search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் ஓட்டு"

    • வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
    • ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 12,760 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட 30,822 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

    ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று, தபால் ஓட்டு பதிவு செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவம் 12டி வழங்குகின்றனர்.

    இதுதொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்காளருக்கு விருப்ப படிவம் வழங்குவது குறித்த கூட்டம், சப்- கலெக்டர் சவுமியா தலைமையில் நடைபெற்றது. இதில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டது.

    • வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.
    • தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த முறை ஏற்கனவே பல பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    இதில் 12-டி படிவம் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.


    மத்திய பிரதேசம், மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல்களில் இந்த வசதி அளிக்கப்பட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்திருந்தனர். அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் நாளுக்கு முன்பாக வீட்டில் இருந்தே வாக்களிக்கும் நாளை நிர்ணயிப்பார். வாக்கார்களின் வீட்டுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும். அதில் அவர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.

    அதன்பின் அந்த தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.

    தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோகிராபர் மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாக்குப் பெட்டி மற்றும் தனி உரிமைக்கான வசதியுடன் வாக்காளர் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு வாக்குப்பதிவு வீடியோ எடுக்கப்படும். இது சுமார் 20 நிமிடங்களில் முடிந்து விடும். அவர்கள் வாக்குகள் தபால் வாக்கு மூலம் எண்ணப்படும்.

    • கடந்த தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 98 சதவீத வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களிலேயே வாக்களித்திருந்தனர்.
    • தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    சட்டமன்ற தேர்தலின்போது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

    இந்த நடைமுறை மூலம் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பை 85 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 98 சதவீத வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களிலேயே வாக்களித்திருந்தனர்.

    தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த காலங்களில் 2-3% பேர் மட்டுமே தபால் ஓட்டு அளிக்கும் வசதியை பயன்படுத்தி இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய விளக்கம் அளித்துள்ளது.

    தேர்தல் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    • தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் 12 டி இன்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒரு முறை செல்லும்போது சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால் 2-வது முறையாகயும் நேரில் சென்று வழங்குவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த தேர்தலுக்கு 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்பு மீண்டும் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் ஓட்டப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். தொடர்ந்து அவை அழிக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்.

    இதே போல் தேர்தல் பணியில் ஈரோடு கிழக்கு தொகுதியை தவிர்த்து கோபி, பவானி, பெருந்துறை தொகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் தேர்தல் தொடர்பாக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதே போல் ஓட்டுச்சாவடிகள் தேர்வு அங்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி பொறியியல் கல்லூரியிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தலில் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகல் வழங்க வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழை வழங்க வேண்டும்.

    தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் 12 டி இன்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒரு முறை செல்லும்போது சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால் 2-வது முறையாகயும் நேரில் சென்று வழங்குவார்கள். 31-ந் தேதிக்குள் இந்த படிவம் வழங்குவார்கள்.

    போதிய விவரங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை 31-ந் தேதி முதல் 4-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்வார்கள்.

    இந்த படிவங்களை பெற சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் செல்லும்போது அவர் அங்கு இல்லை என்றால் 5 நாட்களுக்குள் இருமுறை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர்கள் வீட்டுக்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்று வருவார்கள்.

    ×