search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் தொகுதி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களாட்சி, ஜனநாயகம் என்பது வார்த்தையாக மட்டுமே உள்ளது.
    • தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    ஒரேநாடு, ஒரே தேர்தல், ஒரே கல்விக்கொள்கை, ஒரே ரேஷன் கார்டு என்பது இன்றைய நாட்டின் நிலையாக உள்ளது. இந்திய இறையாண்மை, நாட்டுப்பற்று என்று பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் பேசுவார்கள். ஆனால் கர்நாடகா என்று வந்துவிட்டால் கர்நாடக மக்களின் நலனை பற்றியே பேசுவார்கள்.

    ஆனால் இங்குள்ள திராவிட கட்சிகள், பாராளுமன்ற தேர்தலில் இந்திய நலனை பற்றி பேசுவார்கள். இந்தியாவை காப்பாற்ற வாருங்கள் என்பார்கள். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்பார்கள். இவர்களுடன் கூட்டணி வைத்தவர்கள் தான் பறித்தார்கள். தமிழ்சமூக மக்கள் இந்த நாடகத்தை அறிய வேண்டும். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

    மக்களாட்சி, ஜனநாயகம் என்பது வார்த்தையாக மட்டுமே உள்ளது. 10 ஆண்டு ஆட்சி நடத்திய பா.ஜனதா சாதனையை சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மகளிருக்கு ரூ.1,000 கொடுத்ததை தவிர வேறு எதையும் சொல்லி தி.மு.க. ஓட்டுக்கேட்க முடிகிறதா. சாதி, மதம், கடவுளை வைத்து பேசியவர்களை இந்த மக்கள் துரத்தியடிக்கும் காலம் வரும். மக்களுக்கு நீரும், சோறும் கொடுக்க எந்த ஒரு திட்டமும் இவர்களிடம் இல்லை.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்து தான் ஊழல், லஞ்சத்துக்கான விதை ஊன்றப்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் போட்டியிட 10 ஆண்டுகளுக்கு தடை விதித்தால் இவர்கள் பணம் கொடுப்பார்களா?. மாற்று அரசியலுக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
    • கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அருணாச்சலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் அமைந்துள்ள அம்மா திடலில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திடலில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    • வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது.
    • திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற சக்கர வியூகம் வகுத்து வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் கும்பிட்ட கரங்களுடன் பிரசார வேனில் செல்கிறார். அவரது பேச்சு, அவருக்கென அமைந்த தனி பாணி தொடர்கிறது. பிரசார பயணம் காலையில் தொடங்கினாலும் மதிய வெயிலுக்கு ஏதாவது ஓரிடத்தில் முகாமிடுகின்றனர்.

    வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது. மத்தியில் அமையும் புதிய அரசின் மூலம் திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்யபாடுபடுவேன் என்றவாறு ஓட்டு சேகரிக்கிறார்.

    திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர். கட்சி நிர்வாகிகளிடம் கோஷ்டி பாகுபாடு பாராமல் அனைவருடன் சென்று வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார். அமைதியான முகத்துடன் கரம் குவித்தபடி செல்கிறார்.

    ஆரத்தி தட்டுடன் பெண்கள் நின்றால் மூத்த பெண்களின் காலில் விழுந்து வணங்குகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை வேட்பாளர்கள் இல்லாமலேயே 4 அடுக்கு தேர்தல் பணி நடக்கிறது. 4 கட்ட பொறுப்பாளர் களத்தில் இறங்கியுள்ளனர். இருப்பினும் பூத் கமிட்டி மற்றும் பொறுப்பாளர்கள்தான் 40 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற வகையில் தனித்தனியே சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    பா.ஜ.க., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மற்ற கட்சிகளை காட்டிலும் வித்தியாசமாக மக்களை சந்திப்பது, வாக்காளர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. தினமும் கட்சியினர் காலையிலேயே புறப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் முன்பாகவே சென்று பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஏற்கனவே சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனுபவத்தில் உற்சாகத்துடன் பிரசாரம் செய்து வருகிறார். இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வம் , அரசியலில் மாற்றம் என்ற மாற்று சிந்தனையுடன் புதிய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் பலர் உள்ளனர். அவர்களது ஓட்டுகளை அறுவடை செய்ய வியூகம் வகுத்து செயல்படுகிறார்.

    ×