search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர்"

    சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒரு சில படங்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினாராம். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறாராம். இதனால் ரசிகர்கள் பலர் நடிகையிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அது சர்ச்சையாகியும் உள்ளதாம்.

    இப்படி பரபரப்பாக சுற்றும் நடிகை ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றாராம். அங்கு இயக்குனர் நடிகையை பார்த்ததும் படுக்கையறைக்கு அழைக்கவே பயந்து போன நடிகை விட்டா போதும் சாமி என்று அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடிவிட்டாராம். 

    பிரபல தொகுப்பாளினி பல முன்னணி நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாராம். அப்போது நடிகர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களுடன் பார்ட்டி, பப் என்று சுற்றி வந்தாராம். ஒரு நாள் முன்னணி நடிகருடன் பார்ட்டிக்கு சென்ற நடிகை தலைக்கேறும் அளவிற்கு குடித்துவிட்டு பார்க்கிங்கில் மயங்கி கிடந்தாராம்.

    இதனை பார்த்த அந்த முன்னணி நடிகர் தனக்கு தேவையானதை முடித்துவிட்டு நடிகையை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டாராம். அதன்பின் வந்த தொகுப்பாளினியின் நண்பர்கள் அவரை அழைத்து சென்றார்களாம்.

    பிரபல நடிகர் ஒருவர் என்னதான் தன்னை வெளியில் நல்லவராக காட்டிக் கொண்டாலும் தன்னுடன் படத்தில் நடிக்கும் நடிகைகளை தனக்கு இரையாக்க வேண்டும் என துடித்து வந்தாராம். அம்மா- மகள் என இருவரையும் அடைந்துவிட வேண்டும் என நினைத்து கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாராம். அவரது ஆசைக்கு ஓகே சொல்லவில்லை என்றால் அவர்களை தயாரிப்பாளர்களிடம் சொல்லி படத்தில் இருந்து தூக்கிவிட்டு அடுத்த ஹீரோயினை கரெக்ட் செய்ய ஆரம்பித்துவிடுவாராம்.

    திரைத்துறையில் பிரபலமாக வேண்டுமே என்று நினைக்கும் நடிகைகள் என்ன செய்வது எல்லாம் விதி என்று தலையில் அடித்துக் கொண்டு நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறார்களாம்.

    பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகையை ஆசை.. ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் சில வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென நடிகை விவாகரத்து கேட்டாராம். நடிகரும் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டாராம். நடிகை மீது தவறு இருப்பதால் தான் நடிகர் எதுவும் சொல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டார் என்று பலரும் பேசி வந்தார்களாம்.

    ஆனால், நடிகர், நடிகை இருக்கும்போதே வேறு ஒரு ஹீரோயினுடன் தொடர்பில் இருந்துள்ளாராம். இது தெரிந்து தான் நடிகை, நடிகரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். நடிகை சென்றதும் இதுதான் வாய்ப்பு என்று நினைத்த நடிகர் காதலியின் வீட்டில் தஞ்சம் புகுந்துவிட்டாராம்.

    ஊருக்கு அறிவுரை சொல்லும் பிரபல நடிகருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இவர் அறிவுரை மட்டுமல்லாமல் பலபேருக்கு உதவி செய்தும் வருகிறாராம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொது கருத்துகளை கூறி வரும் நடிகர் பல படங்களிலும் நடித்து வருகிறாராம்.

    நல்லவர் என பெயர் எடுத்த நடிகர், நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் பிளேபாய் ஆகிவிட்டாராம். இவர் கமிட்டான படங்களிலுள்ள நடிகைகளுடன் ஊர் சுற்றி வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருகிறார்களாம்.

    தமிழில் பலான படத்தில் அறிமுகமான நடிகரின் ஒரு சில படம் ஓரளவிற்கு தியேட்டரில் ஓடிவிட்டதாம். இதையடுத்து தானும் ஒரு நடிகர் என்று நினைத்துக் கொண்ட அவருக்கு, உலக புகழ் பெற்றவரின் தயாரிப்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த படத்தில் நடித்ததால் தானும் உலக புகழ் பெற்ற நடிகர் என்ற எண்ணம் அவருக்கு வந்து விட்டதாம். நடிகரின் பேச்சும் நடத்தையும் முன்பு இருந்ததை விட தற்போது அதிகமாக இருக்கிறதாம். நடிகருடன் நன்றாக பேசுபவர்களே, அவரை விட்டு விலகி சென்று வருகிறார்களாம். மேலும் நடிகரின் ஆட்டம் எவ்வளவு தூரம் போகுதுனு பார்ப்போம் என்று நெருங்கியவர்கள் பேசி வருகிறார்கள்.

