search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ"

    • வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.
    • தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி விஜயா (வயது55). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று விஜயா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

    இருந்த போதும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.

    மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ. 7 லட்சம், 2 பவுன் தங்க நகை, வீட்டின் பட்டா , மற்றும் அவரது பேரக் குழந்தையின் சான்றிதழ்கள் எரிந்த நிலையில் இருந்தன. இதனை வீட்டிற்கு வந்து பார்த்த விஜயா கதறி அழுதார்.

    தீ விபத்து குறித்து, விஜயாவின் வீட்டின் அருகே தாழ்வான மின் கம்பி செல்கிறது. மின் கசிவின் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிகிறது.

    கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள தாழ்வான மின் கம்பிகளை அப்புறப்படுத்தி சீர்செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் ஜவுளிக்கடையை மூடிச் சென்றனர்.
    • தீவிபத்தால் பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்போரூர்:

    சென்னை தி.நகரைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேன், அப்துல்லா. இவர்கள் பழைய கேளம்பாக்கம், மாமல்லபுரம் சாலையில் 2 மாடிகள் கொண்ட ஜவுளிக் கடை நடத்தி வருகின்றனர்.

    இங்கு துணிகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் ஜவுளிக்கடையை மூடிச் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி 2 மாடிகளும் பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சிறுசேரி, திருப்போரூர், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு துறை உதவி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் விரைந்து வந்தனர். கடை இருந்த இடம் குறுகலான இடம் என்பதால் பொக்லைன் இயந்திரம் மூலம் கடையின் ஷட்டரை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    கடையில் இருந்த துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி எரிந்ததால் அப்பகுதிய முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. சுமார் 4 மணிபோராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த அணைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. தீ விபத்தை பார்த்து கடையின் உரிமையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

    சேதமதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தீவிபத்தால் பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து திருப்போரூர் நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும் மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    • மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ எரிந்து வருகிறது
    • 4-வது நாளாக தீ எரிந்து வருகிறது

    கரூர்

    கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை. 4-வது நாளாக நேற்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறி வருகின்றனர்.

    • கரும்புகை-மூச்சுத்திணறலால் மக்கள் அவதி அடைந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே ஏராளமான பழைய கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அங்கு சேகரமாகும் குப்பைகள் சிறுமுகை மின்வாரிய பவர் ஹவுஸ் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அந்த குப்பை தொட்டியில் நேற்று காலை மர்ம நபர்கள் தீ வைத்தனர். கார் உதிரிபாக கழிவு என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்து பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில் சிறுமுகை ரோட்டில் கார் உதிரி பாகங்களின் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதால் தீ எளிதில் பரவி புகை மூட்டம் ஏற்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்சென்று அதனை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் திடீர் என்று தீப்பற்றி எரிந்தது.
    • வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் -வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் இருந்து திருக்காடுதுறை செல்லும் பிரிவு சாலை அருகே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது .அதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கழிவுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார்.
    • காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி விவசாயி, இவர் தனது விவசாய தோட்டத்தில் கருப்பு சாகுபடி செய்திருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார். காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் விவசாயம் செய்யப்படாமல் பல்வேறு செடி கொடிகள் முளைத்து காய்ந்து இருந்த செடிகளில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்த பொது மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக அருகில் இருந்த தோட்டத்துக்கும் பரவியது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததனர்.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர் இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கறம்பக்குடி அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சி குழப்பென்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விவசாயி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் தைல மரக்காடு உள்ளது. இந்த தைல மரக்காடு நேற்று திடீரென தீ பற்றி எரிந்தது. இது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலை அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அனைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.
    • தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் ராமையன்பட்டி யில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.

    5 கிலோ மீட்டர்

    அப்போது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்தது. இதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பெரும்பகுதி தீ அணைக்கப்பட்ட நிலையில் தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர். இன்று 4-வது நாளாக குப்பைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிளறி அதில் தீப்பிடித்திருந்தால் தண்ணீர் பீய்ச்சி அடித்து அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதேபோல் லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு அதனை கொட்டும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இதனால் பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குறிப்பிட்ட சில இடங்களில் புகை மூட்டம் காணப்பட்டது.  

    • மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்து நாசமானது
    • கீரமங்கலம் போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை, 

    கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், விவசாயி. நேற்று முன்தினம் இரவு ஜெய்சங்கர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜெய்சங்கர் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீமளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் மாட்டுக்கொட்டகை எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றின் வேகத்தால் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
    • தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சேகரிக்கப்படும் சுமார் 110 டன் குப்பைக் கழிவுகள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும்.

    தீ விபத்து

    அவ்வாறு கொண்டு செல்லப்படும் குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து எரிந்து விடும். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது.

    காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டம்

    இதற்கிடையே இந்த பயங்கர தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர்.

    நேற்று 2-வது நாளாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    சாலைமறியல்

    இந்நிலையில், தீயை உடனடியாக அணைக்க வலியுறுத்தி ராமை யன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    அப்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும், சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாக வும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மறியலில் ஈடுபட்ட வர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    3-வது நாளாக தீ அணைக்கும் பணி

    இதற்கிடையே தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று இரவு பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    எனினும், ஒரு சில பகுதிகளில் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் இன்று 3-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.

    சில இடங்களில் புகை மூட்டம் தொடர்ந்து காணப்படு வதால் பொதுமக்கள் அவதி யடைந்துள்ளனர். எனவே குப்பை கிடங்கில் தீயை முழுமையாக அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக புகை வரும் இடங்களில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளி வந்து கொட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.


     


    3-வது நாளாக தொடரும் புகைமூட்டம்.

    3-வது நாளாக தொடரும் புகைமூட்டம்.

    • தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    கரூர்

    கரூர் நடையனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 55). இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் ஏராளமான தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

    • லாரி தீயில் எரிந்து நாசம் ஆனது.
    • சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்தது

    கரூர்

    வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பத்மசேகர் (வயது50). இவர் தனக்கு சொந்தமான லாரியில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காட்பாடி நோக்கி மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தார். அந்த லாரி கரூர் மாவட்டம் புகழூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மசேகர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினார். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×