search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு"

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வீட்டில் இன்று தீபாவளி விருந்து அளித்தார். #VenkaiahNaidu #Modi #DiwaliLunch
    புதுடெல்லி: 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார். அங்கு அவரை வரவேற்ற வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியுடன் தற்போதைய நாட்டு நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அதன்பின்னர், தீபாவளி விருந்தாக மதிய உணவு அளித்தார்.  அப்போது, சமீபத்தில் 7 நாள் பயணமாக ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட நாடுகளுக்கு  சுற்றுப்பயணம் செய்து வந்தது குறித்து ஆலோசித்தனர்.



    இதுதொடர்பாக துணை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். அப்போது அவருக்கு தீபாவளி விருந்தாக மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.  #VenkaiahNaidu #Modi #DiwaliLunch
    ஆப்ரிக்க நாடுகளுக்கு 6 நாள் அரசு முறை பயணமாக சென்று இருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று டெல்லி வந்தடைந்தார். #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அக்டோபர் 31-ம் தேதி ஆப்ரிக்க நாடுகளுக்கான தனது அரசு முறை பயணத்தை துவக்கினார். பயணத்தின் முதல் நாடாக போட்ஸ்வானாவுக்கு சென்றடைந்தார். அதன் பின்னர் ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

    6 நாட்கள் தனது அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை 6.45 மணியளவில் டெல்லி வந்தடைந்தார். இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பயணம் மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

    3 நாடுகளுடனான உறவு இந்த பயணத்தின் மூலம் மேம்பட்டதாகவும், அதன்மூலம் முழுமையான திருப்தி அடைந்ததாகவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். #VenkaiahNaidu
    ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் 7 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று இரவு டெல்லி புறப்பட்டார். #VenkaiahNaidu #Africa
    லிலோங்வே:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
     
    தனது பயணத்தின் முதல் நாடாக போட்ஸ்வானாவுக்கு சென்றார். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா - போட்ஸ்வானா இடையேயான சந்திப்பில், அந்நாட்டு துணை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். போட்ஸ்வானாவின் 13-ம் ஆண்டு உலகளாவிய வருடாந்திர கண்காட்சியை துவங்கி வைத்தார் தொடர்ந்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் கலந்துரையாடினார்.

    அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாடாக ஜிம்பாப்வே சென்றார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அந்நாட்டு அதிபர், துணை ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி, சபாநாயகர் ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    தனது பயணத்தின் இறுதியாக, மலாவி சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்த நாட்டின் அதிபர் மற்றும் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினார். இந்தியா-மலாவி இடையே அமைதியான நோக்கத்துக்கான அணுசக்தி உற்பத்தி, இருநாடுகளில் இருந்தும் தேடப்படும் நபர்களை ஒப்படைத்தல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

    இந்நிலையில், ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் தனது 7 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று இரவு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #VenkaiahNaidu #Africa
    அக்டோபர் 31-ம் தேதி முதல் 7 நாட்களுக்கு ஆப்ரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பயணம் மேற்கொள்ள உள்ளார். #VenkaiahNaidu #Africa
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை 7 நாட்கள் அரசு முறை பயணமாக மலாவி, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தனது பயணத்தின் முதல் நாடாக போட்ஸ்வானாவுக்கு செல்ல உள்ளார் வெங்கையா நாயுடு. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா - போட்ஸ்வானா இடையேயான சந்திப்பில், அந்நாட்டு துணை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    மேலும், போட்ஸ்வானாவின் 13-ம் ஆண்டு உலகளாவிய வருடாந்திர கண்காட்சியை துவங்கி வைக்க இருக்கிறார். தொடர்ந்து, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் கலந்துரையாட உள்ளார்.

    இரண்டாவது நாடாக ஜிம்பாப்வே செல்லும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டின் அதிபர், துணை ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி, சபாநாயகர் ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    தனது பயணத்தின் இறுதி நாடாக மலாவி செல்ல உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டின் அதிபர் மற்றும் சபாநாயகருடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #VenkaiahNaidu #Africa
    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் சென்றடைந்தார். #VenkaiahNaidu #ASEM2018
    பிரஸ்ஸல்ஸ்:

    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்று தொடங்குகிறது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பு நல்க ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இது மிகவும் முக்கியமான கூட்டமாக அமைந்துள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சை சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    பெல்ஜியம் சென்றுள்ள வெங்கையா நாயுடு, அந்நாட்டு அரசர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

    மேலும்,, அந்நாட்டில் உள்ள ஜெயின் கலாச்சார மையத்தில் பெல்ஜியம்வாழ் இந்திய மக்களிடம் உரையாற்ற உள்ளார். அதன் பின்னர், பிரஸ்ஸல்ஸின் ஆண்ட்வர்ப் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #VenkaiahNaidu #ASEM2018
    மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் கல்லூரியின் பிளாட்டினம் ஜூப்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார்.

    இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். #TirupatiTemple #VenkaiahNaidu
    திருமலை:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

    இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். திருப்பதி கோவிலில் முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டும்.


    திருப்பதி தேவஸ்தானம் முக்கிய பிரமுகர்கள் ஒரு முறை மட்டுமே சாமி தரிசனம் செய்யும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும்.

    தமிழக முதல்-அமைச்சர் தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வேறு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவோயிஸ்டுகள் குறித்து கேட்ட கேள்விக்கு கோவிலில் இதுகுறித்து எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்றார்.  #TirupatiTemple #VenkaiahNaidu
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். #TirupatiTemple #VenkaiahNaidu #EdappadiPalaniswami
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு காரில் திருமலைக்கு வந்தார்.

    அவர்கள், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருமலையில் உள்ள வராகசாமி கோவில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து நடந்தே பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்றனர்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமலைக்கு வந்ததையொட்டி, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது. முன்னதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்று பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை போர்த்தினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி சென்றார். அங்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை அணிவித்தபோது எடுத்த படம்.

    அப்போது இருவரும் சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் நடந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.

     திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி சாமி தரிசனம் செய்த காட்சி.

    தரிசனத்திற்குப் பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி கவுரவித்தனர். ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சாமி கோவில் அருகே தேங்காய் உடைத்து பின்னர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தார்.

    ஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று காலையில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    தமிழக முதல்-அமைச்சர் தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வேறு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. மாவோயிஸ்டுகள் குறித்து கேட்ட கேள்விக்கு திருமலையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.  #TirupatiTemple  #VenkaiahNaidu #EdappadiPalaniswami
    ஒரு வாரம் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மால்டா நாட்டின் அதிபரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #MaltaPresident #MarieLouiseColeiroPreca
    வல்லெட்டா:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.

    இதைத்தொடர்ந்து, வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



    இந்நிலையில், தனது பயணத்திட்ட நாடுகளில் ஒன்றான மால்டாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்றடைந்தார். அரசு மரியாதையுடன் வரவேற்பு பெற்ற ஜனாதிபதி பின்னர் அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோ ப்ரெகாவை சந்தித்தார்.

    இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் மற்றும் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. #VenkaiahNaidu #MaltaPresident #MarieLouiseColeiroPreca
    தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினார். #VenkaiahNaidu
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
     
    முதல் கட்டமாக, செர்பியா சென்றடைந்த வெங்கையா நாயுடுவுக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், செர்பியா அதிபர் அலெக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. அப்போது இரு நாடுகளின் உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இர்நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மால்டாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புளோரியானா பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினார். அப்போது இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu
    சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #Chicago #WorldHinduCongress #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1892-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இந்து சமயம் பற்றி ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. அந்த நிகழ்வின் 125-வது ஆண்டையொட்டி உலக இந்து சமய மாநாடு சிகாகோ நகரில் வருகிற 7-ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
     
    அகில உலக இந்து அமைப்புகள், உலக அளவிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் உள்பட 3 அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்து சமயத்தை பின்பற்றி உலகம் முழுவதும் பணியாற்றும் பல்துறை வல்லுனர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஷ்வரன் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். தமிழகத்தில் இருந்து பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் உலக இந்து சமய மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chicago #WorldHinduCongress #VenkaiahNaidu
    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று விருதுகளை வழங்கினார். #NationalTeachersAwards
    புதுடெல்லி:

    சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸதி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


    இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. #NationalTeachersAwards
    ×