search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை-பனியால் தேங்காய் பருப்பு   உற்பத்தி பாதிப்பு
    X

    மழை-பனியால் தேங்காய் பருப்பு உற்பத்தி பாதிப்பு

    • மேற்கு பகுதியில் விளையும் தேங்காய் இங்கு உரிக்கப்பட்டு களங்களில் காயவைத்து பருப்பாக மாற்றப்படுகிறது.
    • தொடர் மழை மற்றும் பனி காரணமாக தேங்காய் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் அரிசி ஆலைகள் நிறைந்த ஒரு பகுதியாகும். ஆண்டு முழுவதும் இரு மாதங்களை தவிர்த்து மற்ற மாதங்களில் வெயில் மற்றும் சீரான வெப்பமான கால நிலை உள்ள பகுதியாகவும் இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய் குறிப்பாக மேற்கு பகுதியில் விளையும் தேங்காய் இங்கு உரிக்கப்பட்டு களங்களில் காயவைத்து பருப்பாக மாற்றப்படுகிறது.

    இது மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்தும் தேங்காய் கொண்டு வரப்பட்டு உரிக்கப்பட்டு கொப்பரையாகவும் தேங்காய் பருப்பாகவும் மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் பிழியும் ஏராளமான ஆலைகள் இங்கு உள்ளன. இதன்படி சுமார் 1500க்கும் மேற்பட்ட தேங்காய் உலர் களங்களும், 50க்கும் மேற்பட்ட எண்ணெய் பிழியும் ஆலைகளும் உள்ளன.

    இதன் மூலம் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய், கொப்பரை உள்ளிட்ட பொருட்கள் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் டேங்கர் லாரிகள் மூலமும், அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்களிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கே உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் உணவு பயன்பாட்டிற்கும், சோப்பு தயாரிப்பிற்கும், மக்களின் தினசரி பயன்பாட்டிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் டேங்கர்களில் மொத்தமாக வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதனை தங்கள் மாநிலத்தில் சிறிய பாட்டில்களிலும் சாஷே பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இத்தொழில் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். தேங்காயாக கொண்டுவரப்பட்டு உடைக்கப்படும் தேங்காய் தொட்டிகள் ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிக்கவும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தேங்காய் புண்ணாக்கு கால்நடைகளுக்கான தீவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

    காங்கயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தினந்தோறும் தேங்காய் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஒரு வாரமாக 15 கிலோ எடை கொண்ட டின் விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் சீரான விலையில் இருந்து வருகிறது. இதன்படி ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் அதிக பட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.127க்கும், குறைந்த பட்சமாக ரூ.125 க்கும் சராசரியாக விற்பனையானது‌.

    15 கிலோ டின் அதிகபட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.1890க்கும் குறைந்தபட்சமாக ரூ.1860க்கும் விலை நிர்ணயமானது. தேங்காய் புண்ணாக்கு 60 கிலோ மூட்டை ரூ.1560க்கும் ஒரு கிலோ ரூ.26க்கும் வரிகள் சேர்க்காமல் விலை நிர்ணயமானது. இதேபோல் ஆக்டிவேட்டெட் கார்பன் தயாரிக்க பயன்படும் தேங்காய் தொட்டிகள் ஒரு டன் ரூ.12000 என்ற அளவில் விலை போனது‌.

    தொடர்ச்சியாக தேங்காய் பருப்பு விலை வெளி மார்க்கெட்டில் சாதா ரூ.84.50க்கும், ஸ்பெசல் ரூ.85.50க்கும் விற்பனையானது. தற்போது தொடர் மழை மற்றும் பனி காரணமாக தேங்காய் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது

    Next Story
    ×