search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் கருத்து கணிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சத்தீஸ்கரில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும். காங்கிரசுக்கு ஓர் இடம் கிடைக்கும்.
    • இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரசுக்கு 49 தொகுதிகள் கிடைக்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 350 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக 'நியூஸ் 18' ஊடகம் சார்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் கூறியிருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு 77 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 2 தொகுதிகள், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெறும்.

    பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

    மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெறும், இந்தியா கூட்டணிக்கு 7 இடங்கள் கிடைக்கும்.


    மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு 17 இடங்கள் கிடைக்கும்.

    மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2019 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரசுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும்.

    பஞ்சாபில் 13 தொகுதிகள் உள்ளன. இங்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் எதிர் எதிரணிகளாக போட்டியிடுகின்றன. பாஜக கூட்டணி 3-வது அணியாக போட்டியிடுகிறது. பஞ்சாபில் காங்கிரசுக்கு 7, பா.ஜ.க. கூட்ட ணிக்கு 3, ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதி கிடைக்கும்.

    தென் மாநிலங்கள்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 5 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணியை சேர்ந்த தி.மு.க.-காங்கிரசுக்கு 30 தொகுதிகள் கிடைக்கும்.

    கர்நாடகாவில் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 25 தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றும். இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆளும் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.


    கேரளாவில் 20 தொகுதிகள் உள்ளன. இங்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி தனித்தனியாக போட்டியிடுகின்றன. 3-வது அணியாக பா.ஜ.க.வும் களத்தில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 14, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 4 தொகுதிகள் கிடைக்கும். பா.ஜ.க.வுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

    ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாஜக-தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு 25 தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெறும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 7 தொகுதிகள் கிடைக்கும்.

    தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ்., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு 17 தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க. 8, காங்கிரஸ் 6, பிஆர்.எஸ். கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைக்கும்.

    ஜார்க்கண்டில் 14 தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரசுக்கு தலா ஒரு தொகுதி கிடைக்கும்.

    சத்தீஸ்கரில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும். காங்கிரசுக்கு ஓர் இடம் கிடைக்கும்.

    ராஜஸ்தானில் மொத்தம் 25 தொகுதிகள் உள்ளன. ஆளும் பா.ஜ.க. 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஒடிசாவில் 21 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் பிஜு ஜனதா தளம் 8, பா.ஜ.க. 13 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    அசாமில் 14 தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 12-ல் வெற்றி பெறும். ஏஐயுடிஎப், பிபிஎப் கட்சிகள் தலா ஒரு தொகுதியை கைப்பற்றும். உத்தராகண்டின் 5 தொகுதிகளையும் ஆளும் பா.ஜ.க. கைப்பற்றும். குஜராத்தின் 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும். அரியானாவின் 10 தொகுதிகள், டெல்லியின் 7 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தின் 4 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றும். மேற்கண்ட இந்த அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஓர் இடம் கூட கிடைக்காது.

    நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக 350 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரசுக்கு 49 தொகுதிகள் கிடைக்கும். இந்தியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும். இதர கட்சிகள் 27 இடங்களில் வெற்றி பெறும். தேசிய அளவில் பா.ஜ.க. கூட்டணிக்கு 48 சதவீத வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.
    • குரேஷி உள்ளிட்ட ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பலரும் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு வசதியாக 6 தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள 6 சீர்திருத்தங்களில் முதன்மையானது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளையோ, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பது தான்.

    குரேஷி உள்ளிட்ட ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பலரும் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளனர். எனவே, கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 6 சீர் திருத்தங்களையும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×