search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிளக்கு பூஜை"

    • கொடை விழாவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
    • திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா 2நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு மாக்காப்பு பூஜை, அலங்கார பூஜை, வில்லிசை. 2-ம் நாள் காலை அபிஷேக ஆராதனை, கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்பாளை வழிப்பட்டனர். பூஜையினை திசையன்விளை அம்பிகை தாசன் ஆர். ஜி. பாலன் வழி நடத்தினார். தொடர்ந்து விஷேச புஷ்பாஞ்சலி, தீபாராகனை நடைபெற்றது. பின்னர் கனியான் கூத்து, வில்லிசை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

    • 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
    • ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

    வல்லப விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதினார்கள். அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு பால் ,தயிர், தண்ணீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நேற்று காலையில் பாலசுப்பிரமணியனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் மஹா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரத்துடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட காவடிகளுக்கு காவடி பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை அனைவருக்கும் நீர் மோர் பாணகமும் மகா அன்னதானமும் நடைபெற்றது .விழா ஏற்பாட்டினை வல்லவ விநாயகர் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


    பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி திருவிளக்கு பூஜை செய்த போது எடுத்த படம்.

     


    • சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
    • இதை முன்னிட்டு இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவிலில் தை மாத திருவிழா  நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை மாரியம்மன் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாளை மாலை சக்தி அழைத்தல் மற்றும் அம்மனுக்கு கும்பம் போடுதல், 8-ந் தேதி கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி வண்டி வேடிக்கையும், 10-ந் தேதி மாரியம்மன் கோவில் திடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    11-ந் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சிறப்பிக்கும்படி கோவில் நிர்வாக கமிட்டியினர் கேட்டுக் கொண்டனர்.

    • நாராயணசாமி கோவில் கொடைவிழா கொடி யேற்றத்துடன் நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு கோவிலில் 101 விளக்கு பூஜை நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறில் தர்மபதி நாராயணசாமி கோவில் கொடைவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடி யேற்றத்துடன் நடைபெற்றது.அன்றுமுதல் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏடு வாசிப்பு, சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து தினமும் அன்னதானம் வழங்கினர். கோவிலில் 101 விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அய்யா வைகுண்டர் பூம்பல்லக்கில் பவனி வந்தார். வழிநெடுக பக்தர்கள் மாலை அணிவித்து வணங்கி சென்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தார்கள். சங்கரேஸ்வரி, சுப்பாராஜ் தொடங்கி வைத்தார்கள். பூஜைகளை விளக்கு பூஜை குழுவினர் பத்மாவதி தலைமையில், லட்சுமணன் சுவாமி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், சண்முகத்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய காட்சி குழுவினர் செய்தனர்.

    • காலை 9மணிக்கு கணபதி ஹோமம்,ருத்ரஹோமம்,ருத்ரஜபம் நடைபெற்றது.
    • மாலை 6 மணிக்கு 108 சுமங்கலிப்பெண்கள் நடத்திய திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் குன்றுப்பாறை-மாதேசிலிங்கம் கோவில் உள்ளது.இந்த கோவிலில் 28-ஆம் ஆண்டு ஸ்ரீ அய்யப்பன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக குன்றுப்பாறை மாதேசிலிங்கம் கோவிலில் நேற்று காலை 9மணிக்கு கணபதி ஹோமம்,ருத்ரஹோமம்,ருத்ரஜபம் நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ அய்யப்பன்,ஸ்ரீ மாதேசிலிங்க சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மாதேசிலிங்க சுவாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது . மாலை 6 மணிக்கு 108 சுமங்கலிப்பெண்கள் நடத்திய திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    • ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது
    • உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அப்பகுதியைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

    கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறாமல் இருந்தது.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 19-ந்தேதி அன்று ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் விளக்கு பூஜை நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று 18 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இந்த திருவிளக்கு பூஜையுடன் கார்த்திகை சோமவார பிரதோஷமும் சேர்ந்து வந்தது தனி சிறப்பாக பார்க்கப்பட்டது. மேலும் 18 படிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாதரனை காட்டி சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

    • மூன்றாம் நாளான நேற்று திருவிளக்கு பூஜை என மூன்று நாளும் பெண்களுக்கான நிகழ்ச்சி நடந்தது
    • விழா நாட்களில் திங்கள் நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டிருந்தது.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது.

    முதல் நாள் சுமங்கலி பூஜை, இரண்டாம் நாள் அஸ்வதி பொங்காலை, மூன்றாம் நாளான நேற்று திருவிளக்கு பூஜை என மூன்று நாளும் பெண்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தினசரி காலை கணபதி ஹோமம், உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, மதியம் உச்சபூஜை, மாலை சாயரட்சை தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    முதல் நாள் மாலை ஆயிரக்கணக்கான பெண் கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை, இரண்டாம் நாள் மதியம் திரளான பெண்கள் கலந்து கொண்ட பொங்கல் வழிபாடு, மூன்றாம் நாளான நேற்று மாலை 5.45 மணிக்கு 201 திருவிளக்கு பூஜை, 6.15 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.

    மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளிலும் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    விழா நாட்களில் திங்கள் நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டிருந்தது.

    • தேவகோட்டை அருகே நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • கடந்த 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் உள்ள நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் ஆவணி சுற்றுப் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்று வருகிறது.

    நேற்று மாலை சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் பெரியகாரை, அடசிவயல், கள்ளிக்குடி, கோட்டூர், நயினார்வயல், நாகாடி, திருமணவயல், பாவனக்கோட்டை, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வலம்புரி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
    • சிறப்பு அன்னதானம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி படேல் நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜையில்கலந்துகொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு முதலியன கோவில் நிர்வாகிகள் வழங்கினர். சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    விநாயகரை தரிசிக்கவும், பூஜைகளுக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. 

    • சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
    • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிபட்டி சிவபுரம் மூகாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கணபதிஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அமாவாசை சிறப்பு யாகபூஜைகள் சிவசித்தர் முன்னிலையில் நடைபெற்றது.தொடர்ந்து பகவதி அம்மன், மூகாம்பிரை சமேத சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் க.ராமர் செய்திருந்தார்.

    • உக்கிர மாகாளியம்மன் கோவிலில் நான்காவது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது.
    • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சி,

    திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவிலில் நான்காவது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று 1008 திருவிளக்கு பூஜை,சுமங்கலி பூஜை மற்றும் குபேர லட்சுமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிளக்கு பூஜையில் பங்கேற்பதால் வீட்டில் வறுமை கடன் நீங்க பெற்று செல்வம் பெருகும். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தென்னூர் தெய்வீக மகா சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×