search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரகாளியம்மன்"

    • நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
    • நாளை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    அந்தியூர்,

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மிக விமரிசையாக குண்டம்- தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொட ங்கியது. இதனையடுத்து மகிசாசுவரா வர்தன நிகழ்வும், தொடர்ந்து கொடி யேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவையொட்டி தினமும் சாமி முக்கிய வீதிகள் வழியாக ஒவ்வொரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதனால் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குண்டம் இறங்க கோவிலல் வளாகத்தில் தங்கி இருந்து வருகிறார்கள்.

    முன்னதாக நாளை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் செய்து கொடுத்து வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான விறகுகளை காணிக்கை யாகவும் செலுத்தி வருகின்றார்கள்.

    அந்த விறகுகள் கோவில் வளாகத்தில் மலை போல் குவிந்து இருக்கின்றது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×