என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள்- கலெக்டர் மனுக்கள் பெற்றார்
- ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
- கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்து தங்களது நீண்டநாள் கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.
நெல்லை தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பட்டா மாறுதல், பயிர்க்கடன் பெறுதல், பல்வேறு சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். அப்போது முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை 7 பேருக்கு கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.
மேலும் ஓய்வூதிய ஆணைகளையும் வழங்கினார். இன்றைய நிழ்ச்சியில் மதவக்குறிச்சி, நாரணம்மாள்புரம் குறுவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனு பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (சர்வே) வாசுதேவன், தேர்தல் தாசில்தார் கந்தப்பன், கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்