search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கைகள்"

    • மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பரங்கிமலை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.இதில் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். படித்த மற்றும் தொழில் திறன் உள்ள திருநங்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக வேலை கிடைக்க ரெயில்வே போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    • 15 ஆடுகளை வளர்த்து வருகிறேன்.
    • 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டுக்குட்டியுடன் வந்து சூலூரை சேர்ந்த திருநங்கைகள் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் சூலூர் மயிலம்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஒரு பொது இடத்தில் கொட்டகை அமைத்து 15 ஆடுகளை வளர்த்து வருகிறேன்.

    ஆனால் பஞ்சாயத்தில் கேட்டுவிட்டுதான் ஆடு வளர்க்க வேண்டும் என்று கூறி எனது கொட்டகையை அப்புறப்படுத்திவிட்டனர். நாங்கள் சொந்தத் தொழில் செய்து வருகிறோம். அதற்கும் அனுமதி கொடுக்காமல் என்னை அழைக்கழிக்கிறார்கள்.எங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று தொடங்கிய 10-வது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான விளையாட்டு தொடரில் 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். #GayGames #LGBTQ
    பாரீஸ்:

    தன்பால் ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு உண்டாக வேண்டும், அவர்கள் மீதான உளவியல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், 10-வது தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் (GayGames) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். சவுதி, ரஷியா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளனர்.



    நேற்று நடந்த தொடக்க விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல நாடுகள் தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ள நிலையில், அனைத்து நாடுகளும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் நடத்தப்பட்டது.
    திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #transgenders
    திருவனந்தபுரம் :

    மனம் புண்படக் கூடிய சொற்களால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள். இன்று ஒருவித பரிணாம வளர்ச்சிப் பெற்று திருநங்கையர் என மதிக்கப்படுவதுடன், மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறார்கள். 

    இந்தநிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து பினராயி விஜயனின் அலுவலக பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இத்தகைய அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.  மேலும் பல்வேறு துறையிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதன்மை மாநிலமாக கேரள இடதுசாரி அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ×