search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளில் திடீர் தீ
    X

    சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளில் திடீர் தீ

    • சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் திடீர் என்று தீப்பற்றி எரிந்தது.
    • வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் -வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் இருந்து திருக்காடுதுறை செல்லும் பிரிவு சாலை அருகே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது .அதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கழிவுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×