத்தில் நோய்களுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் தான். உணவு பழக்கவழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. நாம் இப்போது சாப்பிடக்கூடிய உணவுகள் நமக்கு 100 சதவீதம் ஊட்டச்சத்தை கொடுக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது.

    ஊட்டச்சத்து இல்லாத உணவுகளையும், கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் அதனுடைய விளைவு நிச்சயமாக நோய்கள் தான். இதனால் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அலைவதை நிறுத்திவிட்டு முதலில் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய மருந்தை 11 நாட்களுக்கு சாப்பிடும் போது பல நோய்கள் குணமாகும். அதாவது உங்களுக்கு மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான எந்த நோய்களுக்கும் இந்த குடிநீரை பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். அதேபோல் உங்கள் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் வரும் சிக்கல்களை இந்த மருந்து தீர்க்கும். இந்த எளிதான குடிநீரை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    தண்ணீர்-250 கிராம்

    வெந்தயம் -ஒரு டீஸ்ஸ்பூன்

    கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி

    பட்டை- ஒருதுண்டு

    இஞ்சி- ஒரு டீஸ்பூன் (துருவியது)

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 250 கிராம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த 250 கிராம் தண்ணீர் 150 கிராம் அளவுக்கு குறுகி வரும் அளவிற்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த பொருட்களில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி வரும் அளவுக்கு காய்ச்சி எடுக்க வேண்டும். அதற்கு அடுப்பை மிதமான தீயில் வைத்தே இந்த மருந்தை காய்ச்சி எடுக்க வேண்டும். அதன்பிறகு இதனை வடிகட்டியில் வடிகட்டி இந்த தண்ணீரை 11 நாட்கள் தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.

    இதில் சுவைக்காக எதுவும் சேர்க்க வேண்டாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதனை 11 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நீங்களே பிரம்மித்து போகிற அளவுக்கு உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.

    அதாவது நரம்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் முதற்கொண்டு எல்லாவிதமான பிரச்சினைகளும் நீங்கி நரம்புகள் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். அதேபோல் மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கபநோய்களுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.

    வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் ஒழுங்குபடுத்தக்கூடிய ஆற்றல் இந்த குடிநீருக்கு உள்ளது. உங்களை நீங்கள் கட்டுடலாக வைத்துக்கொள்ளவும் இந்த குடிநீர் உதவியாக இருக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.

    • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
    • கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

    காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

    முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

    • நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கிறார்கள்.
    • தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் சர்வதேச ஆய்வு இதழான லான்செட் இதழில் வெளியிடப்பட்டது.

    இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கிறார்கள். நீரிழிவு நோய் பாதிப்பு 11.4 சதவீதம் பேருக்கும், ஆரம்ப நிலை பாதிப்பு 15.3 சதவீதம் பேருக்கும் உள்ளது. தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    குறிப்பாக கேரளா, புதுச்சேரி, கோவா, சிக்கிம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் குறைவான பாதிப்பே உள்ளது. நகர்ப்புறங்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

    நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்களிடையே அதிக வித்தியாசம் இல்லை.

    மேலும் உயர் ரத்த அழுத்தத்தால் 31.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 35.5 சதவீதம் ஆகும். உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டோரில் 5 சதவீதம் பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்.

    மேலும் பொதுவான உடல் பருமனால் 25.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் வயிற்று பருமனால் 35.1 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடல் பருமனால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பாதிப்பு புதுச்சேரியில்தான் அதிகமாக உள்ளது.

    21.3 கோடி பேர் அதிக கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18.5 கோடி பேர் அதிக கெட்ட கொழுப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதுபோன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளன.

    ×