search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் வாரச்சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் - ரூ.1.5 கோடிக்கு விற்பனை
    X
    கோப்புபடம். 

    வெள்ளகோவில் வாரச்சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் - ரூ.1.5 கோடிக்கு விற்பனை

    • நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் அன்று தேங்காய் பருப்பும், வியாழன் அன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.89 க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×