search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut dal"

    • திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது.

    இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள், 15 மூட்டைகள் (704 கிலோ) தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.

    இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.53 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.89-க்கும், குறைந்த பட்சமாக ரூ.62-க்கும், சராசரியாக ரூ.88- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    • நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் அன்று தேங்காய் பருப்பும், வியாழன் அன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.89 க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

     முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4 விவசாயிகள் 18 மூட்டைகள் (902 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.74 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.84-க்கும், குறைந்த பட்சமாக ரூ.60-க்கும், சராசரியாக ரூ.60- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். டெண்டர் முறையில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.35-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 63 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 2 ஆயிரத்து 52 தேங்காய்களும், 21 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.1.40-ம், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.6.85-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 4 டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 65-க்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • மேற்கு பகுதியில் விளையும் தேங்காய் இங்கு உரிக்கப்பட்டு களங்களில் காயவைத்து பருப்பாக மாற்றப்படுகிறது.
    • தொடர் மழை மற்றும் பனி காரணமாக தேங்காய் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது

    காங்கயம் : 

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் அரிசி ஆலைகள் நிறைந்த ஒரு பகுதியாகும். ஆண்டு முழுவதும் இரு மாதங்களை தவிர்த்து மற்ற மாதங்களில் வெயில் மற்றும் சீரான வெப்பமான கால நிலை உள்ள பகுதியாகவும் இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய் குறிப்பாக மேற்கு பகுதியில் விளையும் தேங்காய் இங்கு உரிக்கப்பட்டு களங்களில் காயவைத்து பருப்பாக மாற்றப்படுகிறது.

    இது மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்தும் தேங்காய் கொண்டு வரப்பட்டு உரிக்கப்பட்டு கொப்பரையாகவும் தேங்காய் பருப்பாகவும் மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் பிழியும் ஏராளமான ஆலைகள் இங்கு உள்ளன. இதன்படி சுமார் 1500க்கும் மேற்பட்ட தேங்காய் உலர் களங்களும், 50க்கும் மேற்பட்ட எண்ணெய் பிழியும் ஆலைகளும் உள்ளன.

    இதன் மூலம் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய், கொப்பரை உள்ளிட்ட பொருட்கள் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் டேங்கர் லாரிகள் மூலமும், அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்களிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கே உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் உணவு பயன்பாட்டிற்கும், சோப்பு தயாரிப்பிற்கும், மக்களின் தினசரி பயன்பாட்டிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் டேங்கர்களில் மொத்தமாக வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதனை தங்கள் மாநிலத்தில் சிறிய பாட்டில்களிலும் சாஷே பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இத்தொழில் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். தேங்காயாக கொண்டுவரப்பட்டு உடைக்கப்படும் தேங்காய் தொட்டிகள் ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிக்கவும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தேங்காய் புண்ணாக்கு கால்நடைகளுக்கான தீவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

    காங்கயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தினந்தோறும் தேங்காய் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஒரு வாரமாக 15 கிலோ எடை கொண்ட டின் விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் சீரான விலையில் இருந்து வருகிறது. இதன்படி ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் அதிக பட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.127க்கும், குறைந்த பட்சமாக ரூ.125 க்கும் சராசரியாக விற்பனையானது‌.

    15 கிலோ டின் அதிகபட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.1890க்கும் குறைந்தபட்சமாக ரூ.1860க்கும் விலை நிர்ணயமானது. தேங்காய் புண்ணாக்கு 60 கிலோ மூட்டை ரூ.1560க்கும் ஒரு கிலோ ரூ.26க்கும் வரிகள் சேர்க்காமல் விலை நிர்ணயமானது. இதேபோல் ஆக்டிவேட்டெட் கார்பன் தயாரிக்க பயன்படும் தேங்காய் தொட்டிகள் ஒரு டன் ரூ.12000 என்ற அளவில் விலை போனது‌.

    தொடர்ச்சியாக தேங்காய் பருப்பு விலை வெளி மார்க்கெட்டில் சாதா ரூ.84.50க்கும், ஸ்பெசல் ரூ.85.50க்கும் விற்பனையானது. தற்போது தொடர் மழை மற்றும் பனி காரணமாக தேங்காய் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது

    • இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
    • 153 விவசாயிகள் கலந்து கொண்டு 96 ஆயிரத்து 386 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 153 விவசாயிகள் கலந்து கொண்டு 96 ஆயிரத்து 386 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.80க்கும், குறைந்தபட்சம் ரூ.56.65க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.65லட்சத்து 98ஆயிரத்து 91க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    ×