    இளம் வயதில் சினிமா துறையில் அறிமுகமான நடிகை தன் கவர்ச்சியாலும், அழகாலும் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமானாராம். நடிகையை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்த அக்கட இயக்குனர்கள் நான், நீ என்று போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் அவரை புக் செய்தார்களாம்.

    இதனால் குஷியான நடிகை உச்ச நடிகையாக வலம் வந்தாராம். தற்போது நடிகைக்கு வயதாகிவிடவே இயக்குனர்கள் எல்லாம் நடிகையை கதாநாயகி பதவியிலிருந்து விலக்கி ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடுங்கள் என்று கேட்டு வருகிறார்களாம். ஆனால், 50 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களோ நான் நடித்தால் அந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்களாம்.

    தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஏக்கத்தில் இருக்கும் நடிகை சரி படங்களில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை வெப் தொடரிலாவது நடிப்போம் என்று முடிவெடுத்து கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம்.

    ஒரு சாதாரண கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அதன்பின் இயக்குனர் ஒருவர் கொடுத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு தன் திறமையினால் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தாராம். உச்ச நடிகராக இருக்கும் இந்த ஹீரோ பல இளம் நடிகைகளுக்கு தன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்து அவர்களது வளர்ச்சியை உயர்த்தி வருகிறாராம்.

    இப்படி பல நடிகைகளுடன் நடிக்கும் இந்த ஹீரோ பட வாய்ப்புகளை அவர்களுக்கு சும்மா கொடுப்பதில்லையாம். அதாவது தான் நினைக்கும் நேரத்தில் அந்த நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வருகிறாராம். இந்த நடிகரால் தானே நாம் உயர்ந்தோம் என்ற விசுவாசத்தில் நடிகைகளும் அட்ஜஸ்ட்மெண்டிற்கு ஒத்துழைத்து வருகிறார்களாம்.

    சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறாராம். தன் திறமையான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகையை அடைய நினைத்த வாரிசு நடிகரின் மகன் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம்.

    நடிகையுடன் எப்படியாவது நட்பு கொள்ள வேண்டும் என கடுமையாக முயற்சிக்கும் வாரிசு நடிகரின் மகன் ஒருபடி மேலே சென்று நடிகையை தான் அழைக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள வற்புறுத்தி வருகிறாராம். இதனால் கோபமான நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.

    வாரிசு நடிகை தன் கவர்ச்சியினால் சினிமாவில் கலக்கி வருகிறாராம். நடிகையின் மீது ஆசைப்பட்ட நடிகர் தன் படத்தில் அந்த நடிகைதான் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம். இதனை அறிந்த வாரிசு நடிகையின் அப்பா அந்த நடிகருடன் மட்டும் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

    இதனை அறிந்த நடிகர் எப்படியாவது அந்த நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறாராம். இதன் முதல் படியாக நடிகர் அந்த கவர்ச்சி நடிகையின் அப்பாவிடம் பேசியுள்ளார். ஆனால் இந்த பிளான் எடுபடாமல் போகவே இயக்குனருடன் சேர்ந்து நடிகையிடம் பேசி வருகிறாராம். இதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

    ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானாராம். எப்படியாவது நடிகையுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலர் தவம் கிடந்தார்களாம். ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே நடிகை திருமணம் செய்து கொண்டாராம்.

    அதன்பின்னர், வரும் படங்களை தட்டிக்கழிக்காமல் நடித்து வருகிறாராம். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை மீது ஆசைப்பட்ட முன்னணி நடிகர் எதாவது சொல்லி நடிகையின் சுண்டுவிரலையாவது தொட்டுவிட வேண்டும் என இயக்குனருடன் சேர்ந்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து வந்தாராம். இதை தெரிந்து கொண்ட நடிகை முடியவே முடியாது என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாரம்.

    பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வந்தாராம். அதன்பின்னர் மீண்டும் நடிக்க வந்த நடிகை, பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டாராம். அந்த நடிகையின் பிறந்தநாளில் நடிகர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தாராம்.

    அப்போது திடீரென நடிகை ஆண்டி ஆகிவிட்டார் என்றும் அவருக்கு வயது 31 கடந்து விட்டது என்றும் நடிகர் தெரிவித்தாராம். பொதுவெளியில் நடிகையின் வயதை கூறியதால் அவர் கோபத்தில் உள்ளாராம்.

    ×