search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 SANGABHISHEKAM"

    • நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது
    • விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்.செப்.17-

    வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில், எல்.கே.சி நகரில் உள்ள புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் 6 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை எல்.கே.சி நகர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நாளை திங்கட்கிழமை காலை தீர்த்தாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • நந்தி பெருமானுக்கு 16 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா சிவராத்திரி விழா தொடங்கியது.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சரவணம்பட்டி,

    கோவை கோவில்பாளையத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் மஹா சிவராத்திரி விழா நடந்தது.

    நேற்று மாலை 4.30 மணிக்கு சனி பிரதோஷ பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து நந்தி பெருமானுக்கு 16 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா சிவராத்திரி விழா தொடங்கியது.

    இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இரவு 11 மணிக்கு 2-ம் கால பூஜையும், இரவு 2 மணிக்கு 3-ம் கால பூஜை மற்றும் 108 சங்காபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை நடைபெற்று மகா சிவராத்திரி விழா நிறைவு பெற்றது. ஒவ்வொரு கால பூஜை முடிந்தவுடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    இந்த விழாவில் கோவில்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    • 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
    • ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

    வல்லப விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதினார்கள். அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு பால் ,தயிர், தண்ணீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நேற்று காலையில் பாலசுப்பிரமணியனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் மஹா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரத்துடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட காவடிகளுக்கு காவடி பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை அனைவருக்கும் நீர் மோர் பாணகமும் மகா அன்னதானமும் நடைபெற்றது .விழா ஏற்பாட்டினை வல்லவ விநாயகர் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


    பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி திருவிளக்கு பூஜை செய்த போது எடுத்த படம்.

     


    • 3 கால யாக பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கூழ்மாரியம்மன், கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடந்து முடிந்தது.

    இதை தொடர்ந்து 48 நாள் நெய் விளக்கு பூஜை செய்தனர்.

    நேற்று மண்டல பூஜை நிறைவு விழா, மற்றும் 108 சங்காபிஷேக விழா நடந்தது. இஞ்சிமேடு சிவன் கோயில் அர்ச்சகர் ஆனந்தன், குழுவினர்கா லையில் கூழ் மாரியம்மன், சிவன், முருகர், நவகிரக, சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் மற்றும் 108 சங்குகளை வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து 3 காலயாக பூஜைகள் செய்தனர்.

    பின்னர் பம்பை உடுக்கை மேளதாளத்துடன் 108 சங்குகள் மற்றும் புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து புனித நீரை கூழ் மாரியம்மன், சிவன், முருகர், நவகிரக, சன்னதியில் மீது ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகர், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.

    • வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமம் கோவிலில் நடைபெற்றது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையுடன் மண்டல பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமம் கோவிலில் நடைபெற்றது.

    தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், மாலையில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    ×