search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு"

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார். துணை ஜனாதிபதியின் புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #VenkaiahNaidu
    புதுச்சேரி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார்.

    சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் வரவேற்றனர்.

    இதையடுத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கார் மூலம் காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

    அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். அங்கு மதிய உணவுக்கு பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் கட்டப்பட்டு உள்ள உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம், விடுதி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. அதில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர் செல்லும் சாலைகளின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு 50 அடி தூரத்துக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். #VenkaiahNaidu
    துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை காலை புதுவை வருகிறார்.
    புதுச்சேரி:

    துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை (வெள்ளிக் கிழமை) காலை புதுவை வருகிறார்.

    காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக் கழகத்துக்கு செல்லும் அவர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பின் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் லாஸ் பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

    புதுவைக்கு நாளை வரும் வெங்கையா நாயுடுவை வரவேற்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    புதுவை பல்கலைக்கழகத்தில் வருகிற 6-ந் தேதி நடைபெறும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் இருந்து புதுவை வருகிறார். #VicePresidentVenkaiahNaidu
    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் வருகிற 6-ந் தேதி மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

    புதுவை பல்கலைக்கழக மாணவர்களுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துரையாடுகிறார். இதற்காக 6-ந்தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புதுவை விமான நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வருகிறார்.



    அங்கு அவரை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை பல்லைக்கழகம் செல்கிறார்.

    புதுவை பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து புதுவை அரசு சார்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். அன்றைய தினம் மாலையே டெல்லி புறப்பட்டு செல் கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #VicePresidentVenkaiahNaidu

    பனாமா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Panama
    பனாமா சிட்டி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவுதமாலா, பனாமா மற்றும் பெரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல் கட்டமாக டெல்லியில் இருந்த புறப்பட்ட அவர், ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தில் இரண்டாம் கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரது முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Panama
    ×