search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்த் திருவிழா"

    • ராசிபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இக்கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறு வது வழக்கம். அதன்படி நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திரு விழா தொடங்கியது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கம்பம் எப்போதும் நடப்பட்டு இருக்கும். இதனால் இங்குள்ள அம்மனை நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பூச்சாட்டுதல்

    இக்கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறு வது வழக்கம். அதன்படி நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திரு விழா தொடங்கியது.

    இதையொட்டி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் வெடித்து சிவன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை வழங்கி வணங்கினர். சுமார் 1 டன் அளவுக்கு பக்தர்கள், மண்டபக் கட்டளைதாரர்கள் அளித்த பூக்களால் அம்மன் மலர் குவியலுக்குள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நாளை (26-ந் தேதி) கம்பம் நடும் விழா நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு குழந்தை வரம் வேண்டுவோருக்கு தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு பூவோடு பற்ற வைத்தல், விடியற்காலை 5 மணிக்கு பூவோடு எடுத்தல் நடக்கிறது. 7-ந் தேதி இரவு கொடியேற்று விழாவும், 8-ந் தேதி காலையில் செல்லாண்டி அம்மன் கோவிலில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், இரவு 10 மணிக்கு அக்கினி குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அக்கினி குண்டம் பிரவேசித்தல் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி வண்டிவேடிக்கை நடக்கிறது. 11-ந் தேதி இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடக்கிறது. அன்று இரவு சப்தாபரணம், வாணவேடிக்கை, நாதஸ்வர கச்சேரி, நையாண்டி மேளதாளத்துடன் நடக்கிறது.

    விழாவையொட்டி தினந்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நந்தகுமார், தக்கார் கீதாமணி மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
    • இங்கு லட்சுமி நரசிம்மர் சாமி மற்றும் சோமேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்க வள்ளியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு லட்சுமி நரசிம்மர் சாமி மற்றும் சோமேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 31-ந் தேதி இரவு சிம்ம வாகனத்தில் சாமி திருவீதி உலா, 2-ந்தேதி சேஷ வாகனம், 2-ந் தேதி அனுமந்த வாகனம், 3-ந் தேதி யானை வாகனம், 4-ந் தேதி திருக்கருட வாகனம் வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அன்று இரவு சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு அபிஷே கங்கள் நடைபெற்றது. இத னைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார்.

    இதன் தொடர்ச்சியாக சாமி தேரில் எழுந்தருளல் நடந்தது. மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட விநாயகர், லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் 3 தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    இன்று(வியாழக்கிழமை) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. விநாயகர் தேர், சோமேஸ்வரர் சாமி தேர், லட்சுமி நரசிம்மர் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கபப்டுகிறது. முன்னாள் அமைச்சர் டி. எம். செல்வகணபதி வடம் பிடித்து தேரை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 5 நாட்கள் இந்த தேரோட்டம் நடைபெறும். 3 தேர்களும் 10-ந் தேதி நிலை சேரும். 11-ந் தேதி சத்தாபரணம், 12-ந் வசந்த உற்சவம், 13-ந்தேதி 7 சுற்று உற்சவத்துடன் விழா நிறைவடையும்.

    இதில் மாவட்ட அறநிலை குழு தலைவர் முருகன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள் தவமணி, கார்த்திக், செல்வம் உட்பட பலர் கலந்து கொள்கி றார்கள். இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்துள்ளார்கள்.

    • நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
    • நாளை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    அந்தியூர்,

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மிக விமரிசையாக குண்டம்- தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொட ங்கியது. இதனையடுத்து மகிசாசுவரா வர்தன நிகழ்வும், தொடர்ந்து கொடி யேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவையொட்டி தினமும் சாமி முக்கிய வீதிகள் வழியாக ஒவ்வொரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதனால் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குண்டம் இறங்க கோவிலல் வளாகத்தில் தங்கி இருந்து வருகிறார்கள்.

    முன்னதாக நாளை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் செய்து கொடுத்து வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான விறகுகளை காணிக்கை யாகவும் செலுத்தி வருகின்றார்கள்.

    அந்த விறகுகள் கோவில் வளாகத்தில் மலை போல் குவிந்து இருக்கின்றது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா வரும் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது.
    • தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா வரும் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக விஜயகிரி பழனியாண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விஜயகிரி பழனியாண்டவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் சாமி ஊர்வலமும், வரும் சனிக்கிழமை சாமி மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ஞாயி ற்றுக்கிழமை அன்று சாமி யானை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், திங்கட்கிழமை திருக்கல்யாணம் உற்சவம், பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று உத்திர நட்சத்திரத்தில் காலை 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் விஜயகிரி பழனியாண்டவர் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதியில் வழியாக சென்று மீண்டும் நிலை சேர்கிறது.

    வியாழக்கிழமை அன்று கொடி இறக்கும் நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • ஸ்ரீ ஆஞ்சநேயரால் கொண்டுவரப்பட்ட சாலகிராமம், நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம்.
    • ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் ஸ்ரீ ஆஞ்சநேயரால் கொண்டுவரப்பட்ட சாலகிராமம், நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம். இந்த மலையின் மேற்குப்பகுதியில் ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை ஸ்ரீ நரசிம்மர் கோவில் மலையைக் குடைந்து குடவறைக் கோவிலாக உள்ளது.

