search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vice president venkaih naidu"

    ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் 7 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று இரவு டெல்லி புறப்பட்டார். #VenkaiahNaidu #Africa
    லிலோங்வே:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
     
    தனது பயணத்தின் முதல் நாடாக போட்ஸ்வானாவுக்கு சென்றார். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா - போட்ஸ்வானா இடையேயான சந்திப்பில், அந்நாட்டு துணை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். போட்ஸ்வானாவின் 13-ம் ஆண்டு உலகளாவிய வருடாந்திர கண்காட்சியை துவங்கி வைத்தார் தொடர்ந்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் கலந்துரையாடினார்.

    அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாடாக ஜிம்பாப்வே சென்றார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அந்நாட்டு அதிபர், துணை ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி, சபாநாயகர் ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    தனது பயணத்தின் இறுதியாக, மலாவி சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்த நாட்டின் அதிபர் மற்றும் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினார். இந்தியா-மலாவி இடையே அமைதியான நோக்கத்துக்கான அணுசக்தி உற்பத்தி, இருநாடுகளில் இருந்தும் தேடப்படும் நபர்களை ஒப்படைத்தல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

    இந்நிலையில், ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் தனது 7 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று இரவு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #VenkaiahNaidu #Africa
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொதுமக்கள் தரிசிக்கும் வைகுண்டம் கியூவில் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. #TirupatiTemple #VenkaiahNaidu
    திருமலை:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    வி.ஐ.பி.க்கள் வரும்போது பாதுகாப்பு கருதி அவர்களை மகாதுவாரம் வழியாக சுவாமி தரிசனம் செய்ய வழியனுப்பி வைப்பார்கள். ஆனால், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பொதுமக்கள் சர்வ தரிசனம் செய்யும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக நடந்து வந்து திருப்பதி பெருமாளை தரிசித்தார்.
     


    விஐபி ஒருவர் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக வந்து சாமியை தரிசித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதால் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என தெரிவித்தார். #TirupatiTemple #VenkaiahNaidu
    ×