என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
வெள்ளகோவில் விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
- நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது
- விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்.செப்.17-
வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
வெள்ளகோவில், எல்.கே.சி நகரில் உள்ள புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் 6 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை எல்.கே.சி நகர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நாளை திங்கட்கிழமை காலை தீர்த்தாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story






