search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிர விசாரணை"

    • நேற்று மதியம் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு சம்பூர்ணா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீஸ் விசாரணை யில் மர்ம நபர்கள் போலீசார் என்று பொய் சொல்லி மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு அகில்மேடு வீதியைச் சேர்ந்தவர் அர்த்தனாரி. அதே பகுதியில் ஓட்டல் வைத்து உள்ளார். இவரது மனைவி சம்பூர்ணா (60). கணவருடன் ஓட்டலை கவனித்து வந்தார்.

    நேற்று மதியம் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு சம்பூர்ணா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சம்பூரணத்திடம் வந்து தங்களை போலீசார் என்று அறிமுகம் படுத்திக்கொண்டு இங்கு வழிப்பறி அதிகமாக நடப்ப தால் கழுத்தில் நகைகளை போட்டு செல்ல வேண்டாம் கழற்றி கொடுங்கள்.

    பாதுகாப்பாக நாங்கள் காகிதத்தில் மடித்து கொடுக்கிறோம். வீட்டிற்கு சென்றதும் கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

    இதனை உண்மை என்று நம்பிய சம்பூர்ணா தான் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்து ள்ளார்.

    அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் காகிதத்தில் பொட்டலமாக மடித்து அவரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்டு சம்பூர்ணாவும் வீட்டிற்கு சென்று விட்டார்.

    வீட்டுக்கு சென்று பொட்டலத்தைப் பிரித்து பார்த்த போது தான் அதில் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். போலீஸ் விசாரணை யில் மர்ம நபர்கள் போலீசார் என்று பொய் சொல்லி மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையை தீவிரப்ப டுத்தியுள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். போலீசார் எப்போதும் இதுபோன்று பெண்களிடம் சென்று நகைகளை கழற்றி கொடுங்கள் .

    காகிதத்தில் பொட்டலமாக மடித்து வைத்து தருகிறோம் என்று கூற மாட்டார்கள். இவ்வாறாக யாராவது போலீஸ் என்று கூறி வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    அவர்களை நம்பி நகைகளை கொடுக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • பநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரியக்கொள்ளியூருக்கு வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டு ரோடு அடுத்த பெரிய க்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 33). பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த 11ம் தேதி உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரியக்கொள்ளியூருக்கு வந்தார்.இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விளைநிலத்தில் சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பகண்டை கூட்டுரோடு போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவரை பாளையம் தர்கா கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    • முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் அருகே உள்ள அவினாசி கவுண்டர் பாளையம் பகுதியை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 68). விவசாயி. இவரது விவசாய நிலம் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே உள்ள இந்திரா நகரில் உள்ளது.

    வக்கீல் தோட்டம் என்று அழைக்கப்படும் அவரது தோட்டத்தில் பண்ணை வீடும் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் முத்து சாமி தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 9-ந் தேதி பண்ணை வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் ரூ.27 லட்சம் வைத்து விட்டு பீரோவை பூட்டி வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி முத்துசாமி பண்ணை வீட்டை பூட்டி விட்டு திருப்பூர் சென்று விட்டார். அப்போது அவர் பீரோவை பூட்டாமல் சென்று விட்டதாக கூறப்படு கிறது.

    இதற்கிடையே நேற்று முன் தினம் பண்ணை வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் தங்கராஜ் என்பவர் முத்துசாமிக்கு போன் செய்து வீட்டின் பின்புறம் உள்ள ஏணி சாய்ந்து கிடப்பதாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த முத்துசாமி உடனடியாக பவானிசாகர் பண்ணை வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த ரூ.27 லட்சம் மாயமாகி இருந்ததும் தெரிய வந்தது.

    முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து முத்துசாமி பவானிசாகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசா ரணை நடத்தினர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கபட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாளவாடி போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்வம், கோபிசெட்டிபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் தனி தனியாக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    ×