search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரைப்பாலம்"

    • வைகை ஆற்று தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    மதுரை

    மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய இடங்களில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை நகரில் முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலமாக மதுரை ஏ.வி. பாலம் உள்ளது. இந்த பாலத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதி வேகமாக செல்லக்கூடிய மோட்டர் சைக்கிள்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே இந்த பாலத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    சைக்கிள்கள், டிரை சைக்கிள் உள்ளிட்டவை ஏ‌.வி. பாலம் அருகே உள்ள புது பாலத்தின் கீழ் உள்ள வைகையாற்று தரைப்பாலம் வழியாக அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை தரைப்பா லத்தில் போக்கு வரத்துக்கு திடீரென தடை விதித்து அங்கு கான்கிரீட் தடுப்புகளை அமைத்தது. இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    இதன் காரணமாக சுமை ஏற்றி செல்லும் டிரை சைக்கிள் தொழிலாளர்கள் எம்.ஜி.ஆர்‌ பாலத்தை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வரும் டிரை சைக்கிள் நேரடியாக ஏ.வி‌ பாலம் வழியாக செல்கிறது. இதனால் அந்த பாலத்தில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்‌ சில நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    அதிக பாரத்துடன் டிரை சைக்கிள் தொழிலாளர்கள் பாலத்தை கடப்பது பெரும் சவாலாக உள்ளது. வைகை ஆற்று தரைப் பாலத்தை அடைத்துள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டம் குறைந்து சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் ரவுடிகள் அங்கு குவிந்து மது குடிப்பதும், பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு திட்டமிடும் இடமாகவும் வைகை ஆற்று தரைப்பாலம் மாறி வருகிறது.

    இந்த தரை பாலத்தை கான்கிரீட் தடுப்புச் சுவர் வைத்து அடைத்துள்ளதால் போலீசாரும் அந்த பகுதியில் ரோந்து செல்ல முடியவில்லை.

    நகரின் எந்தவித நெரிசலுமின்றி வாகனங்கள் சென்று வந்த வைகை ஆற்றை தரைப் பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் நேரடி நடவடிக்கை எடுத்து அந்த பாலத்தை போக்குவரத்துக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும் உடனே அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • கோவையில் நேற்று நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
    • தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    கோவை

    கோவையில் நேற்று நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழைக்கு கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர்- சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படு இருப்பதால் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

    2 முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் 3-வது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இத னால் வாகன‌ ஓட்டிகள் 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்ப டுவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்ப டுவதும், மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்ப டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.

    • பெண்ணாடம் அருகே தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது.
    • பாலம் 90 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு நிதி பற்றாக்குறை காரணமாக இணைப்பு சாலை அமைக்காமல் பணி நிறுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்திர சோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. இந்த வெள்ளாற்றில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து வரும் ஆனாவாரி ஓடை, உப்பு ஓடை ஆகிய இரண்டு ஓடை தண்ணீரும் வெள்ளாற்றில் கலந்து அதன் மூலமாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு பொழியும் மழையால் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால் வயல்வெளி பகுதியில் உள்ள மழைநீர் வெள்ளம் ஏற்பட்டு சவுந்திர சோழபுரம்-கோட்டைகாடு கிராமத்தின் இடையே வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக போடப்பட்ட தரைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் சவுந்தர சோழபுரம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, தெத்தேரி, முதுகுளம், உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி வரும் நிலைஏற்பட்டுள்ளது.

    அடிப்படை தேவைக்கா கவும், விவசாய தேவைக்காகவும் இந்த தரைபாலத்தின் வழியாக சென்றுவந்த நிலையில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் கோட்டைக்காடு சௌந்தர சோழபுரம் இடையே 2013 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டு 11 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேல்மட்டபாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது. பாலம் 90 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு நிதி பற்றாக்குறை காரணமாக இணைப்பு சாலை அமைக்காமல் பணி நிறுத்தப்பட்டது. இந்த மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 7 ஆண்டுகளாக நடைபெறும் தரைப்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் 6 முறை தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் அடிப்படைத் தேவைக்காக கடலூர் மாவட்டத்திற்கு வருவதற்கும் விவசாய தேவைக்காக தரைப் பாலத்தை கடந்து செல்வதுமாக இருந்து வந்த நிலையில் தற்போது 15 கிலோமீட்டர் சுற்றி வருவது தொடர் கதையாக உள்ளது.

    • கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும்.
    • கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும்.

    கடலூர்:

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும். இந்த தண்ணீர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், பண்ருட்டி வழியாக கடலூர் ஆல்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை நம்பி ஏராளமான ஏரி குளங்கள் உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் சாத்தனூர், கிருஷ்ணகிரி அணை நிரம்பி வழிந்தது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் 1.20 லட்சம் கனஅடி நீர் வந்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆற்றின் கழிமுக பகுதியான கடலூர் நகரம் ஆற்று வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. நாணமேடு, உச்சிமேடு, கண்கடகாடு, தாழங்குடா பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளம் வடிந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர்.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கிருஷ்ணகிரி அணை நிரம்பியது. எனவே உபரி நீர் அணைத்தும் சாத்தனூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிபாய்ந்து நேற்று பன்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பகுதி வந்து சேர்ந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது. எனவே ஆற்றங்கரை பகுதியில் உள்ள கரைகள் அணைத்தும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தரைப்பாலம் பகுதியில் கற்கள் கொட்டப்பட்டு கரைகள் சீரமைக்கும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட வருவாய்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

    கோவை 

    கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது‌. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி அணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இந்நிலையில் வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் இருந்த தரைமட்ட பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இதனால் போக்குவரத்து தடைபட்டு வந்தது. இதையடுத்து இந்த சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

    இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.மாற்றுப் பாதையான ஓண்டிபுதூர்- பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    • தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
    • மழை வெள்ள காலங்களில் வெள்ள நீர் வாய்க்கால் வழியாக சென்று மேற்கண்ட 250 ஏக்கர் விளைநிலங்களை பாதிக்கும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாக தோட்டக்குடி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது.

    சில ஆண்டுக்கு முன்னர் தரைப்பாலத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. முடிகொண்டான் ஆற்றில் காவிரி பாசன நீர் வந்து சேர்ந்துள்ளது. இந்த பாசன நீர் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளைநிலங்களில் உட்புகாமல் இருக்க இந்த வாய்க்காலில் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

    புதிய பாலம் அமைக்கும் பணிக்காக தடுப்பணை இடிக்கப்பட்டது. மீண்டும் தடுப்பணை அமைக்காமல் வெறும் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ள காலங்களில் வெள்ள நீர் வாய்க்கால் வழியாக சென்று மேற்கண்ட 250 ஏக்கர் விளைநிலங்களை பாதிக்கும் அபாய நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அதிகாரிகள் இந்த வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கும் வரைப்படம் மட்டுமே உள்ளது எனவும், தடுப்பணை அமைக்க வரைபடம் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகளிடம் கூறியதாக தெரிவிக்கின்ற னர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தோட்டக்குடி வாய்க்காலில் தடுப்பணை அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×