search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துவக்கவிழா"

    • நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.
    • கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி உலகநாத நாராயணசாமி கலை கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு ஆதிதிராவிட கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வரவேற்றார்.

    பொன்னேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் சித்ரா, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லூரி முதல்வர் தில்லை நாயகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு விடுதிகளில் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் நிலைகள் குறைத்து எடுத்துரைத்தனர் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர். செரின் ஆசா அண்ணல் அம்பேத்கரின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்தும், சாதியல் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி கல்வியால் சட்டம் பயின்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியில் உருவாக்கினார் என்பது குறித்தும் தியாகங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பூபதிஜான், பட்டதாரி காப்பாளினி மரிய ஜெயந்தி, கல்லூரி தமிழ் பேராசிரியர் தேவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி லேஜா உள்ளிட்டோர் நோக்க உரையாற்றினர். பட்டதாரி காப்பாளர் நன்றி உரையாற்றினார். கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமின் போது 5 பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளும், 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டு வளர் இளம் பெண்களுக்கு இயற்கை நல பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

     பல்லடம்:

    கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் வரவேற்றார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே. செல்வராஜ் எம்.எல்.ஏ., பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த சிறப்பு முகாமை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்து சிறப்பு முகாம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து குறிப்பு விளக்கி பேசினார். இந்த முகாமின் போது 5 பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளும், 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டு வளர் இளம் பெண்களுக்கு இயற்கை நல பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமின் போது வடமலைபாளையம் மற்றும் அய்யம்பாளையத்தை சேர்ந்த 84 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும், அறிவொளி நகரை சேர்ந்த 50 நபர்களுக்கு சாதி சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் மொத்தம் 640 பேர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில் பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல் நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு துவக்கவிழா நடைபெற்றது
    • புதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் நாள் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை தாங்கினார். புதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.

    முதல்நாள் வகுப்பிற்கு வந்துள்ள மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களை பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவி தங்கம்மூர்த்தி, மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சி.இ.ஓ. காவியா மூர்த்தி மற்றும் பேராசிரியர் அபிராமி கருப்பையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக ஆசிரியர் மனசுதிட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிகரம் சதீஷ்குமார் கலந்து கொண்டார்.

    விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி மற்றும் மேல்நிலைவகுப்பு ஆசிரியர்கள் கமல்ராஜ், துர்காதேவி, ஜெயசுதா, தனம்பாலமுருகன், பால்ராஜ், சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், மேலாளர் ராஜா மற்றும் திரளான ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். முன்னதாக ஆசிரியர் கனியன் செல்வராஜ் வரவேற்றார். விழாவினை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில் அபிராம சுந்தரி நன்றி கூறினார்.

    ×