என் மலர்
நீங்கள் தேடியது "Mother-daughter"
- வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- பிரியங்கா உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் பெண் ஒருவர் தனது 6 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
நவி மும்பை, கன்சோலி பகுதியில் வசித்து வரும் பிரியங்கா காம்ப்ளே (26) கடந்த ஏப்ரல் 23 இரவு, தனது 6 வயது மகள் வைஷ்ணவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரியங்கா உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்ததாகவும் அவரது கணவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
முதலில் விபத்து மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டதாகக் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- மாட்டுத்தாவணியில் ஜவுளி கடையில் நகை திருடிய தாய்- மகள் கைது செய்யப்பட்டனர்.
- கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது.
மதுரை
மதுரை மாட்டுத்தா வணியில் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. அங்கு ஊழியர்கள் நேற்று மாலை பணியில் இருந்தனர். அப்போது அங்கு ரூ.2.10 லட்சம் மதிப்புடைய 5 பவுன் நகை திருடு போனது.
இதுகுறித்து மாட்டுத்தா வணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் பர்தா அணிந்த 2 பெண்கள், ஜவுளிக்கடையில் நகை திருடியது தெரியவந்தது. இருவரும் செக்கானூரணி, பன்னியான் ரோடு ராமகிருஷ்ணன் மனைவி சுமதி (50), சரவணன் மனைவி பிரியதர்ஷினி (28) என்பது தெரிய வந்தது. இருவரும் தாய்-மகள் ஆவார்கள்.
மாட்டுத்தாவணி ஜவுளிக்கடையில் கவரிங் செயினை வாங்கிய அவர்கள், ஒரிஜினல் நகைக்கடை பிரிவுக்கு வந்தனர். அப்போது அவர்கள் பார்வையிடுவது போல், கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- தாய்-மகள் கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி கொள்ளையர்கள் வீடு புகுந்து தாய்-மகளை கொடூரமாக கொலை செய்து, திருமணத்திற்காக வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் கொலையுண்ட வேலுமதியின் மகன் மூவரசு என்பவரையும் கொள்ளையர்கள் வெட்டி னர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.
தாய்-மகள் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கொள்ைளயர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின்பேரில் விசாரணை அதிகாரியாக தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ் குமார் நியமிக்கப் பட்டார்.
தேவகோட்டை பகுதி களில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டும், பொருட்கள் இல்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.
இந்த நிலையில் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர்கள் தாய்-மகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை நடந்து 19 நாட்கள் ஆகியும் துப்பு துலங்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றியதால் காரைக்குடி தாசில்தார் மற்றும் தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கணேஷ்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் இரட்டை கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை உடனடியாக கைது செய்யாவிட்டால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
- லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.
- இதில் பலத்த அடிபட்ட 2 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பூமணி (வயது 45). இவர் தனது தாய் சரஸ்வதியை (வயது 65) அழைத்துக்கொண்டு காஞ்சிக்கோயில் பகுதியில் உள்ள தனது உறவினரின் திருமணத்திற்கு மொபட்டில் வந்தனர்.
பின்னர் திருமணம் முடிந்து மதியம் வீட்டுக்கு செல்வதற்காக காஞ்சிக்கோயில்-திங்களூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பூமணி ஓட்டி வர அவரது தாய் சரஸ்வதி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
இவர்கள் காஞ்சிக்கோயில் அடுத்துள்ள பூசம்பதி அருகே வரும்போது இவர்களுக்கு எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.
இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறினர். பலத்த அடிபட்ட பூமணி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உடல்நிலை மோசமாகி விட்டதாக கூறி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் பூமணியின் உடலை பரிசோதித்து விட்டு அவரும் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோயில் போலீசார் லாரியை ஓட்டி வந்த பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தை பருவத்தில் தாயுடனான பந்தம் உணர்வுப்பூர்வமாக விளங்கும்.
- டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான அக்கறையும் கூடும்.
எல்லா பெண்களும் தங்கள் முதல் ரோல் மாடலாக கருதும் நபர் தாயாகத்தான் இருப்பார். ஏனெனில் சிறு வயது முதலே ஒவ்வொரு விஷயத்தையும் தாயை பார்த்தே செய்ய தொடங்குவார்கள்.
எந்தவொரு புது முயற்சியை மேற்கொள்வதாக இருந்தாலும் அதில் தாயின் சாயல் வெளிப்படும். அந்த அளவுக்கு அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தாயின் நடவடிக்கைகளை சார்ந்தே அமையும்.

குழந்தை பருவத்தில் தாயுடனான பந்தம் உணர்வுப்பூர்வமாக விளங்கும். ஆனால் டீன் ஏஜ் வயதை எட்டும்போது அந்த உறவு பந்தத்தில் சற்று தடுமாற்றம் ஏற்படக்கூடும்.
தாய் சொல்லும் சில விஷயங்களை கேட்கும் மன நிலையில் மகள் இருக்க மாட்டார். அதனால் மகள் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற உணர்வு தாயிடம் தோன்றும்.
மற்ற பருவத்தை விட டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான அக்கறையும் கூடும். அதுவே மகளுக்கு எதிர்மறை எண்ணங்களை தோற்றுவித்துவிடும்.
தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மகள் நடந்து கொள்ள வேண்டும் என்று தாயார் விரும்புவார். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலோ, எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளாவிட்டாலோ மகள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
மகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வார்கள். அவர்களது நோக்கம் மகளை நல்வழிப்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் அதை மகள் புரிந்துகொள்ளாத பட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள் இருவருக்கும் இடையே எட்டிப்பார்க்கும். அது தாய்-மகள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். அதனை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை...

* டீன் ஏஜ் பருவத்தில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம் எல்லா பெண்களிடமுமே மேலோங்கும். ஆடை, அணிகலன் தேர்வுக்கு ரொம்பவே நேரம் செலவளிப்பார்கள். தங்களை மெருகேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். பிடித்தமான அழகு சாதனப்பொருட்களையும் அதிகம் பயன்படுத்த ஆர்வம் காட்டுவார்கள்.
அதனை கண்டிக்கும் மனோபாவமே பெரும்பாலான தாய்மார்களிடம் இருக்கிறது. அதைவிடுத்து இந்த அழகு சாதனப் பொருட்களையெல்லாம் தன்னிச்சையாக உபயோகிக்கக்கூடாது. சரும நல நிபுணர்களிடம் ஆலோசித்து பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க வழிகாட்ட வேண்டும்.
அழகுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை கண்டிக்காமல் மகள் மனம் நோகாதவாறு எடுத்துக்கூற வேண்டும். பணத்தை வீண் விரயம் செய்வதாக கடிந்து கொள்ளவும் கூடாது. எவையெல்லாம் அழகை மெருகேற்ற பொருத்தமாக இருக்கும் என்பதை பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும்.
* மகளின் செயல்பாடுகளில் சில தவறுகள் இருக்கலாம். அதனை பக்குவமாக புரியவைக்க வேண்டுமே தவிர, குடும்பத்தினர், மற்றவர்கள் முன்னிலையிலோ, பொது வெளியிலோ திட்டக்கூடாது.
அப்படி பிறர் முன்பு திட்டுவது மகளுக்கு அவமானத்தையும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிவிடும். தாய்-மகள் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாகிவிடும்.
* மகளின் படிப்பு விஷயத்திலும் கடுமை கொள்ளக்கூடாது. மற்றவர்களுடன் ஒப்பிடுவதோ, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதோ கூடாது. 'உன் மகளுடன் ஒப்பிடும்போது என் மகள் படிப்பில் சுமார்தான்' என்ற ரீதியில் பேசக்கூடாது.
மகளின் குறைகளை அவரிடமே நேரில் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.
* அன்பு, தியாகம், பணிவு, இரக்கம், உதவும் மனப்பான்மை உள்ளிட்ட அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவராக மகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு உண்டு.
அதேவேளையில் சூழ்நிலைக்கு ஏற்ப குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பக்குவம் கொண்டவராகவும் மகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

* மகளின் திருமணம் விமரிசையாக நடைபெற வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொரு தாய்மார்களிடமும் இருக்கும். அதே எதிர்பார்ப்பும், ஆர்வமும் மகளிடமும் வெளிப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர முட்டுக்கட்டை போடக்கூடாது.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை பக்குவமாக விளக்கி புரிய வைக்க வேண்டும். ஒருவேளை மகளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றால், அதற்கான சூழல் உருவாகும் வரை அமைதி காக்க வேண்டும்.
- 3-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.
- திருடிய நகைகளை காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக தகவல்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தை சேர்ந்தவர் சீதாலெட்சுமி (வயது 75), அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோரை கடந்த 3-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (20). மேலநம்பிபுரத்தை சேர்ந்த முகேஷ்கண்ணன் (25), ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தபோது அவர்கள் தப்பியோடினர். இதில் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மேலநம்பிபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் (25) என்பவர் அயன் வடமலாபுரம் காட்டுபகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், 20 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் தீவிரமாக தேடினர்.
மேலும் 6 டிரோன் காமிராக்கள் பறக்க விட்டும் முனீஸ்வனை தேடி வந்தனர். அவர்கள் அயன்வடமலாபுரம், முத்துலாபுரம, தாப்பாத்தி, கீழகடந்தை, புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு காட்டுப்பகுதி யிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அயன்வடமலாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் முனீஸ்வரன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்து அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் பின்வாசல் வழியாக தப்பி ஓட முயற்சித்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடந்த 2 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருக்க காட்டுப்பகுதியில் மறைந்திருந்ததால் பசி ஏற்பட்டு தனது சகோதரி வீட்டில் சாப்பிடுவதற்காக முனீஸ்வரன் சென்றுள்ளார். அவரும் முனீஸ்வரனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அப்போது போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று கதவை உடைத்து சென்று முனீஸ்வரைனை கைது செய்தனர்.
முனீஸ்வரனை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது திருடிய நகைகளை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துக்கொண்டு அந்த காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது நகைகளை எடுத்தபோது அங்கிருந்த ஒரு அரிவாளை எடுத்து முனீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், காவலர் ஜான்சன் தேவராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது முனீஸ்வரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பின்னர் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் முனீஸ்வனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாளை சீவலப்பேரி அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் புதிய முத்து. இவரது மனைவி ஜோதிலெட்சுமி ( வயது 50). இவர் இன்று தனது தாயுடன் நெல்லை கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சீவலப்பேரியில் உள்ள ஒரு கோவிலில் எனது தந்தை சாமியாடி வந்தார். அவர் இறந்ததற்கு பின்னர் எங்கள் குடும்பத்தினரை கோவிலில் அனுமதிக்க மற்றொறு தரப்பினர் மறுத்து வருகிறனர்.
இது தொடர்பாக ஏற்கனவே நெல்லை சரக டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளேன்.
மேலும் அந்த தரப்பினர் நேற்று இரவு எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போன் மூலம் புகார் தெரிவித்தேன். அதன் பேரில் 2 போலீசார் எங்கள் வீட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை அவர்கள் சென்று விட்டனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர்களுடன் கலெக்டர் முகாம் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக புகார்மனு அளிக்க வலியுறுத்தினர். இதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






