search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கு போட்டு தற்கொலை"

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
    • வாழ்க்கையில் விரக்தியடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டியை சேர்ந்தவர் முரளிகுமார் (25). ரெடிமேட் ஜவுளி வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஆண்குழந்தை ஒன்று உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முரளிகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் முரளி குமார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்

    ஈரோடு,

    ஈரோடு வில்லரசம்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணி (53). இவரது மனைவி கவிதா. மணி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு காசி பாளையம் கிளையில் கடந்த 22 வருடமாக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மணி வீட்டில் அடிக்கடி பீடி குடித்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணி கோபித்து கொண்டு மனைவி யுடன் சில நாட்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மணி வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி யிடம் சாப்பாடு கேட்ட போது நீங்கள் வெளியில் சாப்பிட்டு வந்து விடுவீர்கள் என நினைத்து வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம் என்று கூறியுள்ளார்.

    இதனால் கோபித்து கொண்டு வீட்டின் மேல் மாடிக்கு மணி தூங்க சென்று விட்டார். காலை கவிதா மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • கிருஷ்ணகுமார் வீட்டில் பேனில் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 38). இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கிருஷ்ணகுமாருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போனில் மனைவியுடன் தகராறு செய்து கொண்டு கிருஷ்ணகுமார் வீட்டில் தூக்குபோட்டு கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பினனர் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இதையடுத்து கிருஷ்ணகுமாரின் மனைவி கோமதி அவருடன் கோபித்து கொண்டு தனது மகள்களுடன் பு.புளியம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகுமார் மீண்டும் நேற்று மதியம் வீட்டில் பேனில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உமா சங்கரி மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
    • மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிசேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி உமா சங்கரி (வயது 40). மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக உமா சங்கரி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது தந்தை சந்திரசேகர் வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள கரண்டிபாளையம், முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 35).

    இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். பழனிச்சாமிக்கும், சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பழனிச்சாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டார். அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சத்தியா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் சதயா மீண்டும் வீட்டுக்கு வர வில்லை.

    இதனால மன வேதனை யில இருந்த பழனிச்சாமி நேற்று வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி கொண்டார். இதனைக் கண்ட அவரது மகன் அபிஷேக் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் பழனிச்சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாகடர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×