search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓரினச்சேர்க்கையாளர்கள்"

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று தொடங்கிய 10-வது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான விளையாட்டு தொடரில் 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். #GayGames #LGBTQ
    பாரீஸ்:

    தன்பால் ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு உண்டாக வேண்டும், அவர்கள் மீதான உளவியல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், 10-வது தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் (GayGames) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். சவுதி, ரஷியா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளனர்.



    நேற்று நடந்த தொடக்க விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல நாடுகள் தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ள நிலையில், அனைத்து நாடுகளும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் நடத்தப்பட்டது.
    அரசியலமைப்பு சட்டத்தின் 377 பிரிவுக்கு எதிராக முன்னாள் ஐஐடி மாணவர்கள் 20 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. #Article377
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 377 பிரிவு ஓரினச்சேர்க்கையை குற்றம் என கருதுகிறது. இயற்கைக்கு மாறான உறவு என அதில் ஓரினச்சேர்க்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கல் தாக்கல் செய்யப்படுள்ளன. இந்த மனுக்கள் அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், ஐஐடி மாணவர்கள் அமைப்பில் உள்ள 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் 377-க்கு எதிராக புதிய மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, மத்திய அரசு இது தொடர்பாக பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
    ×