search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் பருப்பு"

    • மேற்கு பகுதியில் விளையும் தேங்காய் இங்கு உரிக்கப்பட்டு களங்களில் காயவைத்து பருப்பாக மாற்றப்படுகிறது.
    • தொடர் மழை மற்றும் பனி காரணமாக தேங்காய் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது

    காங்கயம் : 

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் அரிசி ஆலைகள் நிறைந்த ஒரு பகுதியாகும். ஆண்டு முழுவதும் இரு மாதங்களை தவிர்த்து மற்ற மாதங்களில் வெயில் மற்றும் சீரான வெப்பமான கால நிலை உள்ள பகுதியாகவும் இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய் குறிப்பாக மேற்கு பகுதியில் விளையும் தேங்காய் இங்கு உரிக்கப்பட்டு களங்களில் காயவைத்து பருப்பாக மாற்றப்படுகிறது.

    இது மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்தும் தேங்காய் கொண்டு வரப்பட்டு உரிக்கப்பட்டு கொப்பரையாகவும் தேங்காய் பருப்பாகவும் மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் பிழியும் ஏராளமான ஆலைகள் இங்கு உள்ளன. இதன்படி சுமார் 1500க்கும் மேற்பட்ட தேங்காய் உலர் களங்களும், 50க்கும் மேற்பட்ட எண்ணெய் பிழியும் ஆலைகளும் உள்ளன.

    இதன் மூலம் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய், கொப்பரை உள்ளிட்ட பொருட்கள் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் டேங்கர் லாரிகள் மூலமும், அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்களிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கே உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் உணவு பயன்பாட்டிற்கும், சோப்பு தயாரிப்பிற்கும், மக்களின் தினசரி பயன்பாட்டிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் டேங்கர்களில் மொத்தமாக வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதனை தங்கள் மாநிலத்தில் சிறிய பாட்டில்களிலும் சாஷே பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இத்தொழில் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். தேங்காயாக கொண்டுவரப்பட்டு உடைக்கப்படும் தேங்காய் தொட்டிகள் ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிக்கவும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தேங்காய் புண்ணாக்கு கால்நடைகளுக்கான தீவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

    காங்கயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தினந்தோறும் தேங்காய் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஒரு வாரமாக 15 கிலோ எடை கொண்ட டின் விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் சீரான விலையில் இருந்து வருகிறது. இதன்படி ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் அதிக பட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.127க்கும், குறைந்த பட்சமாக ரூ.125 க்கும் சராசரியாக விற்பனையானது‌.

    15 கிலோ டின் அதிகபட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.1890க்கும் குறைந்தபட்சமாக ரூ.1860க்கும் விலை நிர்ணயமானது. தேங்காய் புண்ணாக்கு 60 கிலோ மூட்டை ரூ.1560க்கும் ஒரு கிலோ ரூ.26க்கும் வரிகள் சேர்க்காமல் விலை நிர்ணயமானது. இதேபோல் ஆக்டிவேட்டெட் கார்பன் தயாரிக்க பயன்படும் தேங்காய் தொட்டிகள் ஒரு டன் ரூ.12000 என்ற அளவில் விலை போனது‌.

    தொடர்ச்சியாக தேங்காய் பருப்பு விலை வெளி மார்க்கெட்டில் சாதா ரூ.84.50க்கும், ஸ்பெசல் ரூ.85.50க்கும் விற்பனையானது. தற்போது தொடர் மழை மற்றும் பனி காரணமாக தேங்காய் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது

    • செவ்வாய்கிழமை 137விவசாயிகள் கலந்து கொண்டு 71ஆயிரத்து 142கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.30க்கும், குறைந்தபட்சம் ரூ.66.90 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 137விவசாயிகள் கலந்து கொண்டு 71ஆயிரத்து 142கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 14வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.30க்கும், குறைந்தபட்சம் ரூ.66.90 க்கும் கொள்முதல் செய்தனர்.நேற்று மொத்தம் ரூ.56லட்சத்து 2ஆயிரத்து 376க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு சந்தைகளுக்கும், கொப்பரையாகவும் பருப்பாக மாற்றப்பட்டு வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் எண்ணெய் உற்பத்திக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவான உற்பத்தியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள் மூலம் எண்ணெய் பிழியப் பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள் பலவற்றுக்கும் டேங்கர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.49 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளக்கோவில், லாலாபோட்டை, வாணியம்பாடி, முத்தம்பட்டி, திருச்சி, கரூர், வாகரை, தேவத்தூர் பகுதி விவசாயிகள் 140 பேர், 64 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1264 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 19 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு கடந்த மாதத்தை காட்டிலும் ரூ.6 அதிகரித்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ரூ.4 அதிகரித்து ஒரு கிலோ ரூ.60.80 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.49 லட்சது 11 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    தற்போது முகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில் தேங்காய் விலையும் தேங்காய் பருப்பு விலையும் கடகடவென சரிந்து வந்த நிலையில், இந்த வாரம் சற்றே விவசாயிகள் நிம்மதி அடையும் வகையில் விலை உயர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் விலைகளும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • செவ்வாயன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.
    • 140விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 846கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வா யன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 140விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 846கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 19 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 86.40க்கும், குறைந்தபட்சம் ரூ.60.80க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்த ரூ.49லட்சத்து 11ஆயிரத்து 593க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 55ஆயிரத்து 470கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 75.35க்கும், குறைந்தபட்சம் ரூ.53.65க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    நேற்று செவ்வாய்கிழமை 103 விவசாயிகள் கலந்து கொண்டு 55ஆயிரத்து 470கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த மொத்தம் 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 75.35க்கும், குறைந்தபட்சம் ரூ.53.65க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்த ரூ.36 லட்சத்து 85ஆயிரத்து 677க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 191விவசாயிகள் கலந்து கொண்டு93 ஆயிரத்து 118கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 76.65க்கும், குறைந்தபட்சம் ரூ.54க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    தீபாவளி பண்டிகையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த தேங்காய் பருப்பு ஏலம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. நேற்று 191விவசாயிகள் கலந்து கொண்டு93 ஆயிரத்து 118கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 76.65க்கும், குறைந்தபட்சம் ரூ.54க்கும் கொள்முதல் செய்தனர்.நேற்று மொத்தம் ரூ.62லட்சத்து 39ஆயிரத்து 823க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,766 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தமாக 85,805 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 61 லட்சத்து 84 ஆயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,766 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 96 காசுக்கும், அதிகபட்ச விலையாக 79 ரூபாய் 8 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 10 காசுக்கும், இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 53 ரூபாய் 59 காசுக்கும், அதிகபட்ச விலையாக 71 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 67 ரூபாய் 90 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 85,805 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 61 லட்சத்து 84 ஆயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
    • 153 விவசாயிகள் கலந்து கொண்டு 96 ஆயிரத்து 386 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 153 விவசாயிகள் கலந்து கொண்டு 96 ஆயிரத்து 386 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.80க்கும், குறைந்தபட்சம் ரூ.56.65க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.65லட்சத்து 98ஆயிரத்து 91க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 32 ஆயிரத்து 986 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.95க்கும், குறைந்தபட்சம் ரூ.63.15க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 76விவசாயிகள் கலந்து கொண்டு 32 ஆயிரத்து 986 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.95க்கும், குறைந்தபட்சம் ரூ.63.15க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.23லட்சத்து 48ஆயிரத்து 82க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 84.60க்கும், குறைந்தபட்சம் ரூ.69 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்,இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை.

    திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 138 விவசாயிகள் கலந்து கொண்டு 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 84.60க்கும், குறைந்தபட்சம் ரூ.69 க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று முன் தினம் மொத்த ரூ.54லட்சத்து 66ஆயிரத்து 61க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்பருப்பு ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 260 மூட்டைகள் தேங்காய்பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 65 காசுக்கும், அதிகபட்ச விலையாக 85 ரூபாய் 16 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 66 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 29 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 9 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 12,741 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 86.05க்கும், குறைந்தபட்சம் ரூ.69.70க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். செவ்வாய்கிழமை 158விவசாயிகள் கலந்து கொண்டு 85 ஆயிரத்து 727கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 5 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 86.05க்கும், குறைந்தபட்சம் ரூ.69.70க்கும் கொள்முதல் செய்தனர்.

    மொத்த ரூ .68லட்சத்து 60ஆயிரத்து 252க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    ×