search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாலுகா அலுவலகம்"

    • கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பல்லடம் தாசில்தார் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் கூறியதாவது: -

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பேலட் யூனிட் 3,280, கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. இவைகளில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியாக பிரிக்கப்பட்டு வருகின்றன. பழுது பார்த்து அவைகளை சரிசெய்ய பெங்களூர் பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.மற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 2000 ம் ஆண்டு வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். இவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நல்லமுத்து உயிரிழந்த நிலையில் ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் இருந்து வருகிறார். கடந்த 2000 ம் ஆண்டு அவர்கள் வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்து வந்த வீடு மழையால் சிதிலமடைந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய வீடு கட்டும் பணிகளை துவங்கியுள்ளனர். அதற்கு அருகில் வசிப்பவர்கள் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக வருவாய் துறையினருக்கு புகார் அளித்த நிலையில் வீடு கட்டும் பணிக்கு தடை விதித்து வருவாய் துறை நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ராஜம்மாளின் மகன் சக்திவேல் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களது இடத்தை முறையாக அளவீடு செய்து தருமாறு மனு கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் பல்லடம் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில், நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது ராஜம்மாள் குடும்பத்தினருக்கும் அருகே வசிப்பவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் காயமடைந்த இரண்டு தரப்பினரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
    • கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்து தங்களது நீண்டநாள் கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.

    நெல்லை தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பட்டா மாறுதல், பயிர்க்கடன் பெறுதல், பல்வேறு சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். அப்போது முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை 7 பேருக்கு கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மேலும் ஓய்வூதிய ஆணைகளையும் வழங்கினார். இன்றைய நிழ்ச்சியில் மதவக்குறிச்சி, நாரணம்மாள்புரம் குறுவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனு பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (சர்வே) வாசுதேவன், தேர்தல் தாசில்தார் கந்தப்பன், கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×