search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    377 பிரிவுக்கு எதிராக முன்னாள் ஐஐடி மாணவர்கள் மனு - விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
    X

    377 பிரிவுக்கு எதிராக முன்னாள் ஐஐடி மாணவர்கள் மனு - விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

    அரசியலமைப்பு சட்டத்தின் 377 பிரிவுக்கு எதிராக முன்னாள் ஐஐடி மாணவர்கள் 20 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. #Article377
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 377 பிரிவு ஓரினச்சேர்க்கையை குற்றம் என கருதுகிறது. இயற்கைக்கு மாறான உறவு என அதில் ஓரினச்சேர்க்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கல் தாக்கல் செய்யப்படுள்ளன. இந்த மனுக்கள் அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், ஐஐடி மாணவர்கள் அமைப்பில் உள்ள 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் 377-க்கு எதிராக புதிய மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, மத்திய அரசு இது தொடர்பாக பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
    Next Story
    ×