    மலையின் கிழக்குப்பகுதியில் அரங்க நாயகித் தாயாரோடு கூடிய ஸ்ரீ அரங்கநாதர் கோவில் குடவறைக்கோ விலாக உள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனம் கொண்ட நிலையில் அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    ஒரே கல்லினால் உருவான மலையியின் இரண்டு புறமும் குடவறைக் கோவில்களை கொண்டு, சிறப்பு பெற்ற தலமாக நாமக்கல் விளங்கி வருகிறது.

    கோட்டை பகுதியில், மலைக்கு மேற்குப்புறத்தில் 18 உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் நாமக்கல் மலையையும், ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு, ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழா நாட்களில் தினசரி காலை 8 மணிக்கு நரசிம்மசுவாமி கோவிலில் இருந்து ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ அரங்கநாதரும் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். பகல் 11 மணிக்கு மெயின்ரோட்டில் குளக்கரை நாமகிரித்தாயார் திருமண மண்டபத்தில் ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு மீண்டும் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

    7-ம் நாள் திருவிழாவான, வருகிற ஏப்ரல் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நாமகிரித்தாயார் திருமண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பாகும். 8-ம் நாள் திருவிழாவில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபரி உற்சவம் நடைபெறும்.

    9-ம் நாள் திருவிழாவில் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும். காலை 9 மணிக்கு கோட்டையில் ஸ்ரீ நரசிம்மசுவாமி தேரோட்டம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மெயின் ரோட்டில் அரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டம் நடைபெறும். 15-ம் நாள் உற்சவமாக வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறும்.

    விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலை யத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், நாமக்கல் நகர மக்கள், பக்தர்கள் செய்துள்ளனர். 

    • தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.
    • வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசால் தேர் பவனி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றி யத்திற்குட்பட்ட புஷ்பகிரி கிராமத்தில் உள்ள குழந்தை தெரசால் ஆலயத்தின், 8-ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    அன்று முதல் தினமும் மாலை 6- மணிக்கு ஜெப மாலையும், வேண்டுதல் தேர் பவனியுடன் திருப்பலி நிகழ்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் காலை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மாலை 6- மணியளவில் வான வேடிக்கைகளுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசால் தேர் பவனி நடைபெற்றது. இதனை, சுண்டம்பட்டி பங்குத்தந்தை ஜார்ஜ், மந்தரித்து துவக்கி வைத்தார். இந்த தேர்பவனியில் புஷ்பகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுபேதார் மேடு மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந்தேதி குடிஅழைத்தல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • கோவில் தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஆத்தூர்:

    தம்மம்பட்டி கடைவீதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந்தேதி குடிஅழைத்தல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 14-ந் தேதி மறுக்காப்பு கட்டுதல், 15-ந் தேதி எட்டியான் முத்து சுவாமி பெருபூஜை, 16-ந் தேதி இச்சடியான் கோவில் பெரும் பூஜை, அதனை தொடர்ந்து 17-ந் தேதி சிறு தேர் முருகர் போடுதல், செல்லியம்மன் கோவில் பெரும் பூஜை ஆகியவை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து 21-ந் தேதி மாவிளக்கு பூஜை, 22-ந் தேதி மாரியம்மன் பொங்கல் வைத்தல், செல்லியம்மன் குடியழைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நேற்று அதி காலை 4 மணி முதல் பக்தர்கள் கடைவீதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலை சுற்றி உருளு தண்டனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி வந்தனர்.

    பின்பு ஸ்ரீ அம்மன் திருத்தேரில் அமர்த்துதல் நிகழ்ச்சியும், மதியம் தேர் வலம் வருதல் நடை பெற்றது. அப்போது குதிரை யில் எட்டியான் முத்து சுவாமியை பக்தர்கள் தூக்கிக்கொண்டு முன்னால் சென்றனர். அதனை பின்தொடர்ந்து ஸ்ரீ செல்லி யம்மன் தேர், ஸ்ரீ மாரியம்மன் தேர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் தேரை தோளில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர்.

    இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்தத் தேர் திருவிழா நிகழ்ச்சியில் தேர் ஊர்வலம் தம்மம்பட்டி கடைவீதி, நடுவீதி மற்றும் குறும்பர் தெரு சென்று மீண்டும் கடைவீதி வழி யாக மாரியம்மன் கோவில் வளாகத்தை வந்து அடைந்தது. இந்நிகழ்ச்சியில் தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் உறவினர்களுடன் கண்டு மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தம்மம்பட்டி கோவில் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) மாரியம்மன் கோவில் வளாகத்தில் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல், செல்லியம்மன் திருப்பங்கள் வைத்தல் நடைபெற்றன. மாலை சாமி ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி தம்மம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், இந்த திருவிழாவில் செண்டா மேளம், குண்டு மேளம் பாரம்பரிய தப்பட்டை மற்றும் நாதஸ்வரம் மற்றும் குதிரை நடனம் ஆகிய இசைகளை பக்தர்கள் கேட்டு ரசித்தும் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்து தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    